Skip to main content

ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுக்க, இதையெல்லாம் கண்டிப்பா செய்யுங்க..! - மருத்துவர் அறிவுறுத்தல்!

மழைக்காலம் என்பதால் தமிழகத்தில் காய்ச்சல், இருமல், சளித் தொந்தரவு போன்ற பிரச்னைகள் பரவலாக இருப்பதைக் காண முடிகிறது. இந்நிலையில், ``தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் ஃப்ளூ காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

மழை

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" என்று என்று தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஃப்ளூ காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது என்றும் செய்திகள் வெளியாகின்றன.

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் விஷால்.

''குளிர்காலத்தில் அதிகமாகத் தொற்று நோய்கள் பரவக்கூடும். பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பாதிக்கலாம்.

cold and fever

Influenza- A, B, மற்றும் C வைரஸ் மூலமாக இந்த நோய் பரவுகிறது. இது வைரஸ் நோய்த்தொற்று என்பதால் உடல் சோர்வு, சளி, மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். தற்போது இன்ஃப்ளூயென்சா வைரஸ் மட்டுமன்றி H1N1 மற்றும் H3N2 ஆகிய வைரஸ் மூலமாகவும் ஃப்ளூ காய்ச்சல்கள் பரவி வருகின்றன.

இந்த வைரஸ் காய்ச்சலானது, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது. ஒருவர் இருமும்போதும் தும்மும்போதும் வைரஸ் வேகமாகப் பரவுகிறது. பொதுவாக ஏழு நாள்களுக்கு காய்ச்சலின் தாக்கம் இருக்கும்.

தும்மல்

உயர் ரத்தஅழுத்தம், ஆஸ்துமா, இதயநோய் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது மிகவும் அவசியம் ஆகும்.

ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழி முறைகள்:

1. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். அடுத்தவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

2. தொண்டை வலி இருந்தால் வெந்நீரில் உப்பு போட்டு வாய்க் கொப்பளிக்க வேண்டும்.

அடுத்தவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிப்பதை தவிர்த்துவிடுவது நல்லது.

3. வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின் கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகு வீட்டிற்குள் நுழைய வேண்டும். அடிக்கடி கை கழுவுவதும் நல்லது.

4. வைட்டமின்- சி மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. முக்கியமாக வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்துகொண்டால் நோய் பரவுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

6. இருமும்போதும் தும்மும்போதும் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

மருத்துவர் விஷால்

7. இந்தியாவில் இன்ஃப்ளூயென்சா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமில்லை. இருப்பினும் முதியோர், இதயநோய், HIV தொற்று, சர்க்கரைநோய், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தேவைப்பட்டால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் என்பதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். உடல்வலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும் என்பதால் போதிய ஓய்வு எடுக்க வேண்டும்.

mask

தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டால் தொற்று நோய்கள் பரவுவதைத் தவிர்க்கலாம். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்றபடி செயல்பட்டால் இம்மாதிரியான நோய்கள் பரவுவதைத் தவிர்க்கவும், பாதிப்பு ஏற்பட்டால் எளிதில் குணமடையவும் முடியும்" என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...