Skip to main content

Doctor Vikatan: நாம் சரியாக சுவாசிக்கிறோமோ என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா?

Doctor Vikatan:  பலவிதமான மூச்சுப் பயிற்சிகள் பற்றி நிறைய  சொல்கிறார்கள். நாம் அறியாமலேயே எப்போதும் நடைபெற்று வரும் இந்தச் செயலை நம் கவனம் இல்லாமலேயே நெறிப்படுத்த முடியுமா? நாம் சரியாகத்தான் சுவாசிக்கிறோமா என்பதை எப்படிக் கண்டறிவது?

-meenakshi mohan, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா

இயற்கை மருத்துவர் யோ. தீபா

ஓர் உயிர் பிறக்கும்போது அழுகை மூலமாக சுவாசிக்க ஆரம்பிக்கிறது. அதே சுவாசம் நிற்கும்போதுதான் உயிர் பிரிவதாகச் சொல்கிறோம். இடைப்பட்ட நேரத்திலும் நம் சுவாசத்தை நாம் கவனிப்பதே இல்லை. நம்முடைய சுவாசத்துக்கும் நம் உணர்வுகளுக்கும் நிறைய தொடர்பு உண்டு. நம் மனநிலையைப் பொறுத்து சுவாசமும் மாறும் என்பதற்கான ஆய்வுகள் நிறைய உள்ளன. 

உதாரணத்துக்கு, நாம் கோபப்படும்போது  வேகமாக மூச்சு விடுவதையும், ரிலாக்ஸ்டாக இருக்கும்போது நிதானமாக, ஆழ்ந்து மூச்சு விடுவதையும் கவனிக்கலாம். அதுவே எதையாவது பார்த்து பயப்படும்போது சுவாசத்தை இறுக்கி, சில நொடிகளுக்கு மூச்சை அப்படியே இழுத்துப் பிடித்துக் கொள்வோம்.

திடீரென ஒரு பாம்பை பார்க்கிறோம் என வைத்துக்கொள்வோம். பயத்தில் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்வோம்.  அதுவே பாம்பு போனதும் நம் மூச்சு இயல்பாக மாறிவிடும். ஆனால், நாம் அந்தப் பாம்பை பற்றியே பலமணி நேரத்துக்கு, பல நாள்களுக்கு யோசித்துக்கொண்டிருப்போம்.  இப்படி ஒவ்வோர் உணர்வுக்கும் மூச்சுவிடும் தன்மை மாறுபடும். இப்படி மாறும்போது, சுவாசத்தால் நம் செல்களுக்கு போக வேண்டிய ஆக்ஸிஜனை குறைத்துவிடும்.

பதற்றம்

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. எந்த விஷயத்தையும் உடனுக்குடன் சமாளித்து, கடந்து செல்லாமல், அதையே மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறோம். அந்த இறுக்கம் அப்படியே தொடர்கிறது. மன அழுத்தம் இருக்கும் நேரத்தில் நம் உடலில் கார்ட்டிசால் என்கிற ஹார்மோன்  சுரக்கும்.

அது நம் தசைகளை இறுக்கமாக்கி, ரத்த நாளங்கள் சுருங்கி, ஆக்ஸிஜன் அளவு குறைந்து, நம் சுவாசமே மாறுபடுகிறது.

மூச்சை உள்ளிழுக்கும்போது நம் வயிற்றுப்பகுதி வெளியே வர வேண்டும். மூச்சை விடும்போது வயிற்றுப்பகுதி உள்ளே போக வேண்டும். இதுதான் நாம் சரியாக மூச்சுவிடுகிறோம் என்பதற்கான இலக்கணம். கண்களை மூடி சுவாசத்தை கவனித்தால், நாம் சரியாகத்தான் மூச்சு விடுகிறோமா என்று உணர முடியும். தவறாக மூச்சு விடுகிறோம் என்றாலே மன அழுத்தத்தில் இருக்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ளலாம். இதை முறையான பயிற்சிகளின் மூலம்தான் சரிப்படுத்த முடியும். 

மூச்சுப் பயிற்சி

தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளைச் செய்துவரும்போது, நம் கவனமே இல்லாமல் முறைதவறிப் போனதுபோலவே, நம்மையும் அறியாமலேயே நம் சுவாசம் முறைப்படும். அதன் மூலம் செல்களுக்கான ஆக்ஸிஜன் சரியாகப் போகும்.  பாதிப்புகளிலிருந்து மீண்டு செல்கள் புதுப்பிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். அதனால் நம் தூக்கம், வளர்சிதை மாற்றம், உடல் வெப்பநிலை என எல்லா செயல்களும் சரியாகும்.

மூச்சுப் பயிற்சியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவித நோயை குணப்படுத்த உதவும். யோகா, இயற்கை மருத்துவத்தில் அப்படித்தான் நோய்க்கான பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 

தூக்கமின்மை, மன அழுத்தம், உடல் வலி, உடல் மந்தம் நீங்க, பதற்றம் தணிய, எதிர்ப்பாற்றலை அதிகரிக்க.... இப்படி ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு வகையான மூச்சுப் பயிற்சி பரிந்துரைக்கப்படும். உதாரணத்துக்கு, வீஸிங் பிரச்னை உள்ளவர்கள், உடலைக் குளிர்ச்சியாக்கும் 'கூலிங் பிராணாயாமம்' செய்யக்கூடாது. இந்த விஷயம் தெரியாமல், யோகா பயிற்சி மையங்களை அணுகும்போது அவர்கள் பொதுவான பயிற்சிகளையே கற்றுத் தருவார்கள். இயற்கை மருத்துவரை அணுகும்போதுதான் அவரவர் பிரச்னைகளைக் கேட்டறிந்து சரியான மூச்சுப் பயிற்சிகளைப் பரிந்துரைப்பார். 

பிராணாயாமம்

இந்த விஷயம் தெரியாமல் பலரும், 'நான் பல காலமாக மூச்சுப் பயிற்சி செய்கிறேன்.... ஒரு பலனும் இல்லை' என புலம்புவதைக் கேட்கலாம். தவறான மூச்சுப் பயிற்சி, தவறான விளைவுகளைத்தான் கொடுக்கும். யாருக்கு, எந்தப் பயிற்சி என தெரிந்து, முறைப்படி கற்றுக்கொண்டு செய்வதன் மூலம் முழுமையான பலன்களைப் பெற முடியும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...