Skip to main content

Doctor Vikatan: இரவு உணவுக்குப் பிறகு தவிர்க்க முடியாத காபி பழக்கம்... ஆரோக்கியத்தை பாதிக்குமா?

Doctor Vikatan: மாலை ஆறு மணிக்கு மேல் காபி, டீ சாப்பிடக்கூடாது என்றும், அதனால் இரவு தூக்கம் பாதிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இரவு உணவு சாப்பிட்டதும் காபி சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. சாப்பிடவில்லையென்றால் தூக்கம் வர தாமதமாகிறது. சாப்பிட்டால் உடனே தூங்கிவிடுகிறேன். இது சரியா?

பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்  

டயட்டீஷியன் கற்பகம்

உலக அளவில் காபி பிரபலமான ஒரு பானம். அதிலுள்ள கஃபைன், தூண்டலை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. காலையில் தூங்கி எழுந்ததும் காபி குடிப்பதும், அதன் மூலம் அன்றைய நாள் முழுவதையும் உற்சாகத்துடன் கடப்பதும்தான் பரவலான பழக்கம்.  ஆனால் சிலர் காலையில் காபி குடித்த பிறகும் அடிக்கடி நினைத்தபோதெல்லாம் அதைக் குடிக்கும் வழக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கும்போது உங்கள் மூளை அலெர்ட்டாக, ஆக்டிவ்வாக இருக்கும். 

இந்த நிலையில் காபி குடிப்பதன் மூலம்  உங்கள் தூக்கம் தள்ளிப்போகும். வழக்கமாக நீங்கள் தூங்கும் நேரத்தைக் குறைக்கும். உங்கள் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும்.

காபி தூக்கத்தை பாதிக்கும்!

நன்றாக, நிறைவாகத் தூங்கிய உணர்வே ஏற்படாது. மூளையை பாதித்து தூக்கத்தைத் தூண்டும் அடினோசைன் என்ற ஏற்பிகளைத் தடைசெய்யும். விழித்திருக்கும் நேரத்தில் அடினோசைன் என்ற ரசாயனம் உற்பத்தியாகும். எத்தனை மணி நேரம் விழித்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு அடினோசைனின் உற்பத்தி அதிகரித்து, நமக்கு தூக்கத்தை வரவழைக்கும்.  தூங்க வேண்டிய நேரத்தில் கஃபைன் கலந்த காபி குடிப்பதால் அடினோசைன் உற்பத்தி தடைப்பட்டு, உங்களை நீண்ட நேரம் தூக்கமின்றி விழித்திருக்கச் செய்யும்.

கஃபைனின் தூண்டுதல் திறனானது  குறைந்தது 3 முதல் அதிகபட்சமாக 5 மணி நேரம்வரை நீடிக்கும். அது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். எடுத்துக்கொள்ளும் கஃபைனில் பாதி அளவானது  5 முதல் 7 மணி நேரம் வரை உடலில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இரவு தூங்கச் செல்வதற்கு முன், இரவு உணவுடன் அல்லது இரவு உணவுக்குப் பிறகெல்லாம் காபி குடிப்பது நிச்சயம் உங்கள் தூக்கத்தை பாதிக்கும். தூங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு உங்கள் கடைசி காபியை நிறுத்திக்கொள்வது நல்லது. மாலை 4 மணிக்கு மேல் காபி குடிக்காமல் இருப்பது சிறந்தது. அதிக அளவு காபி குடிப்பது சிலருக்கு மனப்பதற்றத்தை ஏற்படுத்தலாம். 

காபி

உங்களுக்கு தூக்கத்தில் பிரச்னை, தலைவலி, வாந்தி, படபடப்பு போன்றவை இருந்தால், அவையெல்லாம் அதிக அளவு காபி குடிப்பதன் அறிகுறிகளாக இருக்கக்கூடும். எனவே தினமும் 2 கப்புக்கு மேல் காபி குடிப்பதைத் தவிருங்கள். ஒருவேளை உங்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு, குடல் தொடர்பான பிரச்னைகள், பருக்கள் போன்றவை இருந்தால் காபியை அறவே தவிர்ப்பதுதான் நல்லது. காபிக்கு பதிலாக க்ரீன் டீ, மூலிகை டீ, சாமந்திப்பூ டீ போன்றவற்றைப் பருகலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...