Skip to main content

இன்ஸ்டா போஸ்ட்: லைக்ஸுக்காக டால்பினைக் கொன்றதாக 19 வயது இளைஞர்மீது குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், 19 வயது இளைஞர் ஒருவர் டால்பினை புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதாகத் திட்டமிட்டிருந்தார். இதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு அதிக லைக்குகள் கிடைக்குமென ஆசையில் இருந்திருக்கிறார். இதையடுத்து, ஃப்ளோரிடாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள அமிலியா தீவுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, டால்பினை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. அந்தச் சிறுவன் டால்பினை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து புகைப்படம் எடுத்த, ஓரிரு தினங்களில் டால்பின் உயிரிழந்திருