Skip to main content

மது அருந்தினால் குளிர் விலகுமா? மருத்துவ விளக்கம்..!

குளிர்காலத்தில் அதிகமாக குளிராமல் இருக்க மது அருந்துவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். மது அருந்துவது குளிரைத் தவிர்த்து கதகதப்பைத் தருவதாகவும் நினைத்துக் கொள்வர். திரைப்படங்கள், டிவி, சோஷியல் மீடியா எனப் பலவற்றில் இதே கருத்துகளைப் பலர் தெரிவிப்பதைப் பார்த்திருப்போம்.

மது அருந்துவது உடலை வெப்பமாக வைத்திருக்குமா?

மது அருந்துவது உடலை வெப்பமாக வைத்திருக்குமா என சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் பாபுவிடம் கேட்டோம்.

”பொதுவாக குளிர்காலத்தில் உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் சற்று சுருங்கும். இவ்வாறு சுருங்குவதன் மூலம் வெளிப்புறத்தின் குளிர் உடலை பாதிக்காத வகையில் அதுவே பாதுகாக்கும்.

மது அருந்தும்போது உடலில் இரண்டு வகை மாற்றங்கள் ஏற்படும். ஒன்று மனது சம்பந்தப்பட்டது. அதாவது மது அருந்துவது சிலருக்கு ரிலாக்ஸான மனநிலையை உருவாக்கும். இதற்கு உடலிலுள்ள வெவ்வேறு சுரப்பிகளே காரணம். இரண்டாவது ரத்தக்குழாய்கள் சுருங்காமல் தடுத்து அவற்றைத் தளர்வாக்கும். உடல் குளிர்ந்து இருக்கும் சமயத்தில் ரத்தக்குழாய்கள் சுருங்க வேண்டியது அவசியம்.

உடல் குளிர்ந்து இருக்கும் சமயத்தில் ரத்தக்குழாய்கள் சுருங்க வேண்டியது அவசியம்.

மது அருந்தும்போது சிறிது நேரம் உடல் வெப்பமாக இருப்பது போன்ற மாயையை உருவாக்கும். உண்மையில் ரத்தக்குழாய்கள் விரிவடைவதால் உடலில் இருந்து அதிக வெப்பம் வேகமாக வெளியேறத் தொடங்கும். இது உடலின் வெப்பநிலையை மேலும் குறைத்து உடலுக்குத் தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளது.

இதுதவிர, சிலர் மதுபோதை அதிகமாகி தன்னிலை மறந்து ஆடைகளை அகற்றிவிடவும், சுயநினைவு இழந்து மயங்கி விழவும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற செயல்கள் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம். குளிர்காலத்தில் மது அருந்துவது என்பது உடலுக்கு கூடுதல் தீங்கையே விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொது மருத்துவர் பாபு

பியர், ஒயின் போன்ற குறைந்த சதவிகிதத்தில் ஆல்கஹால் சேர்க்கப்படும் மதுவகைகளால் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. மது வகைகளை இரண்டாகப் பிரிக்கலாம். நொதிக்க வைத்து (Fermented) தயாரிப்பது. பார்லி, பழ வகைகள் போன்றவற்றைப் புளிக்கவைத்துத் தயாரிக்கப்படுவது. பியர்,ஒயின் போன்றவை இந்த வகையைச் சார்ந்தவை. இவற்றில் ஆல்கஹாலின் அளவு குறைவாக இருக்கும்.

இரண்டாவதாக, 'டிஸ்டிலேஷன்' (Distillation) முறையைப் பயன்படுத்தி மதுவில் உள்ள ஆல்கஹால் அளவு மேலும் அதிகரிக்கப்படும். அப்படி உருவாகும் மதுவகைகள் தான் ரம், விஸ்கி, வோட்கா போன்றவை. பியர், ஒயின் போன்றவற்றில் ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும் அவை மது வகைகள் என்பதில் மாற்றமில்லை. எனவே, அவற்றால் உடலுக்குத் தீங்கு இல்லை எனச் சொல்லி விட முடியாது.

பியர், ஒயின் போன்றவற்றில் ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும் அவை மது வகைகள் என்பதில் மாற்றமில்லை.

குறைந்த அளவு ஆல்கஹால் இருக்கும் மதுவகைகளை அதிக அளவில் அருந்த வாய்ப்புள்ளது. விஸ்கி, ரம் போன்ற வகைகளை ஒன்றிரண்டு கிளாஸ் கணக்கில் அருந்தினால் பியரை பாட்டில் கணக்கில் குடிக்க வாய்ப்புள்ளது‌. ஆல்கஹால் குறைவாக இருந்தாலும் அருந்தும் அளவு மிக அதிகமாக இருப்பதால் உடல்நலத்தை பாதிக்கவே செய்யும்” எனக் கூறினார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...