Skip to main content

வன்கொடுமையில் கர்ப்பம்... கருவைக் கலைக்க விரும்பினால் மருத்துவக்குழு பரிசோதனை அவசியம்!

பாலியல் வன்கொடுமையில் இருந்து மீண்ட பெண் கர்ப்பத்தைக் கலைக்க விரும்பும் பட்சத்தில், அப்பெண்ணின் உடல்நிலையை ஆய்வு செய்ய மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 

பாலியல் வன்கொடுமையில் இருந்து மீண்ட 27 வயது பெண் தனது கர்ப்பத்தைக் கலைக்க உத்தரவு கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா விசாரித்தார்.

பாலியல் வன்கொடுமை

பொதுவாகவே 1971 மருத்துவக் கருக்கலைப்பு சட்டப் பிரிவு (Medical Termination of Pregnancy Act, 1971) 3-ன் படி, 20 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பத்தைக் கலைப்பதற்குத் தடை உள்ளது. மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண் கடுமையான மன அதிர்ச்சியில் இருந்ததார் எனவும் மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் விதியில் உள்ள சில நிபந்தனைகளின் கீழ் 20 முதல் 24 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்க முடியும் என்றும் தெரிவித்தார். எனவே, பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி அளிக்கும்படி கேட்டு இருந்தார்.

இது குறித்து நீதிபதி பட்டாச்சார்யா அளித்த தீர்ப்பில், ``நீதிமன்றம் இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தது அல்ல. 27 வயதான மனுதாரரின் உடல்நிலையை ஆய்வுசெய்ய மாநில அரசு மருத்துவ வாரியத்தை (Medical Board) அமைக்க வேண்டும். 

மருத்துவக் குழுவில் குறைந்தது இரண்டு உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் அவர்களின் துறையில் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களாக இருக்க வேண்டும். அவர்களில் ஒருவர் பெண்களுக்கான மருத்துவத் துறையையும் , மற்றொருவர் குழந்தைகளுக்கான மருத்துவத் துறையையும் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

court order -Representational Image

மனுதாரரின் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்கான சாதக பாதகங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பிப்ரவரி 2-ம் தேதி இது தொடர்பாக மருத்துவக் குழுவின் அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவக் குழுவை விரைவில் அமைத்து மனுதாரரை இங்குள்ள எம்ஆர் பங்கூர் மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 2-ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...