Skip to main content

சீனா: `மாயமாகும் அமைச்சர்கள்... பதவி நீக்கம் செய்யும் அரசு!' - என்னதான் நடக்கிறது அங்கே?

சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு நெருக்கமாகத் திகழ்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு திடீரெனக் காணாமல் போன நிலையில், தற்போது அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் அதிபர் ஜி ஜின்பிங். ஏற்கெனவே இதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர் காணாமல் போனதும், அவர் பதவிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், சீனாவில் திடீரென்று அமைச்சர்கள் காணாமல் போவதும், அவர்கள் பதவி பறிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருவது சீன மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.சீன அதிபர் ஜி ஜின்பிங்

முதலில் காணாமல் போன வெளியுறவுத்துறை அமைச்சர்:

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் கேங்(Qin Gang) கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து காணாமல் போனார். கடைசியாக ஜூன் 25-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்ட கின் கேங் அதன்பிறகு நடைபெற்ற எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் தென்படவில்லை. சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்ட பிறகுதான் இப்படியொன்று நிகழ்ந்ததே வெளியுலகிற்கு தெரியவந்தது. ஒரு மாதம் கடந்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்தநிலையில்தான், கின் கேங் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சீனாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக வாங் யீ நியமிக்கப்பட்டார். `மூன்றாவது முறை சீன அதிபராகப் பதவியேற்ற ஜி ஜின்பிங்!' - இனி வாழ்நாள் வரை அவர்தான் சீன அதிபரா?

என்ன காரணம்: தொடக்கத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் பொது நிகழ்ச்சிகளில் கின் கேங் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல் பரவியது. பின்னர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு மற்றொரு ரகசியமும் கிசுகிசுத்தது. அதாவது, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஃபூ ஷியாவோடியன் (Fu Xiaotian) என்ற பெண்ணுடன் கின் கேங் ரகசிய உறவில் இருந்ததாகவும், சீன அரசின் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் திருமணத்தை மீறிய தொடர்பை வைத்துக்கொள்ளக்கூடாது என்பது அதிகாரப்பூர்வ உத்தரவு என்பதால் அந்த விதியை மீறிய கின் கேங் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன.கின் கேங் - தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஃபூ ஷியாவோடியன்

தற்போது காணாமல் போன பாதுகாப்புத்துறை அமைச்சர்:

சீன வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் கேங்கைப் போலவே, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த லி ஷாங்ஃபூவும் காணாமல் போனார். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சீனா-ஆப்பிரிக்கா அமைதி மற்றும் பாதுகாப்பு மன்றத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அதன்பிறகு பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாததால் தொடர்ந்து லி ஷாங்ஃபூவும் காணாமல் போய்விட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து ஷாங்ஃபூ நீக்கப்பட்டுவிட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறது. முறைப்படி ஷாங்ஃபூ நீக்கம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதிபர் ஜி ஜின்பிங் ஒப்புதலுடன் நீக்கப்பட்டிருக்கிறார். தைவான் விவகாரம்: ``போருக்குத் தயாராகுங்கள்...'' - சீன ராணுவத்துக்கு ஜி ஜின்பிங் போட்ட உத்தரவு!பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபூ

என்ன காரணம்: லி ஷாங்ஃபூ சீனப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து சீனா-அமெரிக்கா இடையேயான ராணுவப் பரிமாற்றங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சீனா ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிய விவகாரத்தையடுத்து லி ஷாங்ஃபூ தங்கள் நாட்டுக்கு வரக்கூடாது என அமெரிக்கா தடைவிதித்தது. அதபோல, இவர் அமைச்சராக இருந்தபோது சீனா தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கியதும் அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்காக அடுத்த மாதம் அமெரிக்க பாதுகாப்புத்துறை பிரதிநிதிகள் சீனாவுக்கு வரவிருக்கின்றனர். இந்தச் சூழலில் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட லி ஷாங்ஃபூ பாதுகாப்பு அமைச்சராக இருப்பது ஒத்துவராது என்பதால்தான் அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

`நீக்கப்படுவதெல்லாம் சரிதான்... காணாமல் போனவர்களின் கதி என்ன?' என்பதை சீன அரசாங்கமே மறைப்பதுதான் இங்கு புரியாத புதிர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk

``சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி!'' - ஜோ பைடன் விமர்சனம்


http://dlvr.it/Sxynbx

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பக்கவாதம் வருமா?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாகவே எங்கே பார்த்தாலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணம் என்ன.... கொலஸ்ட்ரால் அளவுக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புண்டா? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஸ்ட்ரோக் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் Doctor Vikatan: அடிக்கடி வரும் நெஞ்சுவலி... அசிடிட்டி காரணமாகுமா? மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். மூளை என்பதை உங்கள் வீட்டிலுள்ள மெயின் மின்சார போர்டு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த போர்டு இயங்கவில்லை என்றால், வீட்டில் விளக்குகள் எரியாது, மின்விசிறி சுழலாது. இன்னும் டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என எந்த மின் சாதனமும் இயங்காது. வீடுகளில் 3 ஃபேஸ் மின் சப்ளை இருக்கும். மின்சாரம் தடைப்படும்போது மூன்றில் ஒரு ஃபேஸில் மட்டும் மின்சாரம் வரும். அதனால் குறிப்பிட்ட சில மின்சாதனங்கள் மட்டும் இயங்கும். மூளையின் செயல்பாடும் கிட்ட...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...