Skip to main content

Doctor Vikatan: அறிகுறிகளே இல்லாமல் ஹார்ட் அட்டாக் வருமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 48 வயது. திடீரென மயங்கி விழுந்தவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவனுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகச் சொலலி சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படி அறிகுறிகளே இல்லாமலும் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வருமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

ஹார்ட் அட்டாக் எப்போதும் அறிகுறிகளோடுதான் வரும் என சொல்வதற்கில்லை.  இதற்கான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன், ஹார்ட் அட்டாக்கின் கிளாசிக் அறிகுறிகள் பற்றி அனைவரும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

மார்புப் பகுதியில் ஓர் அழுத்தம், இறுக்கம், வலி, கசக்குவது போன்ற உணர்வு, அந்த வலியானது கைகளுக்கு, தாடைக்கு, கழுத்துக்கு, முதுகுப் பகுதிக்குப் பரவுவதுதான் மாரடைப்பின் மிக முக்கியமான, பிரதான அறிகுறிகள்.  இதன் தொடர்ச்சியாக சிலர் 'Levine's sign ' என்ற அறிகுறியையும் உணர்வார்கள். அதாவது கையை மடக்கி மார்புப் பகுதியை அழுத்திக் கொள்வார்கள். 

தலைச்சுற்றல், வாந்தி,

அடுத்து மூச்சு விடுவதில் சிலர் திடீர் சிரமத்தை உணர்வார்கள். இந்த அறிகுறியோடு நெஞ்சுவலி இருக்கலாம், இல்லாமலும் போகலாம். நெஞ்சுவலி இல்லை என்பதால் இதை பலரும் மாரடைப்புடன் தொடர்புபடுத்திப் பார்க்கவே மாட்டார்கள். மாரடைப்பு வரப்போவதன் அறிகுறியாக சிலருக்கு திடீரென காரணமே இல்லாமல் வியர்க்கும். அஜீரணமோ, வயிற்றுப் பிரச்னையோ இல்லாத நிலையிலும் திடீரென சிலருக்கு வாந்தி உணர்வு ஏற்பட்டாலோ, ஏதோ ஓர் அசௌகர்யத்தை உணர்ந்தாலோ அதுவும் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியாக இருக்கலாம். 

திடீரென ஏற்படும் தலைச்சுற்றல், மயக்கம் போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். காரணமே இல்லாமல் திடீரென உணரும் அதீத களைப்பும் அசதியும் கூட மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு சில வாரங்கள் முன்பிருந்தோ, சில நாள்கள் முன்பிருந்தோ இந்த உணர்வு தொடரலாம். 

ஒரு கையிலோ, இரண்டு கைகளிலுமோ வலியை உணர்வது, கழுத்து, முதுகு, வயிற்றுப் பகுதிகளில் வலியை உணர்வது போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். அதாவது தொப்புளில் தொடங்கி, தாடை வரை எந்த இடத்தில் வலி இருந்தாலும் அலட்சியம்கூடாது. 

தாடை வலி

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் எல்லோருக்கும் அவசியம் வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாகவும் இருக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு  பெரும்பாலும் அறிகுறிகளற்ற 'சைலன்ட் அட்டாக்' ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கும் மிக மிதமான அறிகுறிகளே ஏற்படலாம். எனவே, திடீரென உணரப்படும் எந்தவித அசௌகர்யத்தையும் அலட்சியம் செய்யக்கூடாது. அறிகுறிகளே இல்லாமலும் மாரடைப்பு ஏற்படலாம் என்பதால் அவ்வப்போது இதயநலனுக்கான பரிசோதனைகளைத் தவறாமல் செய்து பார்க்க வலியுறுத்தப்படுகிறது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...