Skip to main content

நாய் கடித்த சிறுமிக்கு வீட்டிலேயே வைத்தியம் பார்த்த குடும்பம்; 2 வாரங்களுக்குப் பின் நேர்ந்த சோகம்!

உத்தரப்பிரதேசத்தில் நாய் கடித்த 8 வயது சிறுமியை இரண்டு வாரங்களாக வீட்டிலேயே வைத்து வைத்தியம் பார்த்ததால், உடல்நிலை மிகவும் மோசமாகி நேற்று உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலின்படி, சுமார் 15 நாள்களுக்கு முன்பு பினாஹட்டில் உள்ள ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமியை நாய் கடித்திருக்கிறது.

வெறி நாய்

இதையடுத்து, நாய் கடித்தது பற்றி தன்னுடைய தாயிடம் மட்டும் அந்த சிறுமி கூறியிருக்கிறார். பின்னர் நோய்த் தொற்று பரவாமலிருப்பதற்கான ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி (ARV) போடுவதற்கு மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதில், வீட்டிலேயே அந்த சிறுமிக்கு வைத்தியம் பார்க்கப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்க, இரண்டு வாரங்களுக்குப் பிறகு நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தெரியவந்ததும், சிறுமி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், சிறுமியை ஆக்ரா உயர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமாறு பரிந்துரை செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஆக்ரா உயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்விதமாக அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

உயிரிழப்பு

இந்தச் சம்பவத்தை முழுமையாக விவரித்த ஆக்ராவிலுள்ள தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, ரேபிஸ் தொற்று பற்றி விழிப்புணர்வு அளிக்கும் வகையில், நாய் கடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதை விளக்கினார். அதில், ``ரேபிஸ் தொற்று 100 சதவிகித இறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கிறது. எனவே, நாய் கடித்தால் நீங்கள் அமைதியாக இருக்காமல் உடனடியாக சரியான மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும். எங்களிடம் அதற்கான தடுப்பூசிகள் இருக்கின்றன.

தடுப்பூசி

நாய் கடித்த பிறகு, 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவருக்கு ARV தடுப்பூசியின் முதல் டோஸ் போட வேண்டும். அதற்கடுத்து, மூன்று மற்றும் ஏழாவது நாளில் மற்றொரு டோஸ் போட வேண்டும். இறுதியாக 28-ம் நாள் கடைசி டோஸ் போட வேண்டும்" என்று டாக்டர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா கூறினார்.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆக்ராவில் ஒவ்வொரு மாதமும் 5,000 நாய் கடி சம்பவங்கள் பதிவாவதாகக் கூறப்படுகிறது. இனி சிறுவர்களாக, பெரியவர்களாக இருந்தாலும் நாய் கடித்தால் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...