Skip to main content

``அந்தப் பெண்ணுக்கு வேற யாரும் ஆதரவில்ல... அதனாலதான்...'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 138

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை வந்த பிறகும், திருமணம் தாண்டிய உறவுகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. அதிலும், சமீப சில வருடங்களாக இத்தகைய உறவுகள் சற்று அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் பகிர்ந்துகொள்கிறார்.

Sexologist Kamaraj

''நடுத்தர வயது ஆண் ஒருவர், மிகுந்த படபடப்புடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார். 'நான் திருமணம் தாண்டிய உறவுல இருக்கேன் டாக்டர். எனக்கு ஏதாவது பால்வினை நோய் வந்திருக்குமோன்னு பயமா இருக்கு. செக் பண்ணி சொல்லுங்களேன்' என்றார். அவருடைய படபடப்புக்கான காரணம் எனக்கும் புரிந்தது. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமண பந்தத்தில் இருந்துகொண்டு ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்றேன். 'அந்தப் பொண்ணுதான் என்னைக் கூப்பிட்டாங்க' என்றார். நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் நீங்கள் ஏன் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டீர்கள் என்றேன். 'அவங்களுக்கு வேற யாரும் ஆதரவில்ல... அதனாலதான்...' என்று இழுத்தார்.

திருமணம் என்பதே ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்போம் என்று எடுத்துக்கொள்கிற உறுதிமொழிதான். நீங்கள் அதை மீறியிருக்கிறீர்கள். இது சரியல்ல. உங்கள் மனைவி உங்கள் மீது வைத்த நம்பிக்கையை உடைத்திருக்கிறீர்கள். நீங்கள் திருமணம் தாண்டி உறவு வைத்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு வேறு யாரும் ஆதரவு இல்லை என்றெல்லாம் காரணம் சொல்லாதீர்கள். நீங்கள் செய்ததைப் போலவே உங்கள் மனைவியும் திருமணம் தாண்டிய உறவில் இருந்துகொண்டு, 'அந்த ஆணுக்கு யாருமில்ல... அதனாலதான் அவர்கூட செக்ஸ் வெச்சுக்கிட்டேன்' என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்றேன். 'நான் செஞ்ச தப்பு நல்லா புரியுது டாக்டர்' என்று கண்கலங்கினார். அதன்பிறகு அவர் கேட்டுக்கொண்டபடி, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினை நோய்கள் தொடர்பான பரிசோதனைகளை செய்யும்படி அறிவுறுத்தினேன். நல்லவேளை, பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு எந்த நோயும் இல்லையென்பது உறுதியானது.

Sex Education

எல்லோருக்கும் ஒரு வார்த்தை. திருமண உறுதிமொழியை மீறுவது தவறு என்பதில் இரண்டாவது கருத்தில்லை. அதே நேரம், 'தன் துணையைத் தவிர்த்து, வேறொரு நபருடன் பாதுகாப்பில்லாமல் உறவில் ஈடுபட்டவர்கள், உடனடியாக அந்தரங்க உறுப்பை 2 அல்லது 3 முறை சோப்பை பயன்படுத்தி நன்கு சுத்தமாக்க வேண்டும். இதனால், ஹெச்.ஐ.வி உள்ளிட்ட கிருமிகள் உடலுக்குள் நுழைவதை ஓரளவுக்குத் தடுக்க முடியும். இந்த 'ஓரளவு' வாய்ப்பும் ஆண்களுக்கு மட்டுமே... பெண்களுடைய அந்தரங்க உறுப்பின் அமைப்பின்படி, உறவுகொண்ட உடனே வாஷ் செய்தாலும் பலன் கிடைக்காது.

பால்வினை நோய்களே வராமல் இருக்க வேண்டுமென்றால், தன்னுடைய துணையைத் தவிர்த்து வேறு யாருடனும் உறவுகொள்ளக்கூடாது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...