Skip to main content

Doctor Vikatan: எல்லோருக்கும் தேவையா மல்ட்டிவைட்டமின் மாத்திரைகள்?

Doctor Vikatan: நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு சத்துக் குறைபாடு இருப்பதைப் பார்க்கிறோம். ஏதேனும் பிரச்னைக்காக மருத்துவர்களிடம் செல்லும்போது அவர்கள், சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.  எல்லோருக்கும் சத்து மாத்திரைகள் அவசியமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்  

ஸ்பூர்த்தி அருண்

தினமும் சரிவிகித உணவு உட்கொள்வோருக்கு சத்து மாத்திரைகள் தேவையே இல்லை.

சரிவிகித உணவு உட்கொள்ளும் பட்சத்திலும் சில ஊட்டச்சத்துகள் தேவைப்படலாம். அதில் மிக முக்கியமானது வைட்டமின் டி. குறிப்பாக இந்தியாவில் வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவுகள் பெரிதாகக் கிடைப்பதில்லை. சூரிய ஒளியிலிருந்து மட்டுமே கிடைக்கக்கூடியது வைட்டமின் டி. வெயில் காலத்தில் சருமத்தைக் காக்கவும் சருமப் புற்றுநோய் வராமல் தடுக்கவும் சன் ஸ்கிரீன் உபயோகிக்கிறோம். அதனால் நமக்குப் போதுமான வைட்டமின் டி கிடைப்பதில்லை.

சூரிய ஒளி

இந்தியாவை பொறுத்தவரை வைட்டமின் டி குறைபாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. 1000 முதல் 2000 இன்டர்நேஷனல் யூனிட் அளவுள்ள வைட்டமின் டி சப்ளிமென்ட் அல்லது குறைந்தபட்சமாக 800 இன்டர்நேஷனல் யூனிட் அளவுள்ள மல்டி வைட்டமின் சப்ளிமென்ட் தினமும் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் டி-க்கு இணையான இன்னொரு முக்கிய சப்ளிமென்ட் வைட்டமின் பி 12. சைவ உணவுக்காரர்களுக்கு, குறிப்பாக வீகன் உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்தச் சத்து மிக முக்கியமானது.

ஏனென்றால் வைட்டமின் பி 12 சத்தானது பெரும்பாலும் அசைவ உணவுகளில் இருந்தே கிடைக்கக்கூடியது. பால், முட்டை போன்றவற்றைக்கூட சாப்பிடாத கறார் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு தீவிரமான வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இவர்களும் வைட்டமின் பி 12 அளவுகளைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, மருத்துவரின் பரிந்துரையோடு அதற்கான சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். புளிக்கவைக்கப்பட்ட உணவுகள், கடல்பாசி போன்ற சில சைவ  உணவுகளில்தான் வைட்டமின்  பி 12 இருக்கிறது. சப்ளிமென்ட்டாக எடுக்க விருப்பமில்லாதவர்கள் மேற்குறிப்பிட்ட உணவுகளை தினமும் உங்கள் மெனுவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகள்

இதற்கு அடுத்த இடத்தில் உள்ளது ஒமேகா 3 கொழுப்பு அமிலம். இது இதய நலனுக்கு மிக நல்லது. எனவே மருத்துவ ஆலோசனையோடு ஒமேகா 3 சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அடுத்த முக்கிய சத்தான ஆன்டி ஆக்ஸிடன்ட் பழங்கள் மற்றும் காய்கறிகளில்தான் பிரதானமாக இருக்கும். அந்த உணவுகள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்போதுதான் அவற்றின் முழுப் பலன்களையும் பெற முடியும்.

 புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா உள்ள தயிர், யோகர்ட் போன்றவை உங்கள் குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ரெஸ்வெரட்டால் என்பதும் மிக முக்கியமான ஒரு சப்ளிமென்ட். புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியது. ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல்படும். இதயத்துக்கும் நல்லது. திராட்சை, பெர்ரி போன்றவற்றில் இந்தச் சத்து அதிகம் உள்ளது. 

தயிர்

எனவே எந்த சப்ளிமென்ட்டையும் மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாகப் பின்பற்ற வேண்டாம். தேவை இருப்பின் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவு, பரிந்துரைக்கும் நாள்களுக்கு மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

"புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான குறிக்கோள் !" - Dr. அரவிந்தன் செல்வராஜ்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை 'K10K' மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளது கடந்தாண்டும் இதே போன்றொரு மாரத்தான் போட்டியை காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆண்டு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700 நபர்கள் பங்கேற்றனர். 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி புற்றுநோயை கண்டறிந்து அதனை தடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருகிணைக்கப்பட்டது. 10 கி.மீ மாரத்தான் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், 5 கி.மீ மாரத்தான் போட்டியை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Marathon இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், "நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக...