Skip to main content

Israel-Hamas War: ``மீண்டும் சிலுவைப் போர் ஏற்படும் சூழலை உருவாக்குகின்றனர்!" - துருக்கி அதிபர்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே கடந்த மூன்று வாரங்களாகப் போர் நடைபெற்றுவருகிறது. அக்டோபர் 7-ல் ஹமாஸ் தாக்கிய பிறகு, பதிலடி என்ற பெயரில் இஸ்ரேல் இன்றுவரை பாலஸ்தீனத்தின் காஸா மீது போர் தொடுத்துவருகிறது. முதலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் அப்பாவி இஸ்ரேலியர்களும், அதன் பிறகு இன்றுவரை இஸ்ரேல் நடத்திவரும் பதில் தாக்குதலில் 7,700-க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.இஸ்ரேல் - அமெரிக்கா

இவ்வாறு கிட்டத்தட்ட 9,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும்கூட, போர் நிறுத்தத்துக்கு குரல் கொடுக்காமல் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகள் இஸ்ரேல் தாக்குதலை ஆதரிக்கின்றன. அதோடு, போரை நிறுத்தவேண்டி ஐ.நா-வில் ரஷ்யா, சீனா கொண்டு வந்த தீர்மானத்தைக்கூட அமெரிக்கா வீழ்த்தியது. மேலும், நேற்று முன்தினம் ஐ.நா-வில் ஜோர்டான் சார்பில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தின்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 120 நாடுகள் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்றபெயரில் வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டது இந்தியா.

இந்த நிலையில், மேற்குலக நாடுகள் கிறிஸ்தவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக, சிலுவைப் போர் சூழலை உருவாக்குவதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) குற்றம்சாட்டியிருக்கிறார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று அவரது கட்சி நடத்திய பாலஸ்தீனிய ஆதரவு பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய எர்டோகன், ``காஸாவில் நடந்த படுகொலைகளுக்குப் பின்னாலிருக்கும் முக்கிய குற்றவாளி மேற்குலகம்தான். அங்கு நடந்த படுகொலைகள் முழுக்க முழுக்க மேற்குலகின் செயல். இஸ்ரேல் ஒரு போர்க் குற்றவாளிபோல நடந்து கொள்கிறது. நிச்சயமாக, ஒவ்வொரு நாட்டுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், இந்த விவகாரத்தில் நீதி எங்கே இருக்கிறது...துருக்கி அதிபர் எர்டோகன்

உக்ரைன் பொதுமக்கள் மரணங்களுக்கு கண்ணீர் வடிக்கும் மேற்குலக நாடுகள், பாலஸ்தீன குடிமக்களின் மரணங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கிறது. இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் மற்றும் அனைத்து பாசாங்குத்தனங்களுக்கும் எதிரானவர்கள் நாங்கள். இஸ்ரேலின் நட்பு நாடுகள் கிறிஸ்தவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக, சிலுவைப் போர் சூழலை உருவாக்குகின்றன. நீங்கள் மீண்டும் அத்தகைய மோதலை தொடங்க விரும்புகிறீர்களா? ... எனவே, உரையாடலுக்கான எங்கள் அழைப்பைக் கேளுங்கள், அமைதியில் யாரும் இழக்கப்படுவதில்லை" என்று கூறினார்.Israel - Hamas War: ``இரண்டாம் கட்ட போரை தொடங்கிவிட்டோம்; எதிரிகளை மண்ணுக்கு..!" - நெதன் யாகு சபதம்


http://dlvr.it/Sy7JnV

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...