Skip to main content

Hijab: 12 நடிகைகள் திரைப்படங்களில் நடிக்கத் தடை! - இரான் அரசின் நடவடிக்கைக்குக் காரணம் என்ன?

இஸ்லாமியக் குடியரசு நாடான இரானில், இஸ்லாமியப் பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஆடைக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. இதில், கடந்த ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கைதுசெய்யப்பட்ட மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண், போலீஸ் காவலிலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், மக்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தி போராட்டத்துக்கு வழிவகுத்தது.ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் - இரான்

அத்தகைய போராட்டங்களில், போராட்டக்காரர்கள்மீது போலீஸார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டார். பலருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறு பல கொடுமைகள் அரங்கேறின. இதனால், இஸ்லாமிய அரசின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இரானில் இன்றளவும் தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.

ஐ.நா சபையும், இரானின் நடவடிக்கைகளை எச்சரித்தது. இருப்பினும் கடந்த செப்டம்பரில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. `ஹிஜாப் மசோதா' என்றழைக்கப்படும் இந்த மசோதா, அரசின் ஆடைக் கட்டுப்பாடுகளை மீறும் பெண்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகுக்கிறது. இந்த நிலையில், இரான் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம், ஹிஜாப் சட்டத்தை மீறியதாக 12 நடிகைகளை திரைப்படங்களில் நடிக்கத் தடைவிதித்திருக்கிறது.இரான்

முன்னதாக, தரனேஹ் அலிதூஸ்டி (Taraneh Alidoosti), கட்டயோன் ரியாஹி (Katayoun Riahi), ஃபதேமே மோடமேட்-ஆரியா (Fatemeh Motamed-Aria) ஆகியோர் உட்பட 12 நடிகைகள் ஹிஜாப் சட்டத்தை மீறுவதாக இரானிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இத்தகைய சூழலில், இன்று நடைபெற்ற வாராந்தர அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இரான் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சர் முகமது மெஹ்தி எஸ்மாலி (Mohammad Mehdi Esmaili), ``சட்டத்தைப் பின்பற்றாதவர்கள் வேலைசெய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன்படி, 12 நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று கூறினார்.ஹிஜாப் அணிவதைக் கண்காணிக்க கேமரா... தவறினால் சட்ட நடவடிக்கை - இரான் அரசு அறிவிப்பு!


http://dlvr.it/Sxynxb

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பக்கவாதம் வருமா?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாகவே எங்கே பார்த்தாலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணம் என்ன.... கொலஸ்ட்ரால் அளவுக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புண்டா? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஸ்ட்ரோக் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் Doctor Vikatan: அடிக்கடி வரும் நெஞ்சுவலி... அசிடிட்டி காரணமாகுமா? மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். மூளை என்பதை உங்கள் வீட்டிலுள்ள மெயின் மின்சார போர்டு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த போர்டு இயங்கவில்லை என்றால், வீட்டில் விளக்குகள் எரியாது, மின்விசிறி சுழலாது. இன்னும் டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என எந்த மின் சாதனமும் இயங்காது. வீடுகளில் 3 ஃபேஸ் மின் சப்ளை இருக்கும். மின்சாரம் தடைப்படும்போது மூன்றில் ஒரு ஃபேஸில் மட்டும் மின்சாரம் வரும். அதனால் குறிப்பிட்ட சில மின்சாதனங்கள் மட்டும் இயங்கும். மூளையின் செயல்பாடும் கிட்ட...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...