Skip to main content

பெண்ணின் மூளையில் உயிருடன் புழு... எதிர்காலத்தில் இது அதிகரிக்கலாம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த பெண்ணின் மூளையில் உயிருடன் ஒட்டுண்ணி புழு ஒன்று இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர் நிமோனியா, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல், இரவில் வியர்வை, மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பல அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. 2022-ம் ஆண்டில் இவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஐ.ஆர் ஸ்கேனில், மூளையில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பது தெரியவந்தது. இதனால், அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ நிபுணர்கள் திட்டமிட்டனர். அறுவை சிகிச்சையில், சிவப்பு நிறத்தில் 8 சென்டி மீட்டர் நீளமுள்ள புழுவை மருத்துவர்கள் பார்த்துள்ளனர். இந்தப் புழு அறிவியல்ரீதியாக `ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி' (Ophidascaris robertsi) என்று அழைக்கப்படுகிறது. 

குறிப்பிட்ட இந்த வகை புழுவானது ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா போன்ற பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட மலைப்பாம்புகளுடன் தொடர்புடையது. மனிதனில் பாம்பு ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பெண்ணுக்கு பாம்புகளுடன் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், பாம்புகள் நிறைந்த ஏரிக்கு அருகில்தான் அவர் வசித்து வந்திருக்கிறார். எனவே, சமைப்பதற்காகச் சேகரிக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டு கீரை போன்ற உண்ணக்கூடிய புற்கள் மூலம் புழுவின் முட்டைகள் கவனக்குறைவாக உட்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

``அதிகரித்து வரும் நோய்களில் சுமார் 75 சதவிகிதம் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றன. இவற்றில் கொரோனா போன்ற மோசமான எடுத்துக்காட்டுகள் அடங்கும். அதிர்ஷ்டவசமாக, கோவிட், எபோலா போலல்லாமல், குறிப்பிட்ட இந்தத் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தாது; ஏனெனில் இது மக்களிடையே பரவாது.

surgery

இருப்பினும், உலகின் பல்வேறு பகுதிகளில் பாம்புகள் மற்றும் ஒட்டுண்ணிகள் பரவுவதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற நோய் பாதிப்புகள் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நோய் சூழல் அரிதான போதும், நோயாளியின் நிலை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அவரது உடல்நிலை மேம்பட்டது'' என கன்பராவில் உள்ள தொற்றுநோய் மருத்துவர் சஞ்சய சேனநாயக கூறியுள்ளார். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...