Skip to main content

`கடந்த 29 நாள்களில் 189 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டிருக்கின்றன!' - TRANSTAN தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 29 நாள்களில் 30 நபர்கள் மூலம், 189 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் TRANSTAN தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி விபத்து, புற்றுநோய், பிறவிக் குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள், அவர்களின் குடும்பத்தினரின் முழு சம்மதத்தோடு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வோர் ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்புகள் தேவைப்படுவதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அத்துடன் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நாள்தோறும் ஏராளமான சாலை விபத்துகள் ஏற்படுகிறது. போக்குவரத்துக் காவல்துறையினரின் அறிவிப்புகள், போக்குவரத்து விதிகள் என எவற்றையும் மதியாது சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லாது (ஹெல்மட், சீட் பெல்ட் போடாமல்), பலர் வாகனங்களில் பயணம் செய்கின்றனர். 

இதனால் பெரிய அளவிலான ஆபத்துகளும், சில நேரங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதையடுத்து, விபத்துகளில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாய் மண்ணுக்குத்தான் செல்கிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கான முக்கியக் காரணமாக விளங்குகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, மூளைச்சாவு அடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன்தான், உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில், மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பங்கேற்பதோடு இறந்தவருக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் வெளியிட்ட இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின்  எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதோடு, உடல் உறுப்பு தானம் குறித்து சாமானிய மக்களுக்கும்  விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், அதிகப்படியான நபர்கள் தற்போது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 29 நாள்களில், 30 பேர் தங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என்று, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2008 - ஆண்டுக்குப் பிறகு ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம் 48 பேர், கல்லீரல் 27 பேர், இதயம் 10 பேர், நுரையீரல் 13 பேர் என மொத்தம் 30 நபர்களிடமிருந்து 189  உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் பலருக்கு இது பயன்படும் எனவும் TRANSTAN தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...