Skip to main content

பிக்பாஸ் மாயாவுக்கு ADHD Syndrome - என்றால் என்ன? அறிகுறிகள், சிகிச்சைகள் - மருத்துவர் விளக்கம்!

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டதில் இருந்து அங்கு நடக்கும் பல விஷயங்கள் மக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. 

யாரை வீழ்த்த வேண்டும், யாரை பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என சிந்தித்து காய் நகர்த்தி ஆட்டத்தை விறுவிறுவாக்குபவர் மாயா. என்னதான் ஹவுஸ்மேட்ஸ் சொல்வது போல் இவர் விரிக்கும் வலைக்குள் இவரே விழுந்தாலும் ஆட்டத்தை கச்சிதமாகப் புரிந்து கொண்டவர்களில் மாயாவும் ஒருவர். இவர் உள்ளே இருக்கும்வரை ட்விஸ்ட்களுக்கு பஞ்சமில்லை என்றே தோன்றுகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்குப் பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வெற்றி, தோல்வி, சிறந்த பர்ஃபார்மன்ஸ் அடிப்படையில் அவர்களுக்கு ஸ்டார்கள் வழங்கப்படும்.

மாயா

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் `பூகம்பம் டாஸ்க்’ விளையாடப்பட்டது. போட்டியாளர்கள் தங்களது வாழ்வை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வை சக போட்டியாளார்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

பூகம்பம் டாஸ்க்கில், மாயா தனது கல்லூரி வாழ்க்கை, அம்மாவின் உடல்நலச் சிக்கல், படிப்பதில் ஏற்பட்ட சிரமம் போன்றவற்றை பேசி இருந்தார். அப்போது, தனக்கு சிறுவயதில் ஏடிஹெச்டி சிண்ட்ரோம் (ADHD Syndrome) இருந்ததாகக் குறிப்பிட்டு இருந்தார்.

ஏடிஹெச்டி பாதிப்பு ஏற்பட என்ன காரணம், அதன் அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்த விரிவான விளக்கத்தை மனநல மருத்துவர் பூங்கொடி பாலா பகிர்கிறார்...

``ஏடிஹெச்டி மூளையின் கட்டுப்பாடோடு தொடர்புடைய பிரச்னை. இதை டெவெலப்மென்டல் கன்டிஷன் (Developmental Condition) என்போம். பிறந்ததில் இருந்தே இந்தப் பிரச்னை இருக்கும். 

மனநல மருத்துவர் பூங்கொடி பாலா!

AD என்பது கவனக்குறைவு (Attention Deficit); HD என்பது ஹைப்பர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Hyperactivity disorder).

ஏடிஹெச்டி பாதிப்புள்ள குழந்தைகளுக்குக் கவனக் குறைவு இருக்கும். எளிதாக டிஸ்ட்ராக்ட் ஆகி விடுவார்கள். துறுதுறுவென இருப்பார்கள். ஹைப்பர் ஆக்டிவிட்டி அதிகமாக இருக்கும். மற்ற குழந்தைகள் அரை மணிநேரம் உட்கார்ந்து பாடத்தை கவனித்தால், இந்தக் குழந்தைகள் 10 நிமிடம் கூட உட்கார மாட்டார்கள். எழுந்து ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

அதோடு சட்டெனெ கட்டுப்பாடு இல்லாமல் ரியாக்ட் (Impulsivity) செய்து விடுவார்கள். உதாரணத்திற்கு தவறு எனத் தெரிந்தால் உடனடியாக கோபமடைவது, எதையாவது தூக்கி வீசுவது போன்றவற்றைச் செய்வார்கள். அதன்பிறகு மன்னிப்பும் கேட்பார்கள். சில நேரங்களில் கடகடவெனப் பேசுவார்கள்.  

