Skip to main content

`இந்த தடுப்பூசி 100% புற்றுநோய் வராமல் தடுத்துள்ளது' - ஸ்காட்லாந்து அரசின் சிறப்பான திட்டம்!

ஸ்காட்லாந்து நாட்டில் 25 வயது முதல் 35 வயது வரை உள்ள பெண்களில் பலருக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஒவ்வோர் ஆண்டும், ஸ்காட்லாந்தில் வசிக்கும் பெண்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இவ்வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை தடுப்பதற்காக ஸ்காட்லாந்து அரசு ஹியூமன் பாபிலோமா வைரஸ் (Human Papilloma Virus-HPV) நோய்த்தடுப்புத் திட்டம் என்ற திட்டத்தை 2008-ம் ஆண்டு துவங்கியது.

Cancer awareness

ஹியூமன் பாபிலோமா என்ற வைரஸ் தொற்றின் காரணமாக பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் புற்றுநோய் பாதிக்கும். இந்தப் புற்றுநோயானது கருப்பை திசுக்களை பாதிப்பதோடு நுரையீரல், கல்லீரல், சிறுநீர்ப்பை, மலக்குடல் போன்ற உடலின் பிற பகுதிகளுக்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த வைரஸானது பாலியல் செயல்பாடுகள் அதிகமாக இருப்பது, பல பார்ட்னர்களுடன் உடலுறவு கொள்வது போன்றவற்றாலும் பரவும்.

இந்த வைரஸில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த வைரஸின் 16 மற்றும் 18-வது மரபணு வகை கர்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டது. இந்நோய் பாதித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் செய்யப்படும். நோய் தீவிரமாகும் பட்சத்தில் புற்றுநோய் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

Vaccine

இந்நிலையில் ஸ்காட்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின்படி, அந்நாட்டிலுள்ள பெண் குழந்தைகளுக்கு 12 வயதுக்கு முன்பாகவே HPV தடுப்பூசி செலுத்தினர். தடுப்பூசி செலுத்துவதால் HPV வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க முடியும். திட்டம் தொடங்கி பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு அரசு, எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ட்ராத்க்ளைட் பல்கலைக்கழகம் ஆகியற்றுடன் இணைந்து இது தொடர்பான ஆய்வை நடத்தி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், "12 வயதில் முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்டு, பின் தொடர்ச்சியாக முழு டோஸையும் எடுத்துக்கொண்ட பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடலில் இதுவரை கர்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நோய்க்கிருமியும் கண்டறியப்படவில்லை. HPV தடுப்பூசி புற்றுநோயை ஏற்படுத்தும் நோய்க்கிருமியின் வளர்ச்சியைத் தடுப்பதில் 100% செயல்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cervical Cancer

இதுகுறித்து பேசிய ஸ்காட்லாந்து பொது சுகாதாரத்துறை ஆலோசகர் டாக்டர் கிளாரி கேமரூன், "HPV தடுப்பூசி தொடர்ந்து போடுவதன் மூலமும், பாதிப்பு குறித்த பரிசோதனையை ஊக்குவித்தல் மூலமும் நாட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முழுமையாக அகற்றப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...