Skip to main content

கேரளா: நிபா வைரஸ் பாதித்த அனைவரும் குணமடைந்தனர்... விலங்குகள் இறந்தால் கண்காணிக்க குழு!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து கடந்த மாதம் 30-ம் தேதியும், இந்த மாதத் தொடக்கத்திலும் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் நிபா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்தனர். அதிலும் நிபா பாதித்து இறந்த ஒருவரின் 9 வயது மகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே திருவனந்தபுரம் உள்ளிட்ட வேறு இரண்டு இடங்களில் நிபா அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து கேரளாவை ஒட்டி உள்ள தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதித்தவர்கள் வந்தால் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். அதே சமயம் கேரளாவில் நிபா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இல்லை என சாம்பிள் பரிசோதனையில் தெரியவந்தது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

மேலும் நிபா பாதித்த 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கேரளாவில் நிபா பாதித்தவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக மாறி உள்ளது. வெளவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியதாகக் கூறப்பட்ட நிலையில் வீட்டு விலங்குகளும், காட்டு விலங்குகளும் இறந்தால் உடனே ரிப்போர்ட் செய்ய கோழிக்கோட்டில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்ற 4 பேரின் சாம்பிள்களும் 5 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டன. இரண்டு பரிசோதனையிலும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அவர்களது ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மூன்று வகையான சாம்பிள்களை ஆய்வுக்கு அனுப்பியதில் அனைத்திலும் நெகட்டிவ் என வந்ததைத் தொடர்ந்து நான்குபேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களின் வீடுகளில் சுகாதாரம் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மேலும் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து தொற்று பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை ஏற்படுத்தப்படுள்ளது.

வௌவால்

நிபா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் 568 பேர் இப்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர். சுகாதாரத்துறை அறிவித்துள்ள வழிமுறைப்படி அக்டோபர் 5-ம் தேதி வரை இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறையின் நிபா கட்டுப்பாட்டு அறை அக்டோபர் 26-ம் தேதி வரை செயல்படும். நிபா வைரஸ் கண்டறியப்பட்டபிறகு ஒரு மரணம்கூட ஏற்படாமல் தடுக்க முடிந்தது. இனியும் நிபா வைரஸ் அச்சுறுத்தாமல் இருக்க கால்நடைத்துறை, வனத்துறை, விவசாயத்துறை ஆகியவை இணைந்து கம்யூனிட்டி சர்வேலென்ஸ் தொடர்ச்சியாக நடத்த உத்தரவிட்டுள்ளேன். மாவட்ட கலெக்டர் தலைமையில் 2 வாரங்களுக்கு ஒருமுறை இந்த கமிட்டி கூட்டம் நடைபெறும். வீட்டில் வளர்க்கும் பிராணிகளான பூனைகள் போன்றவை ஒன்றுக்கும் அதிகமானவை இறந்துபோனாலோ, காட்டு மிருகங்கள் வழக்கத்துகு மாறாக இறந்துபோனாலோ உடனே கண்டுபிடித்து அந்த புள்ளி விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக இந்தக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் நிபா பரவாமல் இருக்க இந்தக் குழு தொடர்ந்து கண்காணிக்கும்" என்றார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...