Skip to main content

நாய் கடித்த சிறுமிக்கு வீட்டிலேயே வைத்தியம் பார்த்த குடும்பம்; 2 வாரங்களுக்குப் பின் நேர்ந்த சோகம்!

உத்தரப்பிரதேசத்தில் நாய் கடித்த 8 வயது சிறுமியை இரண்டு வாரங்களாக வீட்டிலேயே வைத்து வைத்தியம் பார்த்ததால், உடல்நிலை மிகவும் மோசமாகி நேற்று உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலின்படி, சுமார் 15 நாள்களுக்கு முன்பு பினாஹட்டில் உள்ள ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமியை நாய் கடித்திருக்கிறது.

வெறி நாய்

இதையடுத்து, நாய் கடித்தது பற்றி தன்னுடைய தாயிடம் மட்டும் அந்த சிறுமி கூறியிருக்கிறார். பின்னர் நோய்த் தொற்று பரவாமலிருப்பதற்கான ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி (ARV) போடுவதற்கு மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதில், வீட்டிலேயே அந்த சிறுமிக்கு வைத்தியம் பார்க்கப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்க, இரண்டு வாரங்களுக்குப் பிறகு நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தெரியவந்ததும், சிறுமி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், சிறுமியை ஆக்ரா உயர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமாறு பரிந்துரை செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஆக்ரா உயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்விதமாக அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

உயிரிழப்பு

இந்தச் சம்பவத்தை முழுமையாக விவரித்த ஆக்ராவிலுள்ள தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, ரேபிஸ் தொற்று பற்றி விழிப்புணர்வு அளிக்கும் வகையில், நாய் கடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதை விளக்கினார். அதில், ``ரேபிஸ் தொற்று 100 சதவிகித இறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கிறது. எனவே, நாய் கடித்தால் நீங்கள் அமைதியாக இருக்காமல் உடனடியாக சரியான மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும். எங்களிடம் அதற்கான தடுப்பூசிகள் இருக்கின்றன.

தடுப்பூசி

நாய் கடித்த பிறகு, 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவருக்கு ARV தடுப்பூசியின் முதல் டோஸ் போட வேண்டும். அதற்கடுத்து, மூன்று மற்றும் ஏழாவது நாளில் மற்றொரு டோஸ் போட வேண்டும். இறுதியாக 28-ம் நாள் கடைசி டோஸ் போட வேண்டும்" என்று டாக்டர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா கூறினார்.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆக்ராவில் ஒவ்வொரு மாதமும் 5,000 நாய் கடி சம்பவங்கள் பதிவாவதாகக் கூறப்படுகிறது. இனி சிறுவர்களாக, பெரியவர்களாக இருந்தாலும் நாய் கடித்தால் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...