Skip to main content

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா - காங்கிரஸ் தாக்கு!

இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியை மீட்பதாகக் கூறி, கடந்த 7-ம் தேதி, பாலஸ்தீனத்தின் போராளிக்குழுவான ஹமாஸ் அமைப்பு ஆயுதத் தாக்குதல் நடத்தியது. இதனால், இஸ்ரேல் - ஹமாஸ் போராளிக்குழுவுக்கு மத்தியில் போர் மூண்டது. இந்தப் போரில், 1,400 இஸ்ரேலியர்களும், 2,913 குழந்தைகள் உட்பட 7000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா, அரபு நாடுகள் பல்வேறு வகையில் முயன்று வருகின்றன.ஐநா

நேற்று ஐ.நா பொதுச் சபையின் 10-வது அவசரக்கால சிறப்பு அமர்வில் ஜோர்டான் சார்பில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதில், "பொதுமக்களின் பாதுகாப்பு, சட்ட மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்" என்ற விவாதத்தின் அடிப்படையில், இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 195 நாடுகளில் 120 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 14 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு எதிராகவும், இந்தியா ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்களிக்காமலும் புறக்கணித்திருக்கின்றன.

அதற்கான காரணம் குறித்து விளக்கிய இந்தியா,"அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் கண்டனத்திற்குத் தகுதியானவை. பயங்கரவாதத்துக்கு எல்லையோ, தேசியமோ, இனமோ தெரியாது. பயங்கரவாதச் செயல்களை எந்த நியாயப்படுத்துதலுக்கும் உலகம் விலைபோகக் கூடாது. வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்போம். பாலஸ்தீனத்தில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.பிரியங்கா காந்தி

சர்வதேச சமூகத்தின் மனிதாபிமான முயற்சிகளையும், காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதையும் நாங்கள் வரவேற்கிறோம். நேரடி சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்கும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறிப்பிட்டது. இந்தியாவின் இந்த முரண்பட்ட நிலைப்பாட்டுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "கண்ணுக்கு கண் எனப் பழிவாங்கினால் உலகம் முழுவதும் குருடாகும் என மகாத்மா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸாவில் போர் நிறுத்தத்திற்காக வாக்களிக்காமல் நமது நாடு புறக்கணித்து விலகியிருப்பது எனக்கு அதிர்ச்சியும் வெட்கமுமளிக்கிறது. அகிம்சை, உண்மை என்ற கொள்கைகளின் அடிப்படையில் நமது நாடு உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கைகளுக்காகவே நமது சுதந்திரப் போராளிகள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். இந்த கொள்கைகள்தான் நமது தேசத்தை வரையறுக்கும் அரசியலமைப்பின் அடிப்படையை உருவாக்குகின்றன. அதே நேரம் சர்வதேச சமூகத்தின் உறுப்பினராக அதன் நடவடிக்கைகளை வழிநடத்திய இந்தியாவின் தார்மீக தைரியத்தையும் அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பிரதமர் மோடி

மனித குலத்தின் மனிதாபிமான சட்டம் தூள் தூளாக்கப்பட்டு, உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள், தகவல் தொடர்பு, மின்சாரம் போன்றவற்றை பல லட்சக்கணக்கான மக்களுக்குச் சென்று சேர்வதை தடுக்கப்படுகிறது. எனவே, பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அழிக்கப்படுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதை எதிர்ப்பது இந்தியாவின் இந்தக் கொள்கைதான். ஆனால், இந்தியாவின் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் புறக்கணித்திருப்பது என்பது, நமது நாடு ஒரு தேசமாக அதன் வழிவழியாக நின்ற அனைத்து நிலைப்பாட்டுக்கும் எதிரானது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
இஸ்ரேல் - ஹமாஸ்: போர் நிறுத்த தீர்மானம்; 120 நாடுகள் ஆதரவு; வாக்காளிக்காத இந்தியா! - காரணம் என்ன?


http://dlvr.it/Sy5Wdb

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...