Skip to main content

``பதவிக்காக சூடு, சொரணையை இழந்துவிட முடியாது..!” - கருணாஸ் பளீச்

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது, எந்த கூட்டணியில் உங்களை எதிர்பார்க்கலாம்?”

“நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். தேர்தல் வருகிறது என்றால் உடனே எந்த கூட்டணிக்கு போவது, எத்தனை சீட்டு வாங்குவது என்ற மனநிலையே எனக்கு இல்லை. எனக்குத் தேவைப்பட்டால் நான் நிற்பேன். அதற்கு கூட்டணி வேண்டுமென்ற அவசியமும் இல்லை.”கருணாஸ்

“ஒவ்வொரு தேர்தலில் நிற்கும் எண்ணமே இல்லை என்றால் உங்கள் அரசியல் கட்சி எதற்காகத்தான்?”

“வி.சி.க, பா.ம.க, கொ.ம.தே.க, புதிய தமிழகம், த.ம.மு.க, சிறுபான்மை கட்சிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் எங்களுக்கு இல்லை. அதை எங்கள் இளைஞர்களிடம் உணர்த்தி, உரிமைகளுக்கான குரல் கொடுப்போம்.”

“நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று உங்கள் ஆதரவாளர்களுக்கு நீங்கள் சொல்லித்தானே ஆக வேண்டும்?”

“கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க-வால் ஏற்பட்ட அவல நிலைகளை எல்லோரையும் போல நானும் உணர்ந்திருக்கிறேன். எதிர்கால தலைமுறையிடம் ஒரு பாதுகாப்பான இந்தியாவை கொடுக்க வேண்டும். அதானியிடமோ, அம்பானியிடமோ கொடுத்துவிட்டு போக முடியாது. எனவே அந்த சூழலை மனதில் வைத்து நல்ல முடிவு எடுப்பேன். ”இந்தியா கூட்டணி

“அப்படியானால் இந்தியா கூட்டணிக்குத்தான் ஆதரவு என்று எடுத்துக்கொள்ளலாமா?”

“அதை இப்போது சொல்ல முடியாது. பா.ஜ.க-வுக்கு எதிராக தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் காக்க வேண்டும். அதற்காக தி.மு.க அணிக்கு வாக்களிக்கும் சூழல் ஏற்பட்டால் கூட, அவர்கள் மீதான தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. தேர்தல் நெருங்கி இந்திய அளவில் உறுதியான ஒரு நிலைப்பாடு உருவாகும்போது, எங்கள் முடிவையும் எடுப்போம்.”“அ.தி.மு.க., பா.ஜ.க-வுக்குப் பாடம் புகட்டுவோம்!” - கடுகடுக்கும் கருணாஸ்

“ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சட்டசபையில் இணைந்து செயல்பட்ட கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மூவருமே எந்த கூட்டணிக்கும் போக முடியாததன் பின்னணியில் வேறு காரணங்கள் எதாவது இருக்கிறதா?”

“மானங்கெட்டுப்போன அரசியல் மாண்புமிகு ஆக வேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். பதவிக்காக சூடு, சொரணையை இழந்துவிட முடியாது. வன்னியர் இடஒதுக்கீடு முறையாக கணக்கெடுத்து கொடுக்காமல், அந்த மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று நேரடியாக குற்றம்சாட்டிவிட்டுத்தான் அ.தி.மு.க-வில் இருந்து வெளியேறினேன். யாரும் என்னை கழட்டிவிடவில்லை, நானாகத்தான் முடிவெடுத்து வெளியேறினேன். பிறகு தி.மு.க கூட்டணியில் சீட் கேட்டேன், கொடுக்கவில்லை. அதற்காக நான் கவலைப்படும் ஆள் இல்லை.”முதல்வர் ஸ்டாலின் - உதயநிதி

“சரி, தி.மு.க ஆட்சி இரண்டரை ஆண்டுகளை நிறைவுசெய்யப்போகிறது. உங்கள் மதிப்பீடு என்ன?”

“என்னைப் பொறுத்தவரையில் தி.மு.க ஆட்சி அவர்கள் குடும்பத்திற்கான ஆட்சி. இது மக்களுக்கான ஆட்சியா இல்லையா என்பதை நீங்கள் மக்களிடம்தான் கேட்க வேண்டும்.”

“மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், கட்டணமில்லா பயணம் போன்றவை மக்களுக்கானது இல்லையா?”

“ஆயிரம் ரூபாய்க்கு ஆயிரெத்தெட்டு கண்டிஷன். இது ஒரு புரட்சிகர திட்டமா? 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தினால் அது புரட்சிகரமான திட்டம். மக்களுக்கு கொடுப்பது 1,000 ரூபாய்தான். அதில் என்ன மக்களின் மக்களின் வாழ்வாதாரம் மாறிவிடுமா? ஒவ்வொரு துறையிலும் 25% கமிசன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாக இருக்கும் கட்டடங்களை இடித்துவிட்டு, புதிதாக கட்டுவதை எல்லாம் பார்க்க முடிகிறது. ஏன் கமிஷன் வாங்கத்தானே இதெல்லாம்?”

“சினிமா துறையில் தி.மு.க-வின் சர்வாதிகாரம் பெருகிவிட்டது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருக்கிறாரே?”

“தமிழ் சினிமா கார்ப்பரேட் கைகளுக்கு போய்விட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரு தயாரிப்பாளர்கள்தான் தன்னிச்சையாக இருக்கிறார்கள். தியேட்டர்களும் சிண்டிகேட் போல மாறிவிட்டன. எனவே தனிப்பட்ட ஒருவரை குறைசொல்ல முடியாது.”ரெட் ஜெயண்ட்

“ரெட் ஜெயிண்ட் மூவீஸ் அதிக திரைப்படங்களை வாங்குவதை வைத்து ஜெயக்குமார் இந்த விமர்சனத்தை வைக்கிறாரே?”

“அதிகாரம் அவர்கள் கையில் இருக்கும்போது இது சாதாரணமானதுதானே! முதல்வரின் மகன், அமைச்சரின் நிறுவனம் என்றால் திரையரங்க உரிமையாளர்கள் அவருக்குத்தானே முன்னுரிமை கொடுத்து செல்வார்கள்? மனித இயல்பே அதுதானே! ஆனால் அடித்து, மிரட்டிப் பிடுங்குகிறார்கள் என்று சொல்வதெல்லாம் பொய்ப்பிரசாரம். திரையரங்க உரிமையாளர்களுக்கு உரிய பங்கீட்டை கொடுத்துவிடுகிறார்கள், யாரையும் ஏமாற்றுவதில்லை.”

“ஒரு சில பெரு நிறுவனங்களே அதிக படங்களை வெளியிட்டால், சிறு தயாரிப்பு நிறுவனங்கள் என்ன ஆவது?”

“சிறிய நிறுவனங்கள் நாசமாகப் போகட்டும், யாருக்கு என்ன கவலை? அவரவர்கள் பிழைக்க வேண்டுமென்றுதான் எல்லோரும் பார்ப்பார்கள். தியாகராய நகரில் நீங்கள் ஒரு பெரிய துணிக்கடை வைத்தால், அங்கிருக்கும் 4 சிறிய கடைகளை பற்றி நீங்கள் கவலைப்படுவீர்களா? 4 சிறிய கடைகள் அழிந்தால்தான் ஒரு பெரிய கடை செழிக்கும். அப்படித்தான் எல்லா தொழிலும் இருக்கிறது.”அண்ணாமலை

“சரி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?”

“எனக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றி எந்த கருத்தையும் சொல்வதற்கு நான் தயாராக இல்லை”

“பெரியார், அண்ணா, முத்துராமலிங்கத் தேவர் என பல மறைந்த தலைவர்களை பற்றி எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறாரே?”

“படித்தவர்கள் எல்லாம் புத்திசாலி இல்லை. ஹீரோ ஆங்கிலத்தில் 4 வரிகளைப் பேசிவிட்டால் தியேட்டரில் என்னவென்றே புரியாமல் கூட கை தட்டுவார்கள், அதுபோலத்தான் இருக்கிறது. யாராக இருந்தாலும் கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலக அளவு.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
மலேசியாவில் ஹோட்டல் ஆரம்பிக்கப் போறேன்! - மகிழும் கருணாஸ்


http://dlvr.it/Sxynr7

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...