Skip to main content

சேலம்: வாடகை கட்டடத்தில் காவல் நிலையம்; கழிப்பறை வசதிகூட இல்லாததால், அவதிக்குள்ளாகும் காவலர்கள்!

சேலம் மாநகரக் காவல்துறையில் 15-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. சுமார் 1,500-க்கும் மேற்பட்ட காவலர்களை உள்ளடக்கியும், 3 ஆயுதப்படைப் பிரிவுகளையும் கொண்டு சேலம் மாநகரக் காவல்துறை இயங்கி வருகிறது. மாநகரக் காவல் நிலைய எல்லையானது பரப்பளவில் குறைவாக இருந்தாலும், மாநகர எல்லைக்குள் வசிக்கக்கூடிய மக்கள்தொகை என்பது அதிகமாகும். இந்த நிலையில்தான், சமீபத்தில் தமிழக சட்டசபையில் சேலம் மாவட்டக் காவல்துறையின்கீழ் இயங்கி வந்த ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தையும், காரிப்பட்டி காவல் நிலையத்தையும் மாநகரக்குள் கொண்டுவருவதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பள்ளப்பட்டி காவல் நிலையம்

காரணம், மேற்கண்ட இரண்டு காவல் நிலையங்களும் ஒதுக்குபுறமாக அமைந்திருப்பதால், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் ஊடுருவலும், ரெளடிஸமும் அங்கு அதிகமாக இருப்பதாக மக்கள் கூறிவருகின்றனர். அதன் காரணமாகவே உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், மேற்கண்ட காவல் நிலையங்கள் மாநகருக்குள் இணைக்கப்பட்டிருக்கின்றன.    

அந்த வகையில் மாநகர எல்லையிலுள்ள முக்கிய காவல் நிலையங்களில் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கும் பள்ளப்பட்டி காவல் நிலையமும் ஒன்று. இங்கு 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், பெண் காவலர்களும் அடக்கம். இந்தக் காவல் நிலையமானது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில், வாடகைக்கு இயங்கி வருகிறது. ஆனால், இங்கு முறையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்கின்றனர். ஆபத்தான நிலையில் கட்டடம் இருந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இது குறித்து விஷயமறிந்த காவல் அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “தற்போது காவல் நிலையம் அமைந்திருக்கும் கட்டடத்தில், மழைக்காலங்களில் சாக்கடையுடன்கூடிய தண்ணீரானது உள்ளே புகுந்துவிடுகிறது. அதையும் தாண்டி பெண் காவலர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்கான கழிப்பிட வசதிக்கூட இல்லை. அவசரத்துக்கு பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கும் கழிப்பிடத்துக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதையும் தாண்டி விபத்து மற்றும் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலையிலேயே போடுகிறோம். இதெல்லாம் ஒரு நாள் இரண்டு நாளில் எடுக்கக்கூடிய வாகனங்களாக இருந்தால்கூட பரவாயில்லை. அனைத்தும் வழக்குகள் முடியும்வரையிலும் இங்குதான் கிடக்கின்றன.வழக்குகளில் சிக்கிய வாகனங்கள்

இதனால் காவல் நிலையத்துக்கு எதிரேயே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையெல்லாம் எங்கள் மேலதிகாரிகள்தான் அரசு கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், இதுவரை அப்படிச் சென்றதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், காவல் நிலைய பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் இரண்டு முறை குரல் எழுப்பினார். ஆனால் அதில் எந்தவித பலனும் இல்லை” என்றனர்.அருள், பா.ம.க எம்.எல்.ஏ

மேலும் இது குறித்து சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருளிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பிரச்னை குறித்து, நான் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தது உண்மைதான். ஆனால், அதனால் எந்த பலனும் இல்லை. தமிழக முதல்வரிடம்கூட இதுபற்றி தெரிவித்துவிட்டேன். ஆனால், அதிகாரிகள் மட்டத்தில் எந்தவித முயற்சிகளும் எடுக்கவில்லை. சமீபத்தில்கூட பள்ளப்பட்டி காவல் நிலையத்தை, அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்துக்கு மாற்றலாம் என்று பேச்சு அடிப்பட்டது. அதற்குள் சம்பந்தப்பட்ட வளாகம் அனைத்தும் டெண்டர் விடப்பட்டுவிட்டது” என்றார்.சுட்டிக்காட்டிய விகடன்; சேலம் மாநகரக் காவல்துறையில், ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்!ஏ.கே.விஷ்வநாத்

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டி.ஜி.பி ஏ.கே.விஸ்வநாத்திடம் பேசியபோது, “புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவிலிருந்து அப்ரூவல் கிடைத்து வந்த பிறகுதான், எங்களுக்கான வேலைகள் அதில் இருக்கும். இதற்கு இட வசதி, எவ்வளவு நிதிக்குள் கட்டடம் கட்ட வேண்டும் என்றெல்லாம் அரசு முடிவுசெய்து, எங்களுக்குத் தெரிவித்த பின்னரே, நாங்கள் எங்கள் தரப்பில் செய்ய வேண்டியதைச் செய்ய முடியும். இது குறித்து நானும் விசாரிக்கிறேன்” என்றார்.

இது தொடர்பாக சேலம் மாநகரக் காவல்துணை ஆணையர் கெளவுதம் கோயலிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு மாற்று இடம் பார்த்திருக்கிறோம். பேருந்து நிலையம் அருகேயே இருக்கும் மாநகராட்சிக் கட்டடத்தைத்தான் தேர்வு செய்திருக்கிறோம். இது குறித்து மாநகராட்சி ஆணையரிடமும் பேசியிருக்கிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் காவல் நிலையம் மாற்றியமைக்கப்படும்” என்றார்.மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

மேலும் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தரிடம் பேசியபோது, “இது தொடர்பாக நாங்கள் அனுமதி அளித்தது போன்று, எனக்குத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பதிலளிக்கிறேன்” என்றார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் பேசியபோது, “காவல்துறை சார்பாக சொந்த கட்டடம் கட்டுவதற்கு இடம் பார்த்துவருகின்றனர். அது இப்போது வரையிலும் அமையவில்லை. அப்படி இடம் தேர்வு செய்யப்பட்டால் அப்ரூவலுக்கு என்னிடம் வரும்” என்றார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
சேலம்: எடப்பாடி பெயர் பொறித்த கல்வெட்டுகள் உடைப்பு; கொதிக்கும் அதிமுக-வினர் - இது கல்வெட்டு களேபரம்!


http://dlvr.it/Sy3mvS

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...