Skip to main content

USA: துப்பாக்கியுடன் சுற்றும் இளைஞர்... 22 பேர் பலி - வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை!

அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள மைனே (Maine) மாநிலத்தின் லெவிஸ்டன் பகுதியில் இருக்கும் பௌலிங் விளையாட்டு அரங்கம், உணவு விடுதி, வால்மார்ட் விநியோக மையம் ஆகிய மூன்று இடங்களில் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. யார் என அடையாளம் காணப்படாத நபர் கைகளில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுக் கொலை செய்கிறார். அவரின் சாரமாரியான துப்பாக்கிச்சூட்டுக்கு இதுவரை 22 அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சுமார் 50 முதல் 60 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். ஜி 7 மாநாட்டில் ஜோ பைடன்

அதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறை தீவிரமாக முன்னெடுத்திருக்கிறது. மேலும், மாநில காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில், “லெவிஸ்டனில் துப்பாக்கியுடன் ஒருவர் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே, குடிமக்கள் தங்களின் இல்லங்களில், வீட்டைப் பூட்டிக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள். யாரும் வெளியே நடமாட வேண்டாம். உங்கள் பகுதியில் எதாவது சந்தேகத்துக்குரிய நபர்கள் உலா வந்தால் 911 என்ற எண்ணுக்கு அழைத்துத் தெரியப்படுத்தவும்." என்று பதிவிட்டு, இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட மர்ம நபரின் மூன்று புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விசாரித்து அறிந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பிறகு அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. மே 2022-ம் ஆண்டு டெக்சாஸின் உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். 2022-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 647 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மே 2022-ல் நடந்த துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு மிக மோசமாக நடந்த துப்பாக்கிச்சூடு இது என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
அமெரிக்கா: யூத அரசியல் செயற்பாட்டாளர் கொலை; இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலியா? - போலீஸ் விசாரணை!


http://dlvr.it/Sxyp7h

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...