Skip to main content

`இந்த தடுப்பூசி 100% புற்றுநோய் வராமல் தடுத்துள்ளது' - ஸ்காட்லாந்து அரசின் சிறப்பான திட்டம்!

ஸ்காட்லாந்து நாட்டில் 25 வயது முதல் 35 வயது வரை உள்ள பெண்களில் பலருக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஒவ்வோர் ஆண்டும், ஸ்காட்லாந்தில் வசிக்கும் பெண்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இவ்வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை தடுப்பதற்காக ஸ்காட்லாந்து அரசு ஹியூமன் பாபிலோமா வைரஸ் (Human Papilloma Virus-HPV) நோய்த்தடுப்புத் திட்டம் என்ற திட்டத்தை 2008-ம் ஆண்டு துவங்கியது.

Cancer awareness

ஹியூமன் பாபிலோமா என்ற வைரஸ் தொற்றின் காரணமாக பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் புற்றுநோய் பாதிக்கும். இந்தப் புற்றுநோயானது கருப்பை திசுக்களை பாதிப்பதோடு நுரையீரல், கல்லீரல், சிறுநீர்ப்பை, மலக்குடல் போன்ற உடலின் பிற பகுதிகளுக்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த வைரஸானது பாலியல் செயல்பாடுகள் அதிகமாக இருப்பது, பல பார்ட்னர்களுடன் உடலுறவு கொள்வது போன்றவற்றாலும் பரவும்.

இந்த வைரஸில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த வைரஸின் 16 மற்றும் 18-வது மரபணு வகை கர்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டது. இந்நோய் பாதித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் செய்யப்படும். நோய் தீவிரமாகும் பட்சத்தில் புற்றுநோய் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

Vaccine

இந்நிலையில் ஸ்காட்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின்படி, அந்நாட்டிலுள்ள பெண் குழந்தைகளுக்கு 12 வயதுக்கு முன்பாகவே HPV தடுப்பூசி செலுத்தினர். தடுப்பூசி செலுத்துவதால் HPV வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க முடியும். திட்டம் தொடங்கி பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு அரசு, எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ட்ராத்க்ளைட் பல்கலைக்கழகம் ஆகியற்றுடன் இணைந்து இது தொடர்பான ஆய்வை நடத்தி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், "12 வயதில் முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்டு, பின் தொடர்ச்சியாக முழு டோஸையும் எடுத்துக்கொண்ட பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடலில் இதுவரை கர்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நோய்க்கிருமியும் கண்டறியப்படவில்லை. HPV தடுப்பூசி புற்றுநோயை ஏற்படுத்தும் நோய்க்கிருமியின் வளர்ச்சியைத் தடுப்பதில் 100% செயல்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cervical Cancer

இதுகுறித்து பேசிய ஸ்காட்லாந்து பொது சுகாதாரத்துறை ஆலோசகர் டாக்டர் கிளாரி கேமரூன், "HPV தடுப்பூசி தொடர்ந்து போடுவதன் மூலமும், பாதிப்பு குறித்த பரிசோதனையை ஊக்குவித்தல் மூலமும் நாட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முழுமையாக அகற்றப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...