Skip to main content

"உறுப்புதானம் செய்வோருக்கு அரசு மரியாதை பாராட்டுக்குரியது; ஆனால், பணம்..." - ஹிதேந்திரன் அப்பா

"உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள், இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடியே, தேனியில் உடல் உறுப்பு தானம் செய்த வடிவேலுவுக்கு முதன் முறையாக அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்று, இந்தியாவையே நெகிழ்ச்சியோடு கவனிக்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து, தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து தமிழ்நாட்டிற்கே முன்மாதிரியாக இருந்த ஹிதேந்திரனின் தந்தை டாக்டர் அசோகனிடம் நாம் பேசியபோது, நெகிழ்ச்சியோடு பேசினார்...

"என் மகன் ஹிதேந்திரன் நினைவு தினத்தை உடல் உறுப்புதான தினமாக அறிவிக்கவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தோம். அதன்படி, செப்டம்பர் 23-ம் தேதியை உறுப்புதான தினமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு. கடந்த 2009-ம் ஆண்டு என் மனைவிக்கு 'கல்பனா சாவ்லா' விருதும் வழங்கி கெளரவித்தது. மகனை இழந்த துக்கத்தில், அந்த விருது தேவையா என்று யோசித்தாலும் விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காகப் பெற்றுக்கொண்டோம்.

ஹிதேந்திரன் குடும்பத்தினர்

அதன்பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்ததோடு விழிப்புணர்வும் ஏற்பட்டது. எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் எல்லா குடும்பத்திற்கும் கிடைக்கவேண்டும் என்று நாங்கள் விருப்பப்பட்டோம். அரசும் வருடந்தோறும் உடல் உறுப்பு தானம் செய்வோரின் குடும்பத்தினருக்கு ஒரு விழா ஏற்படுத்தி சான்றிதழ் அளித்துப் பாராட்டிக்கொண்டிருந்தது.

அதேநேரம், உறுப்பு தானம் செய்யும் செய்திகள் முன்பெல்லாம் அடிக்கடி ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும். இப்போது, பெரிதாக வருவதில்லை. வந்தாலும் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்பது தெரியாது. சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ள தலைவர்கள், ராணுவ வீரர்கள், மக்கள் மனம் கவர்ந்த பிரபலங்களின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை கொடுக்கப்படுகிறது. இப்போது, அவர்கள் வரிசையில் உடல் உறுப்பு தானம் செய்வோரையும் சேர்த்திருப்பது வரவேற்புக்குரியது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

உறுப்பு தானம் செய்வோரும் சமூகத்திற்கான பங்களிப்பை அளிப்பவர்கள்தான். இப்போது, அரசு மரியாதை கொடுப்பதால், எல்லோரும் கவனிப்பார்கள். விழிப்புணர்வும் அதிகமாகும். இறந்தவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கெளரவம் கிடைக்கும்.

ஹிதேந்திரன் பெற்றோர்

சமூதாயத்திற்கும் உறுப்புதானம் குறித்த சிந்தனை வரும். அதேநேரத்தில், அரசு மரியாதை என்ற அங்கீகாரத்துடன் உறுப்புதானம் செய்வோரின் குடும்பத்திற்குப் பணம் எல்லாம் கொடுக்கக்கூடாது. அப்படி எதிர்காலத்தில் அறிவிக்கவும் கூடாது. ஏனென்றால், இது ஒரு தானம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வழங்குவது. இதனை பணம் கொடுத்து அங்கீகாரம் செய்தால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. சில நேரங்களில் கட்டாய மூளைச்சாவும் நிகழலாம். அதனால், பண மரியாதை எல்லாம் வேண்டாம்.

அதேநேரம், உறுப்புதானம் செய்வோரின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை கொடுப்பது போலவே, அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் சிறந்த மருத்துவர்களுக்கும் அரசு ஊக்கத்தொகை அறிவிக்கவேண்டும். அவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார்கள்" என்கிறார் கோரிக்கையாக.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...