Skip to main content

Doctor Vikatan: அடிக்கடி உதடுகளில் வரும் கொப்புளங்கள்... பல்லி எச்சம்தான் காரணமா?

Doctor Vikatan: அடிக்கடி உதடுகளில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு புண்ணாகிவிடுகிறது. பல்லி சிறுநீர்பட்டால் இப்படி ஏற்படும் என்கிறார்களே... அது உண்மையா... தீர்வு என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னையை 'ஹெர்பஸ் தொற்று' (Herpes simplex ) என்பார்கள். இது ஒருவகையான வைரஸ் தொற்று. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியதும்கூட.  ஆனால் இந்தத் தொற்று பாதித்த பலருக்கும் அது தம்மிடமிருந்து மற்றவருக்குப் பரவும் என்ற விழிப்புணர்வே இருப்பதில்லை.

'ஹெர்பஸ் சிம்ப்ளெக்ஸ்'  தொற்றானது சிறு சிறு கொப்புளங்களையும் புண்களையும் ஏற்படுத்தும். வலியும் இருக்கும்.  இந்தத் தொற்றில் இருவகை உண்டு. ஒரு வகை தொற்றில் வாய் மற்றும் உதட்டுப் பகுதியைச் சுற்றி கொப்புளங்கள் வரும்.  இன்னொரு வகை தொற்றில் அந்தரங்க உறுப்பில் புண்கள், கொப்புளங்கள் வரும். 

டீ கிளாஸ் மூலம் பரவலாம்

நீங்கள் குறிப்பிட்டுள்ள உதட்டுப் பகுதி கொப்புளங்கள், சரியாகக் கழுவப்படாத டீ கிளாஸில் மற்றவரும் டீ குடிப்பது, தண்ணீர் குடிப்பது போன்றவற்றால் எளிதில் பரவும்.  இந்தத் தொற்று உள்ளவர்கள் மற்றவர்களை முத்தமிடுவதன் மூலமும் இது மற்றவருக்குப் பரவும்.

சிலவகை வைரஸ் தொற்றுகள் வரும்போதும் இந்த பாதிப்பு வரலாம். சிலவகை மருந்துகளின் பக்கவிளைவாலும் வாய் மற்றும் உதடுகளைச் சுற்றி கொப்புளங்கள் வரலாம். அப்படி வரும்போது மருத்துவ ஆலோசனையோடு ஆயின்மென்ட் உபயோகித்தாலே சரியாகிவிடும். 

பலரும் இதை பல்லி எச்சமிடுவதால் வருவதாகவே தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பல்லிக்கும் இதற்கும்  எந்தத் தொடர்பும் இல்லை.  இன்றைய நவீன மருத்துவத்தில் இந்தப் பிரச்னையைக் குணப்படுத்த நல்ல மருந்துகள் உள்ளன.

காய்கறிகள் சாப்பிடுவோருக்கு பிரச்னை இல்லை!

பி காம்ப்ளெக்ஸ் சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிடுவோருக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்னை வருவதில்லை. ஒருவருக்கு தொற்று வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களுக்கு அதைப் பரப்பாமல் இருப்பது நல்லது. வீட்டில் பெரியவர்களுக்கு வந்தால், குழந்தைகளுக்கு முத்தமிடுவது, தான் உபயோகித்த டம்ளர், தட்டு, டவல் போன்றவற்றைத் தனியே வைப்பது என கவனமாக இருக்க வேண்டும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...