லேசான மற்றும் கடுமையான தீவிர நிலைகள் இதில் இருக்கின்றன. லேசான நிலையில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர், அந்தச் சூழலோடு ஒத்துப்போய் படிப்படியாக குணமடைவார்கள். தீவிர நிலையில் இடையூறு விளைவிக்கும் நடத்தையோடு (Disruptive Behaviour) இருக்கும்பட்சத்தில்,  மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

குழந்தைக்கான மனநல மருத்துவர்  இவர்களை பரிசோதித்து ஆக்குபேஷனல் தெரபி (Occupational therapy) வழங்குவார். இந்த தெரபியில் குழந்தை உட்காராமல் ஓடிக்கொண்டே இருந்தால், சிறிது நேரம் உட்காரும் அளவிற்குப் பயிற்சி கொடுக்கப்படும். அவர்களின் நிலையைப் பொறுத்து சில நேரங்களில் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும்.

மருந்துகளை பொறுத்தவரையில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்படும். அவர்களின்  நிலைக்கு ஏற்ப தெரபி அல்லது மருந்துகள் கொடுக்கப்பட்டும். இயற்கையாகவே குழந்தை வளர வளர ஹைப்பர் ஆக்டிவிட்டி குறைந்துவிடும். அதுவே கவனம் மேம்படுமா என்றால் சிலருக்கு மாறலாம், சிலருக்கு படிப்பதில் பிற்காலத்தில் பிரச்னை வரலாம். ஃபோகஸ் குறையலாம். இரண்டு விஷயங்களைச் சொன்னால் ஒன்றை மறந்து ஒன்றை மட்டும் செய்யலாம்.  

இவர்களுக்குக் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களோடு இருந்தால் எளிதாக கவனச் சிதறல் ஏற்படலாம். மருந்து, அல்லது கவனத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  

குழந்தை

முதலில் பெற்றோர்கள் இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் பலரும் இப்படி இருக்கும் குழந்தைகளை `குறும்புக்கார குழந்தை’ என்றுதான் சொல்லுவார்கள். குழந்தைக்கு இதுபோன்ற பிரச்னை உள்ளது என்று புரிந்து கொள்ள மாட்டார்கள். எனர்ஜி அதிகமாக இருக்கும் குழந்தைகளை, `தூங்குவதே இல்லை, இரவெல்லாம் விழித்துக் கொண்டே இருக்கிறார்கள்' எனப் பெற்றோர்கள் கூறுவதுண்டு. அவர்களை நன்றாக விளையாட விடலாம். அப்போது எனர்ஜி குறைந்து தூங்குவார்கள். 

இந்த பாதிப்பு ஏற்பட பல காரணிகள் இருக்கலாம். பரம்பரையாக வரலாம், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வரலாம், பிறக்கும் போது உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், மூளையில் உள்ள சில ரசாயனங்கள் குறையும்போதும், ரசாயனங்கள் சமநிலையில் இல்லாத போதும் வரலாம், பிறக்கும்போது அல்லது பிறந்த பிறகு மூளையில் டேமேஜ் (brain damage)  ஏற்பட்டாலும் வரலாம்.  

இது தவிர ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகள், IQ குறைவாக உள்ள குழந்தைகள், படிப்பதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகளோடு கூடுதலாக ஏடிஹெச்டி பாதிப்பும் வரலாம்’’ என்றார்.

அனைத்து மனிதர்களின் பின்னும் ஒரு கதை இருக்கிறது, கஷ்டம் இருக்கிறது. அவையே பல நேரங்களில் அந்த மனிதரின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்திருக்கிறது. நம்பிக்கையோடு இருப்போம்...

பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை தாக்குப்பிடிப்பார் என்று நீங்கள் நினைப்பது யாரை? கமென்டில் சொல்லுங்கள்!


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

"புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான குறிக்கோள் !" - Dr. அரவிந்தன் செல்வராஜ்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை 'K10K' மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளது கடந்தாண்டும் இதே போன்றொரு மாரத்தான் போட்டியை காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆண்டு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700 நபர்கள் பங்கேற்றனர். 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி புற்றுநோயை கண்டறிந்து அதனை தடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருகிணைக்கப்பட்டது. 10 கி.மீ மாரத்தான் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், 5 கி.மீ மாரத்தான் போட்டியை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Marathon இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், "நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...