Skip to main content

மெனு கார்டை பார்த்ததும் பதற்றம்... காரணம், தீர்வுகள் என்ன?

பிரிட்டனில் உள்ள தனியார் உணவகம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இன்றைய இளம்தலைமுறையினர் பலர் உணவு ஆர்டர் செய்யும்போது ஒருவித பதற்றத்தை உணர்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை 'மெனு ஆங்சைட்டி' (Menu anxiety) என்கின்றனர். உணவகத்துக்குச் சாப்பிடச் செல்லும்போது, என்ன சாப்பிடலாம் என்பதை முடிவு செய்வதற்கே குழப்பமடைந்து, ஒருவித பதற்றத்தை உணர்வதைத்தான் மெனு ஆங்சைட்டி என்கின்றனர்.

Restaurant (Representational Image)

பிரிட்டனில் Prezzo என்ற உணவகத்தில் சாப்பிட வந்த 2000 நபர்களிடம் அவர்களின் உணவுப் பழக்கங்கள் குறித்துப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் அளித்த முடிவுகளின் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வின் இறுதியில், 'Gen z' என்று அழைக்கப்படும் தற்போதைய இளம் தலைமுறையினரில் 87% பேர் இந்த மெனு ஆங்சைட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

Gen z நபர்களை ஒப்பிடும்போது, அவர்களின் முந்தைய தலைமுறையினருக்கு உணவு ஆர்டர் செய்யும்போது மனப்பதற்றம் குறைந்த அளவிலேயே ஏற்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தப் பதற்றத்தின் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் தானே ஆர்டர் செய்வதற்கு பதிலாக பிறர் தமக்கும் சேர்த்து ஆர்டர் செய்வதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

Menu card

இதேபோல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்விலும் மூன்றில் ஓர் அமெரிக்கருக்கு உணவு ஆர்டர் செய்யும்போது ஏற்படும் 'மெனு ஆங்சைட்டி' ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உணவு ஆர்டர் செய்யும்போது ஏன் மனப்பதற்றம் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் குறித்து மதுரையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சிமோனாவிடம் கேட்டோம்:

“இன்றைய இளம் தலைமுறையினர் உணவு ஆர்டர் செய்யும்போது மட்டுமன்றி, பல சூழல்களில் இதுபோன்ற மனப்பதற்றத்துக்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் ஒரு முடிவை எடுப்பதில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களே. இன்றைய உலகில் நாம் எது குறித்து யோசித்தாலும் எல்லாவற்றுக்கும் பல்வேறு தேர்வுகள் (Options) உள்ளன.

தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கூடவே குழப்பமும் அதிகமாகிறது. இன்றைய இளம்தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் உலகிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து ஒருவிதமான Comfort Zone-ல் குறுகிய வட்டத்துக்குள் இருக்கின்றனர். இந்த நிலை அவர்கள் புதிதாக எதையாவது முயற்சிசெய்து பார்ப்பதைத் தடுக்கிறது.

Anxiety

இதன் காரணமாகவே புதிதாக ஏதாவது ஆர்டர் செய்வோம் என பல நிமிடங்கள் மெனு கார்டில் தீர ஆராய்ந்தாலும் வழக்கமாக ஆர்டர் செய்யும் உணவையே ஆர்டர் செய்வார்கள். ஆர்டர் செய்யும் உணவு நன்றாக இல்லாமல் போய்விட்டால், 'எப்போதும் சாப்பிடுவதையே சாப்பிட்டிருக்கலாம்' என குற்றஉணர்ச்சியும் ஏற்படும். இதன் காரணமாகவும், இந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதிலேயே அவர்களுக்கு மனப்பதற்றம் உண்டாகலாம்.

உணவின் விலை பற்றிய ஆராய்ச்சியும் மனப்பதற்றத்தை அதிகரிக்கலாம். நண்பர்களுடன் சாப்பிடச் சென்றால் 'இதெல்லாம் சாப்பிடுவாயா?' 'இதைக்கூட சாப்பிட மாட்டியா?' போன்ற கேலி கிண்டல்களைத் தவிர்க்க வேண்டும் என்று அதிக கவனத்துடன் இருப்பார்கள். இதுவும் மனப்பதற்றத்துக்கு காரணமாக அமையலாம்.

உளவியல் நிபுணர் சிமோனா

இன்றைய தலைமுறையினர் சாப்பிடுவதற்கு நிறைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். வீகன், குளூட்டன் ஃப்ரீ எனப் பல உணவுப்பழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள். அதுபோன்ற நிலையில் உணவகங்களுக்குச் சாப்பிடச் செல்லும் சூழலில் தாங்கள் விருப்பத் தேர்வாக இருக்கும் உணவு கிடைக்குமா, கிடைக்கும் உணவுகளில் எதெல்லாம் அவர்களின் விதிமுறைகளுக்கு சரியாக இருக்கும் என்று ஆராய்வதும் மனப்பதற்றத்தை அதிகரிக்கலாம்.

பொதுவாக முடிவெடுக்கும் திறன் (Decision making) குறைவாக இருப்பவர்களுக்கு மெனு ஆங்சைட்டி அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற வாழ்வின் சிறிய விஷயங்களில்கூட இப்படி ஆகுமோ, அப்படி ஆகுமோ என அதிகம் யோசித்து குழப்பமடைகிறார்கள். அனைத்தையும் ஆராய்ந்து விட்டு கடைசியில் எப்போதும் சாப்பிடும் எதையாவது ஆர்டர் செய்வார்கள். சில சமயம் புதிதாக எதையாவது ருசிக்க வேண்டும் என்றால் ரிஸ்க் எடுக்கத் தயங்கக்கூடாது.

Menu Anxiety

ஒருமுறை ஆர்டர் செய்து சாப்பிட்டது நன்றாக இல்லாமல் போனாலும் சரி புதிதாக எதையோ முயன்றோமே என்ற மனப்பக்குவத்துக்கு வர வேண்டும். உணவகத்தில் பதற்றத்தைத் தவிர்ப்பதற்கு வீட்டில் இருந்து புறப்படும்போதே அந்த உணவகத்தில் என்ன மாதிரியான உணவுகள் உள்ளன, அவற்றின் விலை என்ன என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளலாம். ஆன்லைனில் உணவின் தரம் மற்றும் சுவை பற்றிய ரெவ்யூக்களையும் பார்க்கலாம். இதுபோன்ற முன் ஆயத்தங்கள் பதற்றத்தைக் குறைக்க உதவும்" என்றார்.

மெனு கார்டை பார்த்தும் உங்களுக்கும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறதா... கமென்ட்ஸில் சொல்லலாமே!


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...