Skip to main content

``கரும்பை எரிப்பதால் சிறுநீரக நோய் உண்டாகலாம்" எச்சரிக்கும் ஆய்வு... மருத்துவர்கள் சொல்வதென்ன?

கரும்பு மற்றும் நெற்பயிர்களை எரிப்பதால் சிறுநீரக நோய் ஏற்படும் என்று ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

கரும்பு மற்றும் நெற்பயிர்களை எரிப்பதால் அவற்றிலிருந்து நச்சுப்பொருள் வெளியாவதாகவும், இதனால் இந்தியா, இலங்கை, அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் உள்ள விவசாயத் தொழிலாளர்களிடையே மர்மமான சிறுநீரக நோய் ஏற்படுகிறது என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

விவசாயி (சித்தரிப்பு படம்)

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், உலகெங்கிலும் உடலுழைப்பை அதிகம் செலுத்தி வேலை செய்யும் விவசாயிகளிடையே நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பதைக் காணமுடிகிறது. 

வெப்ப அழுத்தம், காலநிலை மாற்றம் ஆகியவை இத்தகைய சிறுநீரகத் தொற்றுநோய்க்குக் காரணமாக இருந்தாலும், கரும்பு சாம்பலில் இருந்து வெளியிடப்படும் சிறிய சிலிக்கா துகள்களும் ஒரு காரணமாக இருக்கிறது. இது சுவாசத்தின் மூலமாகவோ அல்லது மாசுபட்ட குடிநீர் மூலமாகவோ மனிதருக்குள் சென்று நீண்டகால சிறுநீரக பாதிப்பை உண்டாக்குகிறது. 

மற்ற சிறுநீரக நோய்களுடன் ஒப்பிடும்போது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிறுநீரக திசுக்களில் குறிப்பிடத்தக்க அளவு சிலிக்கா துகள்கள் இருப்பதைக் காண முடிகிறது.

நெற்பயிர்களில் வேலை செய்பவர்களும் இவ்வித பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம். பொதுவாக நெற்பயிர்களை எரிக்கும் போதும் சிலிக்கா கொண்ட சாம்பல் வெளிப்படலாம் என்று கூறியுள்ளனர்.  

எரித்தல் (சித்தரிப்பு படம்)

இந்த ஆய்வின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரும் கொலராடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஜாரெட் பிரவுன் கூறுகையில், `` அறியப்படாத இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிறுநீரக திசுக்களில், நச்சுத்தன்மையை அடையாளம் காணக்கூடிய எந்த ஆய்வும் இன்றுவரை இல்லை. 

ஆனால் தற்போதுள்ள தரவின்படி காலநிலை மாற்றம், வெப்ப அழுத்தம் உள்ள சூழலில் கரும்பை எரிப்பதால் உண்டாகும் சாம்பலில் இருந்து வெளியேறும் நச்சுகளும் மர்மமான சிறுநீரக நோய்க்குக் காரணமாகலாம் என்று அறியப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...