Skip to main content

Deepfake videos: ``48 மணி நேரத்தில் நீரிழிவை குணப்படுத்தலாம்" வைரலான மருத்துவரின் வீடியோ!

`48 மணி நேரத்திற்குள் நீரிழிவு நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்து உள்ளது' என்று மூத்த நீரிழிவு மருத்துவர் வி மோகன் உத்தரவாதம் அளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி பலரின் கண்டனங்களைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டது என மருத்துவர் குற்றம் சாட்டியிருக்கிறார். 

திருநெல்வேலி இந்திய மருத்துவ சங்கத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், அம்மருத்துவர் ஹிந்தியில் பேசுகிறார். அந்த மருந்து விளம்பரத்தில், மருத்துவர் மோகனின் உண்மையான காணொளியையும் அவரது குரலில் மாற்றப்பட்ட பதிப்பையும் இணைத்துள்ளனர். வல்லுநர்கள் ஏஐ உடன் இணைத்து இந்த வீடியோ (Deepfake videos) உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து மோகன் நவம்பர் 2023-ல் தமிழ்நாடு காவல்துறை சைபர் செக்யூரிட்டி பிரிவில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த வீடியோவை நீக்கினர். ஆனால், மீண்டும் அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவத்தொடங்கி இருக்கிறது என்கிறார் மருத்துவர். 

Doctor (Representational Image)

மருத்துவர் மோகன் இது குறித்து கூறுகையில், ``குரல் என்னைப் போலவே ஒலிக்கிறது; ஆனால், உதடு ஒத்திசைவு மோசமாக உள்ளது. இது போலியானது என்று நான் ஒரு செய்தியைப் பதிவிட்டேன். ஆனால், நான் மருத்துவம் பார்க்கும் நோயாளிகள் உட்பட எனக்குத் தெரிந்த பலர் அவர்களுக்கு மருந்தைப் பரிந்துரைக்க முடியுமா என்று என்னிடம் கேட்டனர்.

நீரிழிவு நோயிலிருந்து குணமடைவது சாத்தியம். ஆனால், அது மருந்துகள், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மூலம் மட்டுமே சாத்தியமாகுமே தவிர, வேறு எந்த மந்திர நிவாரணமும் சாத்தியமில்லை’’ என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற போலி வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவ சங்கங்கள் கூறுகின்றன. சில சந்தர்ப்பங்களில், வீடியோக்களில் வருவது உண்மையான மருத்துவர்கள் இல்லை என்றும் கூறியுள்ளனர். 

``வெள்ளை நிற கோட் அணிந்தவர்கள் பெரும்பாலும் AI-ஆல் உருவாக்கப்பட்ட பாட்கள் (Bot). `சர்க்கரை மிட்டாய் மற்றும் பெருஞ்சீரகம் கலந்த பாலுடன் கூடிய பாதாம், மூளை நோய்களை குணப்படுத்தும்'… `தாவர செல்களில் இருந்து உருவாக்கப்படும் மாயாஜால மாத்திரைகள் எடை இழப்பைத் தூண்டும்'… போன்ற போலி வீடியோக்கள் வலம் வருகின்றன.

அச்சுறுத்தும் AI (Deepfake videos)

இந்தப் போலி வீடியோக்களை உருவாக்குவது எளிதானது. இப்போது இலவசமாக ஸ்மார்ட்போன் ஆப்களில் கூட அவற்றை எளிதாக உருவாக்குவதற்கான கருவிகள் உள்ளன. ஆனால், இதுபோன்ற போலிச் செய்திகள் ஆபத்தை விளைவிக்கும். சம்பவம் குறித்து உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும்படி நாங்கள் அரசுக்குக் கடிதம் எழுதுவோம்.

இது குறித்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது என்று நாங்கள் உணர்கிறோம்’’ என்று ஐஎம்ஏ தமிழ்நாட்டின் தலைவர் டாக்டர் கே எம் அப்துல் ஹசன் கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...