Skip to main content

ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுக்க, இதையெல்லாம் கண்டிப்பா செய்யுங்க..! - மருத்துவர் அறிவுறுத்தல்!

மழைக்காலம் என்பதால் தமிழகத்தில் காய்ச்சல், இருமல், சளித் தொந்தரவு போன்ற பிரச்னைகள் பரவலாக இருப்பதைக் காண முடிகிறது. இந்நிலையில், ``தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் ஃப்ளூ காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

மழை

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" என்று என்று தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஃப்ளூ காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது என்றும் செய்திகள் வெளியாகின்றன.

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் விஷால்.

''குளிர்காலத்தில் அதிகமாகத் தொற்று நோய்கள் பரவக்கூடும். பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பாதிக்கலாம்.

cold and fever

Influenza- A, B, மற்றும் C வைரஸ் மூலமாக இந்த நோய் பரவுகிறது. இது வைரஸ் நோய்த்தொற்று என்பதால் உடல் சோர்வு, சளி, மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். தற்போது இன்ஃப்ளூயென்சா வைரஸ் மட்டுமன்றி H1N1 மற்றும் H3N2 ஆகிய வைரஸ் மூலமாகவும் ஃப்ளூ காய்ச்சல்கள் பரவி வருகின்றன.

இந்த வைரஸ் காய்ச்சலானது, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது. ஒருவர் இருமும்போதும் தும்மும்போதும் வைரஸ் வேகமாகப் பரவுகிறது. பொதுவாக ஏழு நாள்களுக்கு காய்ச்சலின் தாக்கம் இருக்கும்.

தும்மல்

உயர் ரத்தஅழுத்தம், ஆஸ்துமா, இதயநோய் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது மிகவும் அவசியம் ஆகும்.

ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழி முறைகள்:

1. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். அடுத்தவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

2. தொண்டை வலி இருந்தால் வெந்நீரில் உப்பு போட்டு வாய்க் கொப்பளிக்க வேண்டும்.

அடுத்தவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிப்பதை தவிர்த்துவிடுவது நல்லது.

3. வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின் கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகு வீட்டிற்குள் நுழைய வேண்டும். அடிக்கடி கை கழுவுவதும் நல்லது.

4. வைட்டமின்- சி மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. முக்கியமாக வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்துகொண்டால் நோய் பரவுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

6. இருமும்போதும் தும்மும்போதும் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

மருத்துவர் விஷால்

7. இந்தியாவில் இன்ஃப்ளூயென்சா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமில்லை. இருப்பினும் முதியோர், இதயநோய், HIV தொற்று, சர்க்கரைநோய், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தேவைப்பட்டால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் என்பதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். உடல்வலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும் என்பதால் போதிய ஓய்வு எடுக்க வேண்டும்.

mask

தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டால் தொற்று நோய்கள் பரவுவதைத் தவிர்க்கலாம். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்றபடி செயல்பட்டால் இம்மாதிரியான நோய்கள் பரவுவதைத் தவிர்க்கவும், பாதிப்பு ஏற்பட்டால் எளிதில் குணமடையவும் முடியும்" என்றார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...