Skip to main content

USA: துப்பாக்கியுடன் சுற்றும் இளைஞர்... 22 பேர் பலி - வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை!

அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள மைனே (Maine) மாநிலத்தின் லெவிஸ்டன் பகுதியில் இருக்கும் பௌலிங் விளையாட்டு அரங்கம், உணவு விடுதி, வால்மார்ட் விநியோக மையம் ஆகிய மூன்று இடங்களில் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. யார் என அடையாளம் காணப்படாத நபர் கைகளில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுக் கொலை செய்கிறார். அவரின் சாரமாரியான துப்பாக்கிச்சூட்டுக்கு இதுவரை 22 அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சுமார் 50 முதல் 60 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். ஜி 7 மாநாட்டில் ஜோ பைடன்

அதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறை தீவிரமாக முன்னெடுத்திருக்கிறது. மேலும், மாநில காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில், “லெவிஸ்டனில் துப்பாக்கியுடன் ஒருவர் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே, குடிமக்கள் தங்களின் இல்லங்களில், வீட்டைப் பூட்டிக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள். யாரும் வெளியே நடமாட வேண்டாம். உங்கள் பகுதியில் எதாவது சந்தேகத்துக்குரிய நபர்கள் உலா வந்தால் 911 என்ற எண்ணுக்கு அழைத்துத் தெரியப்படுத்தவும்." என்று பதிவிட்டு, இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட மர்ம நபரின் மூன்று புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விசாரித்து அறிந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பிறகு அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. மே 2022-ம் ஆண்டு டெக்சாஸின் உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். 2022-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 647 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மே 2022-ல் நடந்த துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு மிக மோசமாக நடந்த துப்பாக்கிச்சூடு இது என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
அமெரிக்கா: யூத அரசியல் செயற்பாட்டாளர் கொலை; இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலியா? - போலீஸ் விசாரணை!


http://dlvr.it/Sxyp7h

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...