Skip to main content

Doctor Vikatan: அறிகுறிகளே இல்லாமல் ஹார்ட் அட்டாக் வருமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 48 வயது. திடீரென மயங்கி விழுந்தவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவனுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகச் சொலலி சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படி அறிகுறிகளே இல்லாமலும் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வருமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

ஹார்ட் அட்டாக் எப்போதும் அறிகுறிகளோடுதான் வரும் என சொல்வதற்கில்லை.  இதற்கான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன், ஹார்ட் அட்டாக்கின் கிளாசிக் அறிகுறிகள் பற்றி அனைவரும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

மார்புப் பகுதியில் ஓர் அழுத்தம், இறுக்கம், வலி, கசக்குவது போன்ற உணர்வு, அந்த வலியானது கைகளுக்கு, தாடைக்கு, கழுத்துக்கு, முதுகுப் பகுதிக்குப் பரவுவதுதான் மாரடைப்பின் மிக முக்கியமான, பிரதான அறிகுறிகள்.  இதன் தொடர்ச்சியாக சிலர் 'Levine's sign ' என்ற அறிகுறியையும் உணர்வார்கள். அதாவது கையை மடக்கி மார்புப் பகுதியை அழுத்திக் கொள்வார்கள். 

தலைச்சுற்றல், வாந்தி,

அடுத்து மூச்சு விடுவதில் சிலர் திடீர் சிரமத்தை உணர்வார்கள். இந்த அறிகுறியோடு நெஞ்சுவலி இருக்கலாம், இல்லாமலும் போகலாம். நெஞ்சுவலி இல்லை என்பதால் இதை பலரும் மாரடைப்புடன் தொடர்புபடுத்திப் பார்க்கவே மாட்டார்கள். மாரடைப்பு வரப்போவதன் அறிகுறியாக சிலருக்கு திடீரென காரணமே இல்லாமல் வியர்க்கும். அஜீரணமோ, வயிற்றுப் பிரச்னையோ இல்லாத நிலையிலும் திடீரென சிலருக்கு வாந்தி உணர்வு ஏற்பட்டாலோ, ஏதோ ஓர் அசௌகர்யத்தை உணர்ந்தாலோ அதுவும் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியாக இருக்கலாம். 

திடீரென ஏற்படும் தலைச்சுற்றல், மயக்கம் போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். காரணமே இல்லாமல் திடீரென உணரும் அதீத களைப்பும் அசதியும் கூட மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு சில வாரங்கள் முன்பிருந்தோ, சில நாள்கள் முன்பிருந்தோ இந்த உணர்வு தொடரலாம். 

ஒரு கையிலோ, இரண்டு கைகளிலுமோ வலியை உணர்வது, கழுத்து, முதுகு, வயிற்றுப் பகுதிகளில் வலியை உணர்வது போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். அதாவது தொப்புளில் தொடங்கி, தாடை வரை எந்த இடத்தில் வலி இருந்தாலும் அலட்சியம்கூடாது. 

தாடை வலி

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் எல்லோருக்கும் அவசியம் வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாகவும் இருக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு  பெரும்பாலும் அறிகுறிகளற்ற 'சைலன்ட் அட்டாக்' ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கும் மிக மிதமான அறிகுறிகளே ஏற்படலாம். எனவே, திடீரென உணரப்படும் எந்தவித அசௌகர்யத்தையும் அலட்சியம் செய்யக்கூடாது. அறிகுறிகளே இல்லாமலும் மாரடைப்பு ஏற்படலாம் என்பதால் அவ்வப்போது இதயநலனுக்கான பரிசோதனைகளைத் தவறாமல் செய்து பார்க்க வலியுறுத்தப்படுகிறது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...