Skip to main content

`உப்பு… அளவு அளவா இருக்கணும்! மீறினா...?’ - எச்சரிக்கும் மருத்துவர்

ஒரு சராசரி இந்தியர் தினமும் 8 கிராம் உப்பை உட்கொள்கிறார், இது உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த 5 கிராம் அளவைவிட மிக அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 18 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களின் உப்பு உட்கொள்ளல் பற்றிய விழிப்புணர்வு, நடத்தை ஆகியவற்றை மதிப்பிடுவதை நோக்கமாக கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தினமும் சராசரியாக 7.1 கிராம் அளவு உப்பும், ஆண்கள் தினசரி 8.9 கிராம் உப்பும் எடுத்துக்கொள்வது தெரியவந்துள்ளது.

உப்பு

ஒருவர் தன் உணவில் அதிகமாக உப்பை சேர்த்துக்கொள்வதால் பக்கவாதம், இதய செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம், அகால மரணம், இரைப்பை புற்றுநோய் ஆகியவை பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறபடுகிறது. ஆய்வின்படி பரிந்துரைக்கப்பட்ட 5 கிராம் உப்பு எடுத்துக்கொள்வதைக் குறைப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கையை 25% வரை குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மக்கள் அதிக உப்பு எடுத்துக்கொள்வதன் விளைவுகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துக்கொண்ட பொது மருத்துவர் அருணாசலம்,

“ சோடியம் குளோரைடு என்ற உப்பு உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் மிகவும் தேவையானது. சோடியம் அதிகமாக எடுக்கும்போது உடல் தண்ணீரை அதிகமாகச் சேர்த்துவைத்துக்கொள்ளும். இதனால் உடலில் அனைத்து வகையான ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படும். உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தம் அதிகமானால் அதைத்தொடர்ந்து ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் ஆகியவையும் வரலாம்.

Blood Pressure

அதேபோல் சோடியம் குறைந்தால் கோமா நிலைக்குச் சென்றுவிடுவார்கள். மூளைக்கு சோடியம் தேவை... அது கிடைக்கவில்லை என்றால் உடல் செயலிழந்துவிடும். மேலும் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் குறையும், தசைகள் பலவீனமாகும். அதனால் நம் உணவில் சோடியம் குறையவும் கூடாது, அதிகமாகவும் கூடாது. ஐந்து கிராம் உப்புதான் நம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் 8 கிராம் வரை எடுத்துக்கொள்வதால் நிச்சயம் உடல்நலம் பாதிக்கப்படும்.

நாம் வெளியில் வாங்கிச் சாப்பிடும் சாக்லேட், பிஸ்கட் போன்ற அனைத்து பொருள்களிலும் உப்பு இருக்கும். குறிப்பாக ஹோட்டல்களில் விற்கப்படும் நான்வெஜ் உணவுகளில் காரம், மசாலா, உப்பு என அனைத்துமே வீட்டுஉணவை விட அதிகமாகவே இருக்கும். நம் அன்றாட வாழ்வில் உப்பு அதிகமானதற்கு, வெளியில் உணவு சாப்பிடும் பழக்கம் அதிகரித்ததும் மிக முக்கிய காரணம். இதனால் தான் இளம் வயதினர் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதிக உப்பு எடுத்துக்கொள்வதால் உடலில் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும்.

டாக்டர். அருணாச்சலம்

ஒருவருக்கு ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தாலே அவர் நிச்சயமாக தங்கள் உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும், மேலும் வெளியில் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும், முக்கியமாக ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உணவுப்பொருள்களில் சோடியம் அதிகமாக இருந்தால் எந்த நுண்ணுயிரிகளும் அதை தாக்காது என்பதால் உணவு பதப்படுத்தலுக்கு உப்பு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இது போக சாலையோரங்களில் கிடைக்கும் மாங்காய், வெள்ளரிக்காய், கொய்யாக்காய் ஆகியவற்றிலும் மிக சாதாரணமாக நாம் உப்பு சேர்த்தே சாப்பிடுகிறோம் அவற்றையெல்லாம் தவிர்க்கலாம். நம் உணவில் எதில் எல்லாம் தேவையில்லாமல் உப்பு சேர்க்கிறோமோ அதையெல்லாம் குறைத்தால் நல்லது” என்கிறார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...