Skip to main content

Doctor Vikatan: எல்லோருக்கும் தேவையா மல்ட்டிவைட்டமின் மாத்திரைகள்?

Doctor Vikatan: நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு சத்துக் குறைபாடு இருப்பதைப் பார்க்கிறோம். ஏதேனும் பிரச்னைக்காக மருத்துவர்களிடம் செல்லும்போது அவர்கள், சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.  எல்லோருக்கும் சத்து மாத்திரைகள் அவசியமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்  

ஸ்பூர்த்தி அருண்

தினமும் சரிவிகித உணவு உட்கொள்வோருக்கு சத்து மாத்திரைகள் தேவையே இல்லை.

சரிவிகித உணவு உட்கொள்ளும் பட்சத்திலும் சில ஊட்டச்சத்துகள் தேவைப்படலாம். அதில் மிக முக்கியமானது வைட்டமின் டி. குறிப்பாக இந்தியாவில் வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவுகள் பெரிதாகக் கிடைப்பதில்லை. சூரிய ஒளியிலிருந்து மட்டுமே கிடைக்கக்கூடியது வைட்டமின் டி. வெயில் காலத்தில் சருமத்தைக் காக்கவும் சருமப் புற்றுநோய் வராமல் தடுக்கவும் சன் ஸ்கிரீன் உபயோகிக்கிறோம். அதனால் நமக்குப் போதுமான வைட்டமின் டி கிடைப்பதில்லை.

சூரிய ஒளி

இந்தியாவை பொறுத்தவரை வைட்டமின் டி குறைபாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. 1000 முதல் 2000 இன்டர்நேஷனல் யூனிட் அளவுள்ள வைட்டமின் டி சப்ளிமென்ட் அல்லது குறைந்தபட்சமாக 800 இன்டர்நேஷனல் யூனிட் அளவுள்ள மல்டி வைட்டமின் சப்ளிமென்ட் தினமும் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் டி-க்கு இணையான இன்னொரு முக்கிய சப்ளிமென்ட் வைட்டமின் பி 12. சைவ உணவுக்காரர்களுக்கு, குறிப்பாக வீகன் உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்தச் சத்து மிக முக்கியமானது.

ஏனென்றால் வைட்டமின் பி 12 சத்தானது பெரும்பாலும் அசைவ உணவுகளில் இருந்தே கிடைக்கக்கூடியது. பால், முட்டை போன்றவற்றைக்கூட சாப்பிடாத கறார் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு தீவிரமான வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இவர்களும் வைட்டமின் பி 12 அளவுகளைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, மருத்துவரின் பரிந்துரையோடு அதற்கான சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். புளிக்கவைக்கப்பட்ட உணவுகள், கடல்பாசி போன்ற சில சைவ  உணவுகளில்தான் வைட்டமின்  பி 12 இருக்கிறது. சப்ளிமென்ட்டாக எடுக்க விருப்பமில்லாதவர்கள் மேற்குறிப்பிட்ட உணவுகளை தினமும் உங்கள் மெனுவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகள்

இதற்கு அடுத்த இடத்தில் உள்ளது ஒமேகா 3 கொழுப்பு அமிலம். இது இதய நலனுக்கு மிக நல்லது. எனவே மருத்துவ ஆலோசனையோடு ஒமேகா 3 சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அடுத்த முக்கிய சத்தான ஆன்டி ஆக்ஸிடன்ட் பழங்கள் மற்றும் காய்கறிகளில்தான் பிரதானமாக இருக்கும். அந்த உணவுகள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்போதுதான் அவற்றின் முழுப் பலன்களையும் பெற முடியும்.

 புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா உள்ள தயிர், யோகர்ட் போன்றவை உங்கள் குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ரெஸ்வெரட்டால் என்பதும் மிக முக்கியமான ஒரு சப்ளிமென்ட். புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியது. ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல்படும். இதயத்துக்கும் நல்லது. திராட்சை, பெர்ரி போன்றவற்றில் இந்தச் சத்து அதிகம் உள்ளது. 

தயிர்

எனவே எந்த சப்ளிமென்ட்டையும் மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாகப் பின்பற்ற வேண்டாம். தேவை இருப்பின் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவு, பரிந்துரைக்கும் நாள்களுக்கு மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...