Skip to main content

வன்கொடுமையில் கர்ப்பம்... கருவைக் கலைக்க விரும்பினால் மருத்துவக்குழு பரிசோதனை அவசியம்!

பாலியல் வன்கொடுமையில் இருந்து மீண்ட பெண் கர்ப்பத்தைக் கலைக்க விரும்பும் பட்சத்தில், அப்பெண்ணின் உடல்நிலையை ஆய்வு செய்ய மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 

பாலியல் வன்கொடுமையில் இருந்து மீண்ட 27 வயது பெண் தனது கர்ப்பத்தைக் கலைக்க உத்தரவு கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா விசாரித்தார்.

பாலியல் வன்கொடுமை

பொதுவாகவே 1971 மருத்துவக் கருக்கலைப்பு சட்டப் பிரிவு (Medical Termination of Pregnancy Act, 1971) 3-ன் படி, 20 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பத்தைக் கலைப்பதற்குத் தடை உள்ளது. மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண் கடுமையான மன அதிர்ச்சியில் இருந்ததார் எனவும் மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் விதியில் உள்ள சில நிபந்தனைகளின் கீழ் 20 முதல் 24 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்க முடியும் என்றும் தெரிவித்தார். எனவே, பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி அளிக்கும்படி கேட்டு இருந்தார்.

இது குறித்து நீதிபதி பட்டாச்சார்யா அளித்த தீர்ப்பில், ``நீதிமன்றம் இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தது அல்ல. 27 வயதான மனுதாரரின் உடல்நிலையை ஆய்வுசெய்ய மாநில அரசு மருத்துவ வாரியத்தை (Medical Board) அமைக்க வேண்டும். 

மருத்துவக் குழுவில் குறைந்தது இரண்டு உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் அவர்களின் துறையில் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களாக இருக்க வேண்டும். அவர்களில் ஒருவர் பெண்களுக்கான மருத்துவத் துறையையும் , மற்றொருவர் குழந்தைகளுக்கான மருத்துவத் துறையையும் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

court order -Representational Image

மனுதாரரின் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்கான சாதக பாதகங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பிப்ரவரி 2-ம் தேதி இது தொடர்பாக மருத்துவக் குழுவின் அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவக் குழுவை விரைவில் அமைத்து மனுதாரரை இங்குள்ள எம்ஆர் பங்கூர் மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 2-ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...