Skip to main content

Joe Biden: 11-வது முறையாக பாதுகாப்பு அதிகாரிகளைக் கடித்த பைடனின் வளர்ப்பு நாய்!

ஜோ பைடனின் வளர்ப்பு நாயான `கமாண்டர்' 11-வது முறையாக பாதுகாப்பு அதிகாரியைக் கடித்திருக்கிறது.

வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் சீருடை அணிந்த அதிகாரியை கமாண்டர் கடித்திருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அந்த அதிகாரிக்குச் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று அறிவித்துள்ளனர்.வளர்ப்பு நாய்... தேர்வு முதல் இனச்சேர்க்கை வரை... செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!

ஜோ பைடனின் வளர்ப்பு நாயான கமாண்டர் இது போல பணியில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரியைக் கடிப்பது முதல் முறையல்ல. தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் இருக்கும் பல அதிகாரிகளைக் கடித்து இருக்கிறது.

வெள்ளை மாளிகையில் இருக்கும் அதிபர், அவரின் குடும்பத்தினர் மற்றும் பிற அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுபவர்களே `சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள்' (Secret Service employee) . இவர்கள் வெள்ளை மாளிகையின் பல இடங்களிலும் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தான், `கமாண்டர்' ஓர் அதிகாரியைக் கடித்திருக்கிறது.

பைடனை பொறுத்தமட்டில் அவரின் வளர்ப்பு நாயை குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார். 

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தகவல் தொடர்பு இயக்குநரான எலிஸபெத் அலெக்சாண்டர் கூறுகையில், ``செல்லப்பிராணிகளுக்கு மன அழுத்தமான சூழல் உள்ள இடமாக வெள்ளை மாளிகை உள்ளது. வளர்ப்பு நாயான கமாண்டர் 2022 அக்டோபர் முதல் ஜனவரிக்கு இடைப்பட்ட காலத்தில் 10 அதிகாரிகளைக் கடித்திருக்கிறது. வெள்ளை மாளிகை `நாய் வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் பதிவு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா'?

2021-ல் பைடனின் சகோதரர் ஜேம்ஸ், கமாண்டரை பைடனுக்கு பரிசாகக் கொடுத்தார். பைடனின் குடும்பத்தில் `வில்லோ' என்ற பூனையும் இருக்கிறது.

வெள்ளை மாளிகை ஊழியர்களைக் கடித்து ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் பைடனின் இரண்டாவது வளர்ப்பு நாய் கமாண்டர். இதே போல அதிகாரிகளைக் கடித்து ஆக்ரோஷமாக நடந்து கொண்ட `மேஜர்' என்ற ஜெர்மன் ஷெப்பர்டு நாய் நண்பர்களுடன் டெலாவேரில் வாழ அனுப்பி வைக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.


http://dlvr.it/Swp6r4

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...