Skip to main content

Doctor Vikatan: PCOD எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்களால் கருத்தரிக்க முடியுமா?

Doctor Vikatan: பிசிஓடி பாதிப்பு உள்ளவர்கள், கருத்தரிக்க முடியுமா.... கருத்தரித்தாலும் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா?

prabu, விகடன் இணையத்திலிருந்து...

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

நீர்க்கட்டிகளை மருத்துவர்கள் 'ஒவேரியன் சிஸ்ட்' என்று சொல்வோம். ஆனால், இங்கே நீங்கள் குறிப்பிட்டிருப்பது 'பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்' (Polycystic Ovarian Syndrome) அல்லது 'பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்' (Polycystic Ovarian Disease) என்று சொல்லப்படும் நீர்க்கட்டிகள் என்று நான் யூகிக்கிறேன். ஏனெனில், அந்த நீர்க்கட்டிகள்தான் குழந்தையின்மைக்கு முக்கிய காரணங்களாக அமைபவை.

நீர்க்கட்டிகள் இருந்தால் கருத்தரிக்க முடியுமா என தெரிந்துகொள்வதற்கு முன், நீர்க்கட்டிகள் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். பெண்ணின் சினைப்பைகளில் இயல்பாக உள்ள  முதிர்ச்சியடையாத முட்டைகளையே நாம் நீர்க்கட்டிகள் என்று சொல்கிறோம். எல்லா பெண்களுக்கும் பிறக்கும்போதே சினைப்பையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முட்டைகள் இருக்கும். அதை `ஒவேரியன் ரிசர்வ்' என்று சொல்வோம்.

RESEARCH (Representational Image)

இந்த எண்ணிக்கையானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். வயதாக, ஆக இந்த முட்டைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும். சினைமுட்டைகளின் இருப்பிலிருந்து ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் முதிர்ந்து, வெடித்து அதன் உள்ளிருந்து ஓவம் எனப்படும் கருமுட்டை வெளியே வரும். அந்த நிகழ்வைத்தான் 'ஓவுஷன்' எனப்படும் 'அண்டவிடுப்பு' என்று சொல்கிறோம். இது நிகழ்ந்தால்தான் கருத்தரிக்க முடியும்.

பிசிஓஎஸ் பாதிப்பு உள்ளவர்களில் முட்டைகளின் இருப்பு நிறையவே இருக்கும். ஆனால், ஒவ்வொன்றும் வெவ்வேறு கட்ட முதிர்ச்சி நிலையில் இருக்கும். எதுவுமே முழுமையாக முதிர்ச்சியடைந்திருக்காது. பெரிதாகி, முதிர்ச்சியடையாததால் அந்த முட்டைகள் ஸ்கேன் பரிசோதனையின்போது சின்னச் சின்ன கட்டிகள் போன்று தெரியும். அவற்றையே நாம் நீர்க்கட்டிகள் என்று சொல்கிறோம்.

ஸ்கேன்

இந்தக் கட்டிகளை அறுவைசிகிச்சை செய்து அகற்றத் தேவையில்லை.  ஒருவருக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பதை ஸ்கேன் பரிசோதனையை மட்டும் பார்த்து உறுதிசெய்ய முடியாது. அத்துடன் அவர்களுக்கு வேறு சில  அறிகுறிகளும் இருக்க வேண்டும்.  அதை 'ஹைப்பர் ஆண்ட்ரோஜெனிசம்' (Hyperandrogenism) என்று சொல்வோம். அதாவது, அவர்களுக்கு ஆண் ஹார்மோன்கள் அதிகமிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படும்.

இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பருக்கள், உடல் முழுவதும் ரோம வளர்ச்சி போன்றவை தென்படும். இந்த அறிகுறிகளுடன், பீரியட்ஸ் சுழற்சி முறைதவறிப் போவது, ஸ்கேனில் நீர்க்கட்டிகள் தெரிவது என இந்த மூன்றில் இரண்டு அறிகுறிகள் இருந்தால்தான் பிசிஓடி பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்படும்.

பிசிஓடி பாதிப்புக்கான முதல் சிகிச்சையே, வாழ்வியல் மாற்றங்கள்தான். உணவுக்கட்டுப்பாடு, எடைக்குறைப்பு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் இந்தப் பிரச்னையை ரிவர்ஸ் செய்ய முடியும்.

முகப்பரு

சிலருக்கு மருத்துவ சிகிச்சைகளும் தேவைப்படும். கருத்தரிப்புக்கான சிகிச்சைகளும் தேவைப்படும். எனவே, பிசிஓடி பாதிப்பு உள்ளவர்கள் கருத்தரிக்க முடியாது என்பது தவறான நம்பிக்கை. அப்படியே கருத்தரித்தாலும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வருமா என்ற பயமும் தேவையில்லை. அப்படி எந்த பாதிப்பும் வராது. எனவே, பிசிஓடி பாதிப்புக்கு சரியான நேரத்தில் முறையான சிகிச்சை எடுப்பது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...