Skip to main content

Doctor Vikatan: காய்ச்சலுக்குப் பிறகு அதிகமான முடி உதிர்வு... காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: எனக்கு சமீபத்தில் டைபாய்டு காய்ச்சல் பாதித்து குணமடைந்தேன். அதன் பிறகு முடி உதிர்வு மிக அதிகமாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் கோவிட் பாதித்து குணமானபோதும் இதே போல அதிக அளவிலான முடி உதிர்வு இருந்தது. காய்ச்சலுக்கும் முடி உதிர்வுக்கும் என்ன தொடர்பு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை

ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்கும் ஒரு நிகழ்வுக்குப் பிறகு முடி உதிர்வு இருப்பது என்பது சாதாரணமானதுதான். அதற்கு 'டெலோஜென் எஃப்ளுவியம்' ( Telogen effluvium ) என்று பெயர். அந்த நிகழ்வு, நீங்கள் குறிப்பிட்டதுபோல டைபாய்டு, கொரோனா, டெங்கு காய்ச்சலாகவோ, சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சையாகவோ, பிரசவமாகவோ எப்படியும் இருக்கலாம். அதாவது அந்த மாதிரி தருணங்களில் கூந்தலின் வளர்ச்சிநிலையானது அப்படியே நின்றுவிடும்.

ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்திய அந்தக் காலம் முடிந்ததும் முடிகள் எல்லாம் உதிரத் தொடங்கும். அது நிஜமான முடி உதிர்வு பிரச்னையே அல்ல. தினசரி வாழ்க்கையில் நாம் எல்லோருமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் முடி உதிர்வை எதிர்கொள்வோம். அதுதான் இயற்கை. ஆனால் ஸ்ட்ரெஸ்ஸான தருணங்களில் அப்படி முடி உதிராது. அந்த நாள்களைக் கடந்தபிறகு அப்போது உதிர்ந்திருக்க வேண்டிய முடிகள் எல்லாம் சேர்ந்து உதிரத் தொடங்கும். அதனால் வழக்கத்தைவிட அதிக முடி உதிர்வு இருப்பதாக உணர்வோம்.

இந்தப் பிரச்னையைத் தான் 'டெலோஜென் எஃப்ளுவியம்' என்கிறோம். இது சிலருக்கு ஆறு மாதங்கள் வரையிலும், சிலருக்கு அதைத் தாண்டியும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு 3 முதல் 6 மாதங்களில் இது நின்றுவிடும். எனவே இது குறித்துப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. முடி உதிர்கிறதே என்பதற்கும் சேர்த்துக் கவலைப்பட்டால் அந்த ஸ்ட்ரெஸ்ஸும் சேர்ந்து முடி உதிர்வை இன்னும் அதிகப்படுத்தும்.

முடி உதிர்வு பிரச்னை

முடி உதிர்வைத் தடுக்க ஆரோக்கியமான, சரிவிகித உணவுப்பழக்கம் முக்கியம். நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழுத்தானியங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கூந்தலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் புரதச்சத்து மிக முக்கியம்.

வைட்டமின் ஏ, பி, சி, டி மற்றும் இ போன்றவை அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் செலினியம் சத்துகளும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு அவசியம். எனவே இவையெல்லாம் உள்ளபடி உங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...