Skip to main content

Doctor Vikatan: சாப்பிட அடம்பிடிக்கும் பிள்ளைகள்... டொமேட்டோ சாஸ், கெட்ச்சப் கொடுப்பது சரியா?

Doctor Vikatan: என்னுடைய பிள்ளைகள் இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏதேனும் ஒரு சாஸ் இருந்தால்தான் சாப்பிடுகிறார்கள். தக்காளி சாஸ், கெட்ச்சப்,கொடுப்பது சரியானதா...? சோயா சாஸ் சேர்த்த சமையல் ஆரோக்கியமானதா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

இதுபோன்ற சாஸ் வகைகளில் சோடியம் அளவு மிக அதிகம். குறிப்பாக சோயா சாஸில் 100 கிராமுக்கு ஐயாயிரம் மில்லிகிராமுக்கு அதிகமான சோடியம் இருக்கும். உலக சுகாதார நிறுவனம் நமக்கு ஒருநாளைக்கு 2300 மில்லிகிராம் அல்லது 5 கிராம் சோடியம் போதுமானது என பரிந்துரைக்கிறது. அப்படியென்றால் இந்த சாஸ்களின் மூலம் நம் உடலில் சேரும் சோடியத்தின் அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள்.

இந்த சாஸ் வகைகளில் சோடியம் மட்டுமன்றி, நிறமிகள், ப்ரிசர்வேட்டிவ் போன்றவையும் அதிகம் சேர்க்கப்படுகின்றன. பச்சைமிளகாயை அரைத்து அப்படியே வைத்துப் பாருங்கள்..... ஒன்றிரண்டு நாள்களில் அதன் நிறம் மாறிவிடும்.... பூசணம் பிடிக்கும். எனவே கடைகளில் விற்கப்படும் சாஸ்கள் நீண்டகாலத்துக்கு கெட்டுப்போகாமலிருக்க ஏகப்பட்ட கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன.

குழந்தைகளுக்கு இட்லி, தோசை, பிரெட் என எல்லாவற்றுடனும் சாஸ் கொடுப்பது குறித்து எத்தனையோ விளம்பரங்கள் வருகின்றன. அவற்றைப் பார்த்து அப்படியே சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே அளவுக்கதிக உப்பு, நிறமி என தேவையற்ற ரசாயனங்கள் உடலில் சேர்கின்றன. ஒரு கட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளும் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகின்றன. பிறகு குழந்தைகளின் உணவுப்பழக்கத்தைக் குறைசொல்வது எந்த வகையில் நியாயம? பெற்றோர் பழக்காமல் பிள்ளைகளுக்கு இவற்றின் சுவை பழகுவதில்லையே.

டொமேட்டோ சாஸ்

வாரத்துக்கு ஒன்றிரண்டு நாள்கள்தான் சாப்பிடுகிறார்கள் என்றாலும் இதுபோன்ற சாஸ் வகைகளில் உள்ள அதிகப்படியான சோடியம், நிறமி மற்றும் ப்ரிசர்வேட்டிவ்ஸ் போன்றவை அவர்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானவைதான். சாஸ் வகைகளிலேயே சோயா சாஸில்தான் அதிகப்பட்ட சோடியம் இருக்கிறது. அதை ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்ட பல உணவுகளில் சேர்க்கிறார்கள். கடைகளில் கிடைக்கும் அதே சுவை வேண்டும் என்பதற்காக வீட்டிலும் பலரும் இந்த வகை சாஸ் சேர்த்துச் சமைக்கிறார்கள். இது மிகவும் தவறு.

சோடியம் குறைவான 'லோ சோடியம்' சாஸ் வகைகள் கிடைக்கின்றன. அவையுமே ஆரோக்கியத்துக்கு ஏற்றவையல்ல. மூன்று மாதங்களுக்கொரு முறை இவற்றைச் சாப்பிடுவதில் தவறில்லை. அடிக்கடி சாப்பிடுவது ஆபத்தானது.

இளவயது உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, செரிமானமின்மை, குடல் பாதிப்புகள் என பல ஆபத்துகளை இதன் மூலம் நீங்களாகவே தேடிக் கொள்கிறீர்கள்.

உடல் பருமன்

எனவே இதுபோன்ற சுவைகளுக்கு குழந்தைகளைப் பழக்கமாமல் நம் பாரம்பர்ய உணவுகளைக் கொடுத்து ஆரோக்கியத்தை உறுதிசெய்யுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...