Skip to main content

மது அருந்தினால் குளிர் விலகுமா? மருத்துவ விளக்கம்..!

குளிர்காலத்தில் அதிகமாக குளிராமல் இருக்க மது அருந்துவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். மது அருந்துவது குளிரைத் தவிர்த்து கதகதப்பைத் தருவதாகவும் நினைத்துக் கொள்வர். திரைப்படங்கள், டிவி, சோஷியல் மீடியா எனப் பலவற்றில் இதே கருத்துகளைப் பலர் தெரிவிப்பதைப் பார்த்திருப்போம்.

மது அருந்துவது உடலை வெப்பமாக வைத்திருக்குமா?

மது அருந்துவது உடலை வெப்பமாக வைத்திருக்குமா என சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் பாபுவிடம் கேட்டோம்.

”பொதுவாக குளிர்காலத்தில் உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் சற்று சுருங்கும். இவ்வாறு சுருங்குவதன் மூலம் வெளிப்புறத்தின் குளிர் உடலை பாதிக்காத வகையில் அதுவே பாதுகாக்கும்.

மது அருந்தும்போது உடலில் இரண்டு வகை மாற்றங்கள் ஏற்படும். ஒன்று மனது சம்பந்தப்பட்டது. அதாவது மது அருந்துவது சிலருக்கு ரிலாக்ஸான மனநிலையை உருவாக்கும். இதற்கு உடலிலுள்ள வெவ்வேறு சுரப்பிகளே காரணம். இரண்டாவது ரத்தக்குழாய்கள் சுருங்காமல் தடுத்து அவற்றைத் தளர்வாக்கும். உடல் குளிர்ந்து இருக்கும் சமயத்தில் ரத்தக்குழாய்கள் சுருங்க வேண்டியது அவசியம்.

உடல் குளிர்ந்து இருக்கும் சமயத்தில் ரத்தக்குழாய்கள் சுருங்க வேண்டியது அவசியம்.

மது அருந்தும்போது சிறிது நேரம் உடல் வெப்பமாக இருப்பது போன்ற மாயையை உருவாக்கும். உண்மையில் ரத்தக்குழாய்கள் விரிவடைவதால் உடலில் இருந்து அதிக வெப்பம் வேகமாக வெளியேறத் தொடங்கும். இது உடலின் வெப்பநிலையை மேலும் குறைத்து உடலுக்குத் தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளது.

இதுதவிர, சிலர் மதுபோதை அதிகமாகி தன்னிலை மறந்து ஆடைகளை அகற்றிவிடவும், சுயநினைவு இழந்து மயங்கி விழவும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற செயல்கள் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம். குளிர்காலத்தில் மது அருந்துவது என்பது உடலுக்கு கூடுதல் தீங்கையே விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொது மருத்துவர் பாபு

பியர், ஒயின் போன்ற குறைந்த சதவிகிதத்தில் ஆல்கஹால் சேர்க்கப்படும் மதுவகைகளால் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. மது வகைகளை இரண்டாகப் பிரிக்கலாம். நொதிக்க வைத்து (Fermented) தயாரிப்பது. பார்லி, பழ வகைகள் போன்றவற்றைப் புளிக்கவைத்துத் தயாரிக்கப்படுவது. பியர்,ஒயின் போன்றவை இந்த வகையைச் சார்ந்தவை. இவற்றில் ஆல்கஹாலின் அளவு குறைவாக இருக்கும்.

இரண்டாவதாக, 'டிஸ்டிலேஷன்' (Distillation) முறையைப் பயன்படுத்தி மதுவில் உள்ள ஆல்கஹால் அளவு மேலும் அதிகரிக்கப்படும். அப்படி உருவாகும் மதுவகைகள் தான் ரம், விஸ்கி, வோட்கா போன்றவை. பியர், ஒயின் போன்றவற்றில் ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும் அவை மது வகைகள் என்பதில் மாற்றமில்லை. எனவே, அவற்றால் உடலுக்குத் தீங்கு இல்லை எனச் சொல்லி விட முடியாது.

பியர், ஒயின் போன்றவற்றில் ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும் அவை மது வகைகள் என்பதில் மாற்றமில்லை.

குறைந்த அளவு ஆல்கஹால் இருக்கும் மதுவகைகளை அதிக அளவில் அருந்த வாய்ப்புள்ளது. விஸ்கி, ரம் போன்ற வகைகளை ஒன்றிரண்டு கிளாஸ் கணக்கில் அருந்தினால் பியரை பாட்டில் கணக்கில் குடிக்க வாய்ப்புள்ளது‌. ஆல்கஹால் குறைவாக இருந்தாலும் அருந்தும் அளவு மிக அதிகமாக இருப்பதால் உடல்நலத்தை பாதிக்கவே செய்யும்” எனக் கூறினார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...