Skip to main content

திருப்பத்தூர்: டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பலியான 5 வயது சிறுமி - அதிர்ச்சியில் மக்கள்!

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சிவராஜ்பேட்டை புதிய காலனிப் பகுதியைச் சேர்ந்த தம்பதி மணிகண்டன் - சுமித்ரா. இவர்களுக்கு 15 வயதில் பிரித்திகா, 13 வயதில் தாரணி, 7 வயதில் யோகலட்சுமி, 5 வயதில் அபிநிதி என நான்கு பெண் குழந்தைகளும், 8 மாத ஆண் கைக்குழந்தையும் இருக்கின்றனர். சமீபத்தில், மணிகண்டன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கணவன் இறந்த துயரத்திலும், 5 குழந்தைகளை படாதபாடுபட்டு வளர்ந்து வந்தார் சுமித்ரா.

திருப்பத்தூர்

இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 23-ம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், யோகலட்சுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, அவள் மட்டும் பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறாள்.

இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 2 குழந்தைகளும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26-ம் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு சிறுமி அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். குழந்தை புருஷோத்தமனுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு

உயிரிழந்த சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதே பகுதியில் வசிக்கும் மேலும் சிலருக்கும் தீவிர காய்ச்சல் அறிகுறி இருப்பதால், அவர்களும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி சிவராஜ்பேட்டை புதிய காலனிப் பகுதி மக்கள், ‘‘நகராட்சி நிர்வாகம், எங்கள் தெருவைக் கண்டுகொள்வதே கிடையாது. கழிவுநீர் அப்படியே தெருவில் தேங்கியிருக்கிறது. மழைக்காலம் என்பதால், வீட்டுக்குள்ளும் கழிவுநீர் புகுந்துவிடுகிறது. குப்பைகளையும் அகற்றுவது கிடையாது. இப்போது ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டு, அதில் ஒரு குழந்தை இறந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல, எங்கள் தெருவை அடிக்கடி வந்து சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல் பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இல்லையெனில், போராட்டத்தைக் கையிலெடுப்போம்’’ என்றனர் வேதனையோடு.

தீவிர காய்ச்சலுக்கு சிறுமி ஒருவர் உயிரிழந்திருக்கும் இந்த துயரச் சம்பவம், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...