Skip to main content

`அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் நாடுகளுக்குப் பதிலடி கொடுப்போம்!’ - அணு ஆயுத சோதனை செய்த ரஷ்யா

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 178 நாடுகள், 1996-ம் ஆண்டு அணு ஆயுதங்களைச் சோதனை செய்வதைத் தடை செய்ய ஒப்புக் கொண்டு சா்வதேச ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கின்றன. அதனால், புதிதாக அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை தவிர்த்து வந்தன. இந்த நிலையில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் எதிர்ப்பு தெரிவித்துப் தாக்குதலை தொடுத்து வருகிறது.ரஷ்ய நாடாளுமன்றம்

இதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தியக் கூட்டணி நாடுகள் நேரடியாகத் தலையிட்டால், அந்த நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்திருந்தது. அதனால், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குப் போர் ஆயுதங்கள் வழங்கி வந்தாலும், நேரடியாகக் களத்தில் இறங்கிப் போர் தொடுக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது, உலகிலேயே ரஷ்யாவிடமே அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி அணு ஆயுதம் ஏந்தி உலகில் எந்த மூலைக்கும் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய புதிய ஏவுகணையான புரேவெஸ்ட்னிக்கை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் அறிவித்தாா். அதைத் தொடர்ந்து, கடந்த வாரம் அணு ஆயுத சோதனைகள் தடை ஒப்பந்தத்துக்கான சட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான மசோதா ரஷ்ய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ரஷ்ய நாடாளுமன்றமும் இறுதி ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், ஒரு மாபெரும் அணு ஆயுத சோதனை நிகழ்த்தியதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது.அணு ஆயுதம்

இது குறித்து வெளியான தகவலில், "கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை ரஷ்யாவின் தூரக் கிழக்கில் உள்ள சோதனை தளத்திலிருந்தும், மற்றொரு அணு ஆயுத ஏவுகணை பேரண்ட்ஸ் கடலில் உள்ள அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்தும் ஏவப்பட்டுச் சோதிக்கப்பட்டது. அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் எதிரி நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்தச் சோதனை உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகை எனக் கூறப்பட்ட நிலையில், `உக்ரைனைத் தாக்குவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை' என்று அமெரிக்க மறுத்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வட கொரியா: ``அச்சுறுத்தும் அணு ஆயுதம்; இரவை பகலாக்கிய ராணுவ தின பிரமாண்ட அணிவகுப்பு" | Photo Album


http://dlvr.it/Sxyntl

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...