Skip to main content

Hijab: 12 நடிகைகள் திரைப்படங்களில் நடிக்கத் தடை! - இரான் அரசின் நடவடிக்கைக்குக் காரணம் என்ன?

இஸ்லாமியக் குடியரசு நாடான இரானில், இஸ்லாமியப் பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஆடைக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. இதில், கடந்த ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கைதுசெய்யப்பட்ட மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண், போலீஸ் காவலிலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், மக்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தி போராட்டத்துக்கு வழிவகுத்தது.ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் - இரான்

அத்தகைய போராட்டங்களில், போராட்டக்காரர்கள்மீது போலீஸார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டார். பலருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறு பல கொடுமைகள் அரங்கேறின. இதனால், இஸ்லாமிய அரசின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இரானில் இன்றளவும் தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.

ஐ.நா சபையும், இரானின் நடவடிக்கைகளை எச்சரித்தது. இருப்பினும் கடந்த செப்டம்பரில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. `ஹிஜாப் மசோதா' என்றழைக்கப்படும் இந்த மசோதா, அரசின் ஆடைக் கட்டுப்பாடுகளை மீறும் பெண்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகுக்கிறது. இந்த நிலையில், இரான் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம், ஹிஜாப் சட்டத்தை மீறியதாக 12 நடிகைகளை திரைப்படங்களில் நடிக்கத் தடைவிதித்திருக்கிறது.இரான்

முன்னதாக, தரனேஹ் அலிதூஸ்டி (Taraneh Alidoosti), கட்டயோன் ரியாஹி (Katayoun Riahi), ஃபதேமே மோடமேட்-ஆரியா (Fatemeh Motamed-Aria) ஆகியோர் உட்பட 12 நடிகைகள் ஹிஜாப் சட்டத்தை மீறுவதாக இரானிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இத்தகைய சூழலில், இன்று நடைபெற்ற வாராந்தர அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இரான் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சர் முகமது மெஹ்தி எஸ்மாலி (Mohammad Mehdi Esmaili), ``சட்டத்தைப் பின்பற்றாதவர்கள் வேலைசெய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன்படி, 12 நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று கூறினார்.ஹிஜாப் அணிவதைக் கண்காணிக்க கேமரா... தவறினால் சட்ட நடவடிக்கை - இரான் அரசு அறிவிப்பு!


http://dlvr.it/Sxynxb

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...