Skip to main content

Doctor Vikatan: ஆரோக்கியமான கர்ப்பம்... ஆண்களின் வயதும் கவனிக்கப்பட வேண்டுமா?

Doctor Vikatan: கருத்தரிப்பதில் பெண்ணின் வயது முக்கியம் என பலமுறை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதி பெண்களுக்கு மட்டும்தானா.... ஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்துகொண்டாலும், குழந்தைபெற , குறிப்பாக ஆரோக்கியமான குழந்தை பெற தகுதியானவர்களாக இருப்பார்களா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.

ஒரு குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க, தாயின் வயது மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது. உண்மையில், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதில் பெண்ணின் வயது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஆணின் வயதும் முக்கியமே.

இந்தக் காலத்தில் ஆண்கள், பெண்கள் இருவருமே வேலை, பொருளாதார ரீதியான நிறைவு, வாழ்க்கையில் செட்டிலாவது  என பல காரணங்களுக்காக திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். அதன் விளைவாக குழந்தைப்பேறும் தள்ளிப்போகிறது. பெண்களுக்கு வயதாக, ஆக கருமுட்டைகளின் இருப்பு எப்படி குறைந்துகொண்டே வருமோ, ஆண்களுக்கும் சில விஷயங்களில் பிரச்னை ஏற்படும்.

குழந்தை

அதாவது, வயதாக ஆக, உயிரணுக்களின் தரம் குறையும். விந்தணுக்களின் அளவும் குறையத் தொடங்கும். அது மட்டுமன்றி உயிரணுக்களில் மரபணு ரீதியான திரிபு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவாக, உருவாகும் கருவானது தரமற்றதாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

வயது முதிர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகள் வரலாம். லுகிமியா உள்ளிட்ட புற்றுநோய்கள் தாக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஸ்கீஸோஃபெர்னியா, ஆட்டிசம் போன்ற நரம்பியல் பாதிப்புகளுக்கும் அந்தக் குழந்தை உள்ளாகலாம். குழந்தை உடல் பருமனால் பாதிக்கப்படலாம்.  தாய்க்கு குறைப் பிரசவம் நிகழலாம்.

குழந்தை

எனவே மேற்குறிப்பிட்ட விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு, சரியான வயதில் உள்ள ஆணைத் திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...