Skip to main content

USA: துப்பாக்கியுடன் சுற்றும் இளைஞர்... 22 பேர் பலி - வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை!

அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள மைனே (Maine) மாநிலத்தின் லெவிஸ்டன் பகுதியில் இருக்கும் பௌலிங் விளையாட்டு அரங்கம், உணவு விடுதி, வால்மார்ட் விநியோக மையம் ஆகிய மூன்று இடங்களில் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. யார் என அடையாளம் காணப்படாத நபர் கைகளில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுக் கொலை செய்கிறார். அவரின் சாரமாரியான துப்பாக்கிச்சூட்டுக்கு இதுவரை 22 அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சுமார் 50 முதல் 60 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். ஜி 7 மாநாட்டில் ஜோ பைடன்

அதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறை தீவிரமாக முன்னெடுத்திருக்கிறது. மேலும், மாநில காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில், “லெவிஸ்டனில் துப்பாக்கியுடன் ஒருவர் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே, குடிமக்கள் தங்களின் இல்லங்களில், வீட்டைப் பூட்டிக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள். யாரும் வெளியே நடமாட வேண்டாம். உங்கள் பகுதியில் எதாவது சந்தேகத்துக்குரிய நபர்கள் உலா வந்தால் 911 என்ற எண்ணுக்கு அழைத்துத் தெரியப்படுத்தவும்." என்று பதிவிட்டு, இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட மர்ம நபரின் மூன்று புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விசாரித்து அறிந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பிறகு அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. மே 2022-ம் ஆண்டு டெக்சாஸின் உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். 2022-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 647 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மே 2022-ல் நடந்த துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு மிக மோசமாக நடந்த துப்பாக்கிச்சூடு இது என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
அமெரிக்கா: யூத அரசியல் செயற்பாட்டாளர் கொலை; இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலியா? - போலீஸ் விசாரணை!


http://dlvr.it/Sxyp7h

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...