Skip to main content

கேரளா: நிபா வைரஸ் பாதித்த அனைவரும் குணமடைந்தனர்... விலங்குகள் இறந்தால் கண்காணிக்க குழு!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து கடந்த மாதம் 30-ம் தேதியும், இந்த மாதத் தொடக்கத்திலும் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் நிபா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்தனர். அதிலும் நிபா பாதித்து இறந்த ஒருவரின் 9 வயது மகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே திருவனந்தபுரம் உள்ளிட்ட வேறு இரண்டு இடங்களில் நிபா அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து கேரளாவை ஒட்டி உள்ள தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதித்தவர்கள் வந்தால் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். அதே சமயம் கேரளாவில் நிபா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இல்லை என சாம்பிள் பரிசோதனையில் தெரியவந்தது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

மேலும் நிபா பாதித்த 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கேரளாவில் நிபா பாதித்தவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக மாறி உள்ளது. வெளவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியதாகக் கூறப்பட்ட நிலையில் வீட்டு விலங்குகளும், காட்டு விலங்குகளும் இறந்தால் உடனே ரிப்போர்ட் செய்ய கோழிக்கோட்டில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்ற 4 பேரின் சாம்பிள்களும் 5 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டன. இரண்டு பரிசோதனையிலும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அவர்களது ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மூன்று வகையான சாம்பிள்களை ஆய்வுக்கு அனுப்பியதில் அனைத்திலும் நெகட்டிவ் என வந்ததைத் தொடர்ந்து நான்குபேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களின் வீடுகளில் சுகாதாரம் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மேலும் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து தொற்று பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை ஏற்படுத்தப்படுள்ளது.

வௌவால்

நிபா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் 568 பேர் இப்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர். சுகாதாரத்துறை அறிவித்துள்ள வழிமுறைப்படி அக்டோபர் 5-ம் தேதி வரை இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறையின் நிபா கட்டுப்பாட்டு அறை அக்டோபர் 26-ம் தேதி வரை செயல்படும். நிபா வைரஸ் கண்டறியப்பட்டபிறகு ஒரு மரணம்கூட ஏற்படாமல் தடுக்க முடிந்தது. இனியும் நிபா வைரஸ் அச்சுறுத்தாமல் இருக்க கால்நடைத்துறை, வனத்துறை, விவசாயத்துறை ஆகியவை இணைந்து கம்யூனிட்டி சர்வேலென்ஸ் தொடர்ச்சியாக நடத்த உத்தரவிட்டுள்ளேன். மாவட்ட கலெக்டர் தலைமையில் 2 வாரங்களுக்கு ஒருமுறை இந்த கமிட்டி கூட்டம் நடைபெறும். வீட்டில் வளர்க்கும் பிராணிகளான பூனைகள் போன்றவை ஒன்றுக்கும் அதிகமானவை இறந்துபோனாலோ, காட்டு மிருகங்கள் வழக்கத்துகு மாறாக இறந்துபோனாலோ உடனே கண்டுபிடித்து அந்த புள்ளி விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக இந்தக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் நிபா பரவாமல் இருக்க இந்தக் குழு தொடர்ந்து கண்காணிக்கும்" என்றார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...