Skip to main content

`குரல் முக்கியம் பிகிலு!' - மாஸ்டர் வாய்ஸ் செக் அப்: சென்னையில் புதிய முயற்சி..!

'அவங்க குரல் கிளி மாதிரி இருக்கும்', 'அவரு பேசுனாலே கணீர்னு இருக்கும்', 'தொண்டை கட்டிடுச்சு...அதனால தான் குரல் இப்படி இருக்கு' என்று நம்மை அறியாமலே குரல் மீது அதிக ஈர்ப்பும், கவனமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இப்படிப்பட்ட குரலைப் பராமரிக்க சென்னையில் உள்ள 'The Base ENT' மருத்துவமனையில் புதியதாக 'Voice Wellness Clinic' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ENT சர்ஜன் டாக்டர் நரேந்திரன்

Voice Wellness Clinic குறித்தும், குரல் பராமரிப்பு குறித்தும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர் நரேந்திரன் கூறுகிறார்...

''எல்லாருக்கும் குரல் என்பது மிக முக்கியம். அதுவும் மேடைப் பேச்சாளர்கள், பாடகர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு குரல் இல்லாமல் வேலையே இல்லை. அதனால் இவர்களுக்கு தொண்டை கட்டல், தொண்டை அடைத்தல், தொடர்ந்து பேசும்போது இருமல், குரல் கம்மல் ஆகிய பிரச்னைகள் இருந்துகொண்டே தான் இருக்கும். இந்தப் பிரச்னைகள் மிகவும் மோசமாகும்போது தான் இவர்கள், டாக்டர்களிடமே செல்வார்கள்.

இந்த மாதிரி இல்லாமல் குரல் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும், எந்தப் பிரச்னையும் வராமல் தடுக்கவும் மாஸ்டர் வாய்ஸ் செக் அப் எடுப்பது தான் வாய்ஸ் வெல்னெஸ் கிளினிக்கின் முக்கிய நோக்கம்.

எதனால் குரல் பாதிப்பு ஏற்படுகிறது?

எதனால் குரல் பாதிப்பு ஏற்படுகிறது?

பலரும் உடலுக்கு தரும் முக்கியத்துவத்தை குரலுக்குத் தருவதில்லை. சரியான நேரத்திற்கு சாப்பிடாதது, அதிக சத்தத்துடன் பேசுவது, அதிகம் பேசுவது, மது குடிப்பது, புகை பிடிப்பது ஆகியவை குரல் பாதிப்பதற்கு முக்கிய காரணங்கள்.

நாம் சரியாக சாப்பிடாத போது, வயிற்றில் சுரக்கும் அமிலம் தொண்டைக்கு ஏறி குரல் வளையை பாதித்து, குரலை மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ், வெந்நீர்...

ஐஸ்கிரீம் சாப்பிட்டால்...கூல் டிரிங்க்ஸ் குடித்தால் அனைவருக்கும் குரல் பாதிக்கும் என்பதில்லை. ஆனால் குரல் பாதித்தால் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

பொதுவாக குரல் சம்பந்தமான தொழில் செய்வோருக்கு குரல் நன்றாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம். அதனால் இவர்கள் குளிர்ந்த உணவுகள், கார உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். சுடுதண்ணீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் சுடு தண்ணீர் அப்போதைக்குதான் தீர்வைத் தரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

ஐஸ்கிரீம் குரலை பாதிக்குமா?

வாய்ஸ் வெல்னெஸ் கிளினிக் என்றதும் சிகிச்சை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது மாஸ்டர் வாய்ஸ் செக் அப் செய்வதற்கான இடம். கிளினிக்கிற்கு வந்தால் குரலைப் பரிசோதித்து, அவர்களுடைய லைஃப்ஸ்டைலை கேட்டறிந்து உணவுமுறை ஆலோசனைகள் கொடுக்கப்படும். மேலும் ஒவ்வொருவரின் குரல் சம்பந்தமான ரெக்கார்டும் பராமரிக்கப்படும்" என்று விளக்கினார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...