Skip to main content

AI: `நான் எப்போது இப்படி பேசினேன்?’ - ஏஐ குறித்து ஜோ பைடன்

உலகம் முழுவதும் AI கோலோச்சத் தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வெற்றிக்குப் பிறகு AI கருவிகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டன. பல புதிய புதிய AI கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் ஆய்வுகளுக்கும் நிதியும் குவிந்து வருகிறது. அதேநேரம் மற்றொருபுறம் AI துறையால் பெரிய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் அதிகரித்தே வருகிறது.செயற்கை நுண்ணறிவு

சமீபத்தில், AI துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட, இந்த ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற, AI துறையின் காட்பாதர் என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், "எதிர்வரும் காலத்தில் AI துறையால் மிகப் பெரிய ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, AI என்று வரும் போது அரசும் சரி, பெரும் நிறுவனங்களும் சரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என எச்சரித்திருந்தார். இந்த நிலையில், AI துறையை ஒழுங்குபடுத்துவதற்கான நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று வெளியிட்டு, அதன் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

அப்போது பேசிய அவர், "AI சாதனங்கள் மக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படுகின்றன. ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஆடியோ, வீடியோ-க்கள் ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் போலி செய்திகளைப் பரப்பவும், மோசடி செய்யவும் பயன்படும் சூழல் நிலவுகிறது. உங்கள் குரலை மூன்று வினாடிகள் பதிவு செய்தாலே போதும்.... அப்படிதான் நான் பேசியதாக ஒரு வீடியோ வெளியானது. அதில், நான் சொல்லாததை நானே சொன்னது போல வீடியோ இருந்தது. அதனை கேட்ட போது, `நான் எப்போது இப்படி பேசினேன்?’ எனக் கேட்டேன். இனி எல்லாம் AI

எனவே, இந்த நுண்ணறிவு சாதனத்தின் பாதுகாப்பும், புதிய தரநிலைகளை நிறுவுவதும் அமெரிக்கர்களின் தனி உரிமையைப் பாதுகாக்கும் என்ற அடிப்படையில், AI உருவாக்குநர்கள் தங்கள் பாதுகாப்பு சோதனை முடிவுகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களை அமெரிக்க அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். AI மூலம், பாதுகாப்பு - உற்பத்தி சட்டத்தின்படி, தேசியப் பாதுகாப்பு, தேசிய பொருளாதார பாதுகாப்பு, தேசிய பொதுச் சுகாதாரம் - பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் கடுமையான ஆபத்து ஏற்படுத்தும் சூழல் நிலவுவதால், AI உருவாக்கும் நிறுவனங்கள், தங்களின் பயிற்சிகள் குறித்தும், சோதனைகளின் முடிவுகள் குறித்தும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் AI அமைப்புகள் பாதுகாப்பானவை மற்றும் நம்பகமானவை என்பதை பொதுவில் வெளியிடுவதற்கு முன் உறுதி செய்யும். மேலும், AI -யால் உருவாக்கப்படும் வீடியோ - ஆடியோ உள்ளிட்டவற்றுக்கு லேபில், வாட்டர் மார்க் போன்றவை மூலம் அடையாளப்படுத்தும் வழிகாட்டுதலை வர்த்தகத் துறை விரைவில் உருவாக்கவிருக்கிறது. இதனால், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் தங்கள் அரசிடமிருந்து பெரும் தகவல்கள் உண்மையானவைதானா என்பதை எளிதாக அறிந்து கொள்ளமுடியும்.AI

அதன் மூலம், அரசு பொதுமக்களின் சிவில் உரிமைகளை மேம்படுத்தி, நுகர்வோர் மற்றும் தொழிலாளர்களுக்குப் பக்கபலமாக நிற்கும். புதுமை மற்றும் போட்டியை ஊக்குவித்து, உலகம் முழுவதும் அமெரிக்காவின் தலைமையை மேம்படுத்தும். இந்த கருவிகளைப் பயன்படுத்தும் உலகெங்கிலும் உள்ள அரசுகளுக்கு அமெரிக்கா ஒரு முன்மாதிரியாக இருக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
இந்தியா Israel-க்கு `உறுதியான' ஆதரவு! Modi அரசின் நிலைப்பாட்டுக்கு என்ன காரணம்? |Palestine |America


http://dlvr.it/Sy9sr6

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...