Skip to main content

Doctor Vikatan: இரவு உணவுக்குப் பிறகு தவிர்க்க முடியாத காபி பழக்கம்... ஆரோக்கியத்தை பாதிக்குமா?

Doctor Vikatan: மாலை ஆறு மணிக்கு மேல் காபி, டீ சாப்பிடக்கூடாது என்றும், அதனால் இரவு தூக்கம் பாதிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இரவு உணவு சாப்பிட்டதும் காபி சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. சாப்பிடவில்லையென்றால் தூக்கம் வர தாமதமாகிறது. சாப்பிட்டால் உடனே தூங்கிவிடுகிறேன். இது சரியா?

பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்  

டயட்டீஷியன் கற்பகம்

உலக அளவில் காபி பிரபலமான ஒரு பானம். அதிலுள்ள கஃபைன், தூண்டலை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. காலையில் தூங்கி எழுந்ததும் காபி குடிப்பதும், அதன் மூலம் அன்றைய நாள் முழுவதையும் உற்சாகத்துடன் கடப்பதும்தான் பரவலான பழக்கம்.  ஆனால் சிலர் காலையில் காபி குடித்த பிறகும் அடிக்கடி நினைத்தபோதெல்லாம் அதைக் குடிக்கும் வழக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கும்போது உங்கள் மூளை அலெர்ட்டாக, ஆக்டிவ்வாக இருக்கும். 

இந்த நிலையில் காபி குடிப்பதன் மூலம்  உங்கள் தூக்கம் தள்ளிப்போகும். வழக்கமாக நீங்கள் தூங்கும் நேரத்தைக் குறைக்கும். உங்கள் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும்.

காபி தூக்கத்தை பாதிக்கும்!

நன்றாக, நிறைவாகத் தூங்கிய உணர்வே ஏற்படாது. மூளையை பாதித்து தூக்கத்தைத் தூண்டும் அடினோசைன் என்ற ஏற்பிகளைத் தடைசெய்யும். விழித்திருக்கும் நேரத்தில் அடினோசைன் என்ற ரசாயனம் உற்பத்தியாகும். எத்தனை மணி நேரம் விழித்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு அடினோசைனின் உற்பத்தி அதிகரித்து, நமக்கு தூக்கத்தை வரவழைக்கும்.  தூங்க வேண்டிய நேரத்தில் கஃபைன் கலந்த காபி குடிப்பதால் அடினோசைன் உற்பத்தி தடைப்பட்டு, உங்களை நீண்ட நேரம் தூக்கமின்றி விழித்திருக்கச் செய்யும்.

கஃபைனின் தூண்டுதல் திறனானது  குறைந்தது 3 முதல் அதிகபட்சமாக 5 மணி நேரம்வரை நீடிக்கும். அது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். எடுத்துக்கொள்ளும் கஃபைனில் பாதி அளவானது  5 முதல் 7 மணி நேரம் வரை உடலில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இரவு தூங்கச் செல்வதற்கு முன், இரவு உணவுடன் அல்லது இரவு உணவுக்குப் பிறகெல்லாம் காபி குடிப்பது நிச்சயம் உங்கள் தூக்கத்தை பாதிக்கும். தூங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு உங்கள் கடைசி காபியை நிறுத்திக்கொள்வது நல்லது. மாலை 4 மணிக்கு மேல் காபி குடிக்காமல் இருப்பது சிறந்தது. அதிக அளவு காபி குடிப்பது சிலருக்கு மனப்பதற்றத்தை ஏற்படுத்தலாம். 

காபி

உங்களுக்கு தூக்கத்தில் பிரச்னை, தலைவலி, வாந்தி, படபடப்பு போன்றவை இருந்தால், அவையெல்லாம் அதிக அளவு காபி குடிப்பதன் அறிகுறிகளாக இருக்கக்கூடும். எனவே தினமும் 2 கப்புக்கு மேல் காபி குடிப்பதைத் தவிருங்கள். ஒருவேளை உங்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு, குடல் தொடர்பான பிரச்னைகள், பருக்கள் போன்றவை இருந்தால் காபியை அறவே தவிர்ப்பதுதான் நல்லது. காபிக்கு பதிலாக க்ரீன் டீ, மூலிகை டீ, சாமந்திப்பூ டீ போன்றவற்றைப் பருகலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...