Skip to main content

Doctor Vikatan: காய்ச்சலின்போதான உடல்வலி... பெயின் கில்லர் எடுப்பது சரியா?

Doctor Vikatan: காய்ச்சல் அடிக்கும்போது உடல்வலி, தலைவலி வருகிறதே... அந்த நேரத்தில் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது உதவுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்

காய்ச்சல் வரும்போது உடல்வலி இருப்பது இயல்புதான். பெரும்பாலான மக்களும் காய்ச்சல் இருப்பதை மருத்துவரிடம் சொல்லாமல், கை, கால் வலி, முதுகுவலி, வயிற்றுவலி, தலைவலி என ஏதோ ஒரு வலியை பிரதானப்படுத்தியே மருந்து கேட்பதைப் பார்க்க முடிகிறது.

மருத்துவர்களை அணுகும்போது, இருமல், சளி, மூக்கடைப்பு இருக்கிறதா என்றுதான் நோயாளிகளிடம் முதலில் கேட்பார்கள். இந்த அறிகுறிகள் இருந்தால் சுவாசப்பாதையில் கிருமிகள் இருக்கின்றனவா என்று பார்ப்போம். வயிற்றுவலியோ, வாந்தி, பேதியோ இருப்பதாகச் சொன்னால் குடலில் கிருமிகள் இருக்கலாம் என சந்தேகப்படுவோம். 

சளி

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தாலோ, அடி வயிற்றில் வலி இருந்தாலோ சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று இருக்கிறதா என பார்ப்போம்.  பெண்களுக்கு அடி வயிற்றில் வலி இருப்பதாகச் சொன்னால் பிறப்புறுப்பிலோ, கர்ப்பப்பை, சினைப்பை பகுதிகளிலோ கிருமிகள் இருக்கின்றனவா என பார்ப்போம். கை, கால்களில் புண்கள் இருந்தாலும் அவற்றிலிருந்து நெறி கட்டி வலியும் காய்ச்சலும் ஏற்பட்டிருக்கலாம்.

ஏற்கெனவே சைக்கிள் ஓட்டுபவராக இருந்து அவருக்கு மூட்டுவலி இருந்தால், காய்ச்சலின்போது அவருக்கு அந்த வலி இன்னும் அதிகமாக இருக்கலாம். காய்ச்சலைக் குறிப்பிடாமல், மூட்டுவலியை  மட்டும் குறிப்பிட்டால், அனுபவமற்ற பெரும்பாலான மருத்துவர்கள் வலி நிவாரணிகளையே பரிந்துரைப்பார்கள். அது காய்ச்சலையும் குணப்படுத்தாது, வயிற்று வலியையும் ஏற்படுத்திவிடும்.

மாத்திரை

எனவே காய்ச்சல் வந்தால் உடல்வலி இருக்கும், ஏற்கெனவே வலி உள்ளவர்களுக்கு அந்தப் பகுதிகளில் வலி இன்னும் சற்று அதிகமாக இருக்கும் என்பதை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.  வலியை மட்டுமே பிரதானப்படுத்தி மருத்துவரிடம் சொல்லும்போது நீங்களாகவே வலி நிவாரணிகளைப் பரிந்துரைக்க மருத்துவரை மறைமுகமாகக் கட்டாயப்படுத்துகிறீர்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். தேவையின்றி வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது சரியானதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.  உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் காய்ச்சல் மருந்தை எடுத்துக்கொண்டாலே சிலமணி நேரத்தில் வலி சரியாவதை உணர்வீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...