Skip to main content

Doctor Vikatan: இசிஜி, எக்கோ நார்மல்... ஆனாலும் நடக்கும்போது முதுகில் வலி... இதயநோயாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 42. நான் திருப்பூரில் பிரின்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதற்காக நடைப்பயிற்சி செய்யும் போதும், வேறு சாதாரண கடினமில்லாத வேலைகள் செய்யும் போதும் மேல் முதுகின் நடுவில் மிகக் கடுமையான வலி ஏற்படுகிறது. பிறகு அந்த வலி பரவி முன் நெஞ்சுப் பகுதிக்கு வருகிறது. அந்த வலி வாய்வு பிடித்த வலியைப் போல் இருக்கும்.

ECG, Echo test, முதுகுத்தண்டுக்கான முழுமையான MRI scan எடுத்துப் பார்த்துவிட்டேன். மருத்துவர் பரிந்துரை செய்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்த பிறகும் அந்த வலி சிறிதளவும் குறையவில்லை. இரவில் படுக்கும் போது தூங்கவிடாமல் அந்த வலி மிக அதிகமாக இருக்கிறது. பெரியவர் ஒருவரின் ஆலோசனையில் வேக வைத்த பூண்டு சாப்பிட்டு சுடுநீர் குடித்தேன். வலி கொஞ்சம் கட்டுப்பட்டது. ஆனாலும் அவ்வப்போது நடக்கும்போதும் வேறு வேலைகள் செயயும் போதும் அந்த வலி வருகிறது.

எனக்கு என்ன பிரச்னை? நான் எந்த மருத்துவரை அணுகுவது?

- Periyasamy. விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

42 வயதில் ரத்த அழுத்தமும் கொலஸ்ட்ரால் பாதிப்பும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். சாதாரண வேலைகளைச் செய்யும்போதும் வலியை உணர்வதாகச் சொல்கிறீர்கள். மருத்துவராக இதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு இதயநோய் இருப்பதற்கான ரிஸ்க் அதிகமிருப்பதாகத் தெரிகிறது.

சிறுசிறு வேலைகள் செய்யும்போதும் வலி ஏற்படுவதாகச் சொல்வதை அலட்சியப்படுத்த முடியாது. இசிஜி, எக்கோ, எம்ஆர்ஐ உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகளையும் எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். எக்கோ நார்மல் என்று காட்டியதால் மட்டுமே இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லை என எடுத்துக்கொள்ள முடியாது.

சிலருக்கு நடக்கும்போது வலி இருக்கும்... அது முதுகுவலியாகவோ, நெஞ்சுவலியாகவோ எதுவாகவும் இருக்கலாம். நடப்பதை நிறுத்தியதும் வலி குறைவதை உணரலாம். இதுவும் இதயநோயின் அறிகுறியாக இருக்கக்கூடும். இசிஜி டெஸ்ட் நார்மல் என்று காட்டினாலும் அடுத்தகட்டமாக டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்ப்பது அவசியம்.

ECG

அப்போதும் மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை உணர்கிறீர்கள் என்றால் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டியிருக்கலாம். எனவே இந்த விஷயம் தாமதப்படுத்தவோ, அலட்சியப்படுத்தவோ கூடியதல்ல. உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை மற்றும் சிகிச்சைகளைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...