Skip to main content

Doctor Vikatan: PCOD எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்களால் கருத்தரிக்க முடியுமா?

Doctor Vikatan: பிசிஓடி பாதிப்பு உள்ளவர்கள், கருத்தரிக்க முடியுமா.... கருத்தரித்தாலும் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா?

prabu, விகடன் இணையத்திலிருந்து...

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

நீர்க்கட்டிகளை மருத்துவர்கள் 'ஒவேரியன் சிஸ்ட்' என்று சொல்வோம். ஆனால், இங்கே நீங்கள் குறிப்பிட்டிருப்பது 'பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்' (Polycystic Ovarian Syndrome) அல்லது 'பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்' (Polycystic Ovarian Disease) என்று சொல்லப்படும் நீர்க்கட்டிகள் என்று நான் யூகிக்கிறேன். ஏனெனில், அந்த நீர்க்கட்டிகள்தான் குழந்தையின்மைக்கு முக்கிய காரணங்களாக அமைபவை.

நீர்க்கட்டிகள் இருந்தால் கருத்தரிக்க முடியுமா என தெரிந்துகொள்வதற்கு முன், நீர்க்கட்டிகள் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். பெண்ணின் சினைப்பைகளில் இயல்பாக உள்ள  முதிர்ச்சியடையாத முட்டைகளையே நாம் நீர்க்கட்டிகள் என்று சொல்கிறோம். எல்லா பெண்களுக்கும் பிறக்கும்போதே சினைப்பையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முட்டைகள் இருக்கும். அதை `ஒவேரியன் ரிசர்வ்' என்று சொல்வோம்.

RESEARCH (Representational Image)

இந்த எண்ணிக்கையானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். வயதாக, ஆக இந்த முட்டைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும். சினைமுட்டைகளின் இருப்பிலிருந்து ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் முதிர்ந்து, வெடித்து அதன் உள்ளிருந்து ஓவம் எனப்படும் கருமுட்டை வெளியே வரும். அந்த நிகழ்வைத்தான் 'ஓவுஷன்' எனப்படும் 'அண்டவிடுப்பு' என்று சொல்கிறோம். இது நிகழ்ந்தால்தான் கருத்தரிக்க முடியும்.

பிசிஓஎஸ் பாதிப்பு உள்ளவர்களில் முட்டைகளின் இருப்பு நிறையவே இருக்கும். ஆனால், ஒவ்வொன்றும் வெவ்வேறு கட்ட முதிர்ச்சி நிலையில் இருக்கும். எதுவுமே முழுமையாக முதிர்ச்சியடைந்திருக்காது. பெரிதாகி, முதிர்ச்சியடையாததால் அந்த முட்டைகள் ஸ்கேன் பரிசோதனையின்போது சின்னச் சின்ன கட்டிகள் போன்று தெரியும். அவற்றையே நாம் நீர்க்கட்டிகள் என்று சொல்கிறோம்.

ஸ்கேன்

இந்தக் கட்டிகளை அறுவைசிகிச்சை செய்து அகற்றத் தேவையில்லை.  ஒருவருக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பதை ஸ்கேன் பரிசோதனையை மட்டும் பார்த்து உறுதிசெய்ய முடியாது. அத்துடன் அவர்களுக்கு வேறு சில  அறிகுறிகளும் இருக்க வேண்டும்.  அதை 'ஹைப்பர் ஆண்ட்ரோஜெனிசம்' (Hyperandrogenism) என்று சொல்வோம். அதாவது, அவர்களுக்கு ஆண் ஹார்மோன்கள் அதிகமிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படும்.

இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பருக்கள், உடல் முழுவதும் ரோம வளர்ச்சி போன்றவை தென்படும். இந்த அறிகுறிகளுடன், பீரியட்ஸ் சுழற்சி முறைதவறிப் போவது, ஸ்கேனில் நீர்க்கட்டிகள் தெரிவது என இந்த மூன்றில் இரண்டு அறிகுறிகள் இருந்தால்தான் பிசிஓடி பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்படும்.

பிசிஓடி பாதிப்புக்கான முதல் சிகிச்சையே, வாழ்வியல் மாற்றங்கள்தான். உணவுக்கட்டுப்பாடு, எடைக்குறைப்பு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் இந்தப் பிரச்னையை ரிவர்ஸ் செய்ய முடியும்.

முகப்பரு

சிலருக்கு மருத்துவ சிகிச்சைகளும் தேவைப்படும். கருத்தரிப்புக்கான சிகிச்சைகளும் தேவைப்படும். எனவே, பிசிஓடி பாதிப்பு உள்ளவர்கள் கருத்தரிக்க முடியாது என்பது தவறான நம்பிக்கை. அப்படியே கருத்தரித்தாலும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வருமா என்ற பயமும் தேவையில்லை. அப்படி எந்த பாதிப்பும் வராது. எனவே, பிசிஓடி பாதிப்புக்கு சரியான நேரத்தில் முறையான சிகிச்சை எடுப்பது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...