Skip to main content

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா - காங்கிரஸ் தாக்கு!

இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியை மீட்பதாகக் கூறி, கடந்த 7-ம் தேதி, பாலஸ்தீனத்தின் போராளிக்குழுவான ஹமாஸ் அமைப்பு ஆயுதத் தாக்குதல் நடத்தியது. இதனால், இஸ்ரேல் - ஹமாஸ் போராளிக்குழுவுக்கு மத்தியில் போர் மூண்டது. இந்தப் போரில், 1,400 இஸ்ரேலியர்களும், 2,913 குழந்தைகள் உட்பட 7000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா, அரபு நாடுகள் பல்வேறு வகையில் முயன்று வருகின்றன.ஐநா

நேற்று ஐ.நா பொதுச் சபையின் 10-வது அவசரக்கால சிறப்பு அமர்வில் ஜோர்டான் சார்பில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதில், "பொதுமக்களின் பாதுகாப்பு, சட்ட மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்" என்ற விவாதத்தின் அடிப்படையில், இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 195 நாடுகளில் 120 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 14 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு எதிராகவும், இந்தியா ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்களிக்காமலும் புறக்கணித்திருக்கின்றன.

அதற்கான காரணம் குறித்து விளக்கிய இந்தியா,"அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் கண்டனத்திற்குத் தகுதியானவை. பயங்கரவாதத்துக்கு எல்லையோ, தேசியமோ, இனமோ தெரியாது. பயங்கரவாதச் செயல்களை எந்த நியாயப்படுத்துதலுக்கும் உலகம் விலைபோகக் கூடாது. வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்போம். பாலஸ்தீனத்தில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.பிரியங்கா காந்தி

சர்வதேச சமூகத்தின் மனிதாபிமான முயற்சிகளையும், காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதையும் நாங்கள் வரவேற்கிறோம். நேரடி சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்கும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறிப்பிட்டது. இந்தியாவின் இந்த முரண்பட்ட நிலைப்பாட்டுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "கண்ணுக்கு கண் எனப் பழிவாங்கினால் உலகம் முழுவதும் குருடாகும் என மகாத்மா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸாவில் போர் நிறுத்தத்திற்காக வாக்களிக்காமல் நமது நாடு புறக்கணித்து விலகியிருப்பது எனக்கு அதிர்ச்சியும் வெட்கமுமளிக்கிறது. அகிம்சை, உண்மை என்ற கொள்கைகளின் அடிப்படையில் நமது நாடு உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கைகளுக்காகவே நமது சுதந்திரப் போராளிகள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். இந்த கொள்கைகள்தான் நமது தேசத்தை வரையறுக்கும் அரசியலமைப்பின் அடிப்படையை உருவாக்குகின்றன. அதே நேரம் சர்வதேச சமூகத்தின் உறுப்பினராக அதன் நடவடிக்கைகளை வழிநடத்திய இந்தியாவின் தார்மீக தைரியத்தையும் அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பிரதமர் மோடி

மனித குலத்தின் மனிதாபிமான சட்டம் தூள் தூளாக்கப்பட்டு, உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள், தகவல் தொடர்பு, மின்சாரம் போன்றவற்றை பல லட்சக்கணக்கான மக்களுக்குச் சென்று சேர்வதை தடுக்கப்படுகிறது. எனவே, பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அழிக்கப்படுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதை எதிர்ப்பது இந்தியாவின் இந்தக் கொள்கைதான். ஆனால், இந்தியாவின் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் புறக்கணித்திருப்பது என்பது, நமது நாடு ஒரு தேசமாக அதன் வழிவழியாக நின்ற அனைத்து நிலைப்பாட்டுக்கும் எதிரானது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
இஸ்ரேல் - ஹமாஸ்: போர் நிறுத்த தீர்மானம்; 120 நாடுகள் ஆதரவு; வாக்காளிக்காத இந்தியா! - காரணம் என்ன?


http://dlvr.it/Sy5Wdb

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...