Skip to main content

AI: `நான் எப்போது இப்படி பேசினேன்?’ - ஏஐ குறித்து ஜோ பைடன்

உலகம் முழுவதும் AI கோலோச்சத் தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வெற்றிக்குப் பிறகு AI கருவிகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டன. பல புதிய புதிய AI கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் ஆய்வுகளுக்கும் நிதியும் குவிந்து வருகிறது. அதேநேரம் மற்றொருபுறம் AI துறையால் பெரிய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் அதிகரித்தே வருகிறது.செயற்கை நுண்ணறிவு

சமீபத்தில், AI துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட, இந்த ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற, AI துறையின் காட்பாதர் என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், "எதிர்வரும் காலத்தில் AI துறையால் மிகப் பெரிய ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, AI என்று வரும் போது அரசும் சரி, பெரும் நிறுவனங்களும் சரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என எச்சரித்திருந்தார். இந்த நிலையில், AI துறையை ஒழுங்குபடுத்துவதற்கான நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று வெளியிட்டு, அதன் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

அப்போது பேசிய அவர், "AI சாதனங்கள் மக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படுகின்றன. ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஆடியோ, வீடியோ-க்கள் ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் போலி செய்திகளைப் பரப்பவும், மோசடி செய்யவும் பயன்படும் சூழல் நிலவுகிறது. உங்கள் குரலை மூன்று வினாடிகள் பதிவு செய்தாலே போதும்.... அப்படிதான் நான் பேசியதாக ஒரு வீடியோ வெளியானது. அதில், நான் சொல்லாததை நானே சொன்னது போல வீடியோ இருந்தது. அதனை கேட்ட போது, `நான் எப்போது இப்படி பேசினேன்?’ எனக் கேட்டேன். இனி எல்லாம் AI

எனவே, இந்த நுண்ணறிவு சாதனத்தின் பாதுகாப்பும், புதிய தரநிலைகளை நிறுவுவதும் அமெரிக்கர்களின் தனி உரிமையைப் பாதுகாக்கும் என்ற அடிப்படையில், AI உருவாக்குநர்கள் தங்கள் பாதுகாப்பு சோதனை முடிவுகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களை அமெரிக்க அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். AI மூலம், பாதுகாப்பு - உற்பத்தி சட்டத்தின்படி, தேசியப் பாதுகாப்பு, தேசிய பொருளாதார பாதுகாப்பு, தேசிய பொதுச் சுகாதாரம் - பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் கடுமையான ஆபத்து ஏற்படுத்தும் சூழல் நிலவுவதால், AI உருவாக்கும் நிறுவனங்கள், தங்களின் பயிற்சிகள் குறித்தும், சோதனைகளின் முடிவுகள் குறித்தும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் AI அமைப்புகள் பாதுகாப்பானவை மற்றும் நம்பகமானவை என்பதை பொதுவில் வெளியிடுவதற்கு முன் உறுதி செய்யும். மேலும், AI -யால் உருவாக்கப்படும் வீடியோ - ஆடியோ உள்ளிட்டவற்றுக்கு லேபில், வாட்டர் மார்க் போன்றவை மூலம் அடையாளப்படுத்தும் வழிகாட்டுதலை வர்த்தகத் துறை விரைவில் உருவாக்கவிருக்கிறது. இதனால், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் தங்கள் அரசிடமிருந்து பெரும் தகவல்கள் உண்மையானவைதானா என்பதை எளிதாக அறிந்து கொள்ளமுடியும்.AI

அதன் மூலம், அரசு பொதுமக்களின் சிவில் உரிமைகளை மேம்படுத்தி, நுகர்வோர் மற்றும் தொழிலாளர்களுக்குப் பக்கபலமாக நிற்கும். புதுமை மற்றும் போட்டியை ஊக்குவித்து, உலகம் முழுவதும் அமெரிக்காவின் தலைமையை மேம்படுத்தும். இந்த கருவிகளைப் பயன்படுத்தும் உலகெங்கிலும் உள்ள அரசுகளுக்கு அமெரிக்கா ஒரு முன்மாதிரியாக இருக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
இந்தியா Israel-க்கு `உறுதியான' ஆதரவு! Modi அரசின் நிலைப்பாட்டுக்கு என்ன காரணம்? |Palestine |America


http://dlvr.it/Sy9sr6

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...