Skip to main content

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ராணுவ பெண்கள்... அமெரிக்க ராணுவத்தின் ஷாக் ரிப்போர்ட்!

ராணுவத்தில் பெரும்பாலும் ஆண்களே அதிக ஈடுபாடு காட்டுவதுண்டு. எட்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை, பெண்களும் ராணுவத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் பல பெண்கள் முனைப்போடு தங்களை ராணுவத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ராணுவ அறிக்கை ஒன்றில், அமெரிக்காவில் பெண் சிப்பாய்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலினம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.ஆணாதிக்கம் | Woman Abuse அறிக்கையில், ``ராணுவத்தின் ஸ்பெஷல் ஆபரேஷன்களில் (Army Special Operation), பெண்கள் பெரும்பாலும் நியமிக்கப்படுவது இல்லை. அப்படி ஸ்பெஷல் ஆபரேஷன்களில் பணியாற்றும் பெண்களிடம் எதிர்மறையான அணுகுமுறை காட்டப்படுகிறது. பெரும்பாலும் மூத்த அதிகாரிகளிடம் இருந்தே இப்படி வந்ததுள்ளது. கமாண்டோ பிரிவுகளில் பணிபுரியும் பெண்களிடம் வெறுப்பும், பாலினம் குறித்த வெளிப்படையான கமென்ட்டுகளும் சொல்லப்படுகின்றன.  இதைத் தாண்டி பாலியல் பிரச்னைகள், தனிமைப்படுத்தப்படுதல், சரியாகப் பொருந்தாத மற்றும் போதிய உபகரணங்கள் வழங்கப்படாதது, குழந்தை பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு இல்லாமை, குறிப்பாக கர்ப்பம் சம்பந்தப்பட்ட பல முக்கிய பிரச்னைகளை இப்போது வெளியிடப்பட்ட அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. `அதோடு தகுதி குறைந்த ஆண்களுக்கு வழங்கப்படும் வேலைகளுக்கு தாங்கள் அனுப்பப்படுகிறோம், மரியாதையைப் பெற நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டி இருக்கிறது’ என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ''பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் பெரும்பாலான வேலைகளைச் செய்ய சமமாகத் திறன் கொண்டவர்கள் என்கிற எண்ணம் கேலிக்குரியது" என்று ஓர் ஆண் கருத்தாளர் கூறினார். ஒரு பெண்ணுடன் சேர்ந்து ஒரு குழுவில் பணியாற்ற வேண்டியிருந்தால் அதற்கு முன்பே விலகிவிடுவோம் என்றும், அத்தகைய சூழலில் பணியாற்றுவது அவர்களின் மனைவிகளிடையே பிரச்னைகளையும் பொறாமையையும் உருவாக்கும் என்றும் மற்றவர்கள் கூறினார்கள்.பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக குடியரசுத் தலைவர் முர்மு... கோவாவில் பேசியதென்ன? பெண்கள் ராணுவத்தின் முன் வரிசை போர் வேலைகளுக்கு நகர்ந்தபோது, சில நேரங்களில் மோசமான கமென்ட்டுகளை வழங்குகிறார்கள். மேலும் தலைவர் பதவியை எட்டுவதில் சவாலான நிலையில் இருக்கிறார்கள்'' என இந்தப் பிரச்னை குறித்து பேசிய ஒருவர் (commenter) கூறியுள்ளார்.  சிப்பாய்களில் 837 பெண்கள், 3,238 ஆண்கள்  5,000-க்கும் மேற்பட்ட ராணுவ சிறப்பு நடவடிக்கைப் படைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என ஆய்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Sv8GCy

Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...