Skip to main content

JN 1 கொரோனா: ஈஸியா நினைக்காதீங்க… எச்சரிக்கும் நிபுணர்கள்..!

பரவிவரும் புதிய வகை JN 1 கொரோனாவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு உலகையே முடக்கிப் போட்ட கோவிட் 19 வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து, அதன் பரவல் ஒருவழியாக கட்டுக்குள் வந்தது. இது மீண்டும் தற்போது ஜே.என்.1 என்ற உருமாற்றத்தை அடைந்துள்ளது.

இந்தப் புதுவகை கொரோனா தனித்துவமான அறிகுறிகள் ஏதுமின்றி இருப்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென டெல்லியைச் சேர்ந்த மருத்துவ ஆய்வக இயக்குநர் டாக்டர் சோகினி சென்குப்தா எச்சரித்துள்ளார்.

கொரோனா வார்டு

`ஜே.என்.1 கொரோனா உருமாற்றம் புதிய சவாலாக உருவாகியுள்ளது. தனித்துவமான அறிகுறி ஏதும் இல்லாமல் இருப்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. தனிப்பட்ட முறையில் அறிகுறிகளை உணர்ந்தால், தானாகவே தனிமைப்படுத்திக் கொண்டு மற்றவருக்குப் பரவாமல் தடுக்கும் பொறுப்பும் நமக்கு உள்ளது. நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்ற இணை நோய்கள் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் அதிகம் என்பதால் அவர்கள் இன்னும் கூடுதல் கவனமுடன் இருப்பது கட்டாயம்’ என்று கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை நிலவரப்படி இந்தியாவில் 109 பேருக்கும் மேல் புதிய வகை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் பரவல் குறித்து கணிக்க இயலாத நிலையிருப்பதால் வேறு பல மருத்துவ நிபுணர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

கொரோனா முதல் அலையின்போது, உலகுக்கே அதுதான் முதல் அனுபவம் என்பதால் அது குறித்து அச்சமும், பீதியும் பெருமளவில் இருந்தது. இரண்டாம் அலை இந்தியாவில் பெரும்பாலானோரை காவு வாங்கியது. ஆனால், அதன் பிறகு மூன்றாம் அலையின்போது தாக்கம் பெரிதாக இல்லாததாலும், கொரோனா குறித்த விழிப்புணர்வாலும் பலருக்கும் அச்சம் நீங்கியிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், அது அலட்சியமாக மாறிவிடக் கூடாது.

Covid

நிலைமையின் தீவிரம் கருதி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது பின்பற்றிய விதிமுறைகளை இப்போதும் பின்பற்றுவது அவசியம். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை சுத்தமாகக் கழுவுவது, ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது போன்ற வழக்கமான நடவடிக்கைகளை இப்போதும் பின்பற்றுவது அவசியம்.

பண்டிகை காலம், தொடர் விடுமுறைகள் போன்ற காரணங்களால் இடம்பெயர்வது, கூட்டம் கூடுவது போன்றவற்றை தற்போது முடிந்தவரைத் தவிர்க்க முடியாத நிலை உள்ளது. எனவே, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். கொரோனா தடுப்பூசிகளை இதுவரை போட்டுக் கொள்ளாதவர்கள் இப்போதேனும் போட்டுக் கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை அவசியம் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, அக்கறை காட்டுங்கள்... அலட்சியம் வேண்டாம் !

- ஜி.ஸ்ரீவித்யா


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...