Skip to main content

நாய் கடித்த சிறுமிக்கு வீட்டிலேயே வைத்தியம் பார்த்த குடும்பம்; 2 வாரங்களுக்குப் பின் நேர்ந்த சோகம்!

உத்தரப்பிரதேசத்தில் நாய் கடித்த 8 வயது சிறுமியை இரண்டு வாரங்களாக வீட்டிலேயே வைத்து வைத்தியம் பார்த்ததால், உடல்நிலை மிகவும் மோசமாகி நேற்று உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலின்படி, சுமார் 15 நாள்களுக்கு முன்பு பினாஹட்டில் உள்ள ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமியை நாய் கடித்திருக்கிறது.

வெறி நாய்

இதையடுத்து, நாய் கடித்தது பற்றி தன்னுடைய தாயிடம் மட்டும் அந்த சிறுமி கூறியிருக்கிறார். பின்னர் நோய்த் தொற்று பரவாமலிருப்பதற்கான ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி (ARV) போடுவதற்கு மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதில், வீட்டிலேயே அந்த சிறுமிக்கு வைத்தியம் பார்க்கப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்க, இரண்டு வாரங்களுக்குப் பிறகு நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தெரியவந்ததும், சிறுமி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், சிறுமியை ஆக்ரா உயர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமாறு பரிந்துரை செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஆக்ரா உயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்விதமாக அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

உயிரிழப்பு

இந்தச் சம்பவத்தை முழுமையாக விவரித்த ஆக்ராவிலுள்ள தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, ரேபிஸ் தொற்று பற்றி விழிப்புணர்வு அளிக்கும் வகையில், நாய் கடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதை விளக்கினார். அதில், ``ரேபிஸ் தொற்று 100 சதவிகித இறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கிறது. எனவே, நாய் கடித்தால் நீங்கள் அமைதியாக இருக்காமல் உடனடியாக சரியான மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும். எங்களிடம் அதற்கான தடுப்பூசிகள் இருக்கின்றன.

தடுப்பூசி

நாய் கடித்த பிறகு, 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவருக்கு ARV தடுப்பூசியின் முதல் டோஸ் போட வேண்டும். அதற்கடுத்து, மூன்று மற்றும் ஏழாவது நாளில் மற்றொரு டோஸ் போட வேண்டும். இறுதியாக 28-ம் நாள் கடைசி டோஸ் போட வேண்டும்" என்று டாக்டர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா கூறினார்.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆக்ராவில் ஒவ்வொரு மாதமும் 5,000 நாய் கடி சம்பவங்கள் பதிவாவதாகக் கூறப்படுகிறது. இனி சிறுவர்களாக, பெரியவர்களாக இருந்தாலும் நாய் கடித்தால் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...