Skip to main content

Israel-Hamas War: ``மீண்டும் சிலுவைப் போர் ஏற்படும் சூழலை உருவாக்குகின்றனர்!" - துருக்கி அதிபர்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே கடந்த மூன்று வாரங்களாகப் போர் நடைபெற்றுவருகிறது. அக்டோபர் 7-ல் ஹமாஸ் தாக்கிய பிறகு, பதிலடி என்ற பெயரில் இஸ்ரேல் இன்றுவரை பாலஸ்தீனத்தின் காஸா மீது போர் தொடுத்துவருகிறது. முதலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் அப்பாவி இஸ்ரேலியர்களும், அதன் பிறகு இன்றுவரை இஸ்ரேல் நடத்திவரும் பதில் தாக்குதலில் 7,700-க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.இஸ்ரேல் - அமெரிக்கா

இவ்வாறு கிட்டத்தட்ட 9,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும்கூட, போர் நிறுத்தத்துக்கு குரல் கொடுக்காமல் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகள் இஸ்ரேல் தாக்குதலை ஆதரிக்கின்றன. அதோடு, போரை நிறுத்தவேண்டி ஐ.நா-வில் ரஷ்யா, சீனா கொண்டு வந்த தீர்மானத்தைக்கூட அமெரிக்கா வீழ்த்தியது. மேலும், நேற்று முன்தினம் ஐ.நா-வில் ஜோர்டான் சார்பில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தின்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 120 நாடுகள் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்றபெயரில் வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டது இந்தியா.

இந்த நிலையில், மேற்குலக நாடுகள் கிறிஸ்தவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக, சிலுவைப் போர் சூழலை உருவாக்குவதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) குற்றம்சாட்டியிருக்கிறார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று அவரது கட்சி நடத்திய பாலஸ்தீனிய ஆதரவு பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய எர்டோகன், ``காஸாவில் நடந்த படுகொலைகளுக்குப் பின்னாலிருக்கும் முக்கிய குற்றவாளி மேற்குலகம்தான். அங்கு நடந்த படுகொலைகள் முழுக்க முழுக்க மேற்குலகின் செயல். இஸ்ரேல் ஒரு போர்க் குற்றவாளிபோல நடந்து கொள்கிறது. நிச்சயமாக, ஒவ்வொரு நாட்டுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், இந்த விவகாரத்தில் நீதி எங்கே இருக்கிறது...துருக்கி அதிபர் எர்டோகன்

உக்ரைன் பொதுமக்கள் மரணங்களுக்கு கண்ணீர் வடிக்கும் மேற்குலக நாடுகள், பாலஸ்தீன குடிமக்களின் மரணங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கிறது. இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் மற்றும் அனைத்து பாசாங்குத்தனங்களுக்கும் எதிரானவர்கள் நாங்கள். இஸ்ரேலின் நட்பு நாடுகள் கிறிஸ்தவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக, சிலுவைப் போர் சூழலை உருவாக்குகின்றன. நீங்கள் மீண்டும் அத்தகைய மோதலை தொடங்க விரும்புகிறீர்களா? ... எனவே, உரையாடலுக்கான எங்கள் அழைப்பைக் கேளுங்கள், அமைதியில் யாரும் இழக்கப்படுவதில்லை" என்று கூறினார்.Israel - Hamas War: ``இரண்டாம் கட்ட போரை தொடங்கிவிட்டோம்; எதிரிகளை மண்ணுக்கு..!" - நெதன் யாகு சபதம்


http://dlvr.it/Sy7JnV

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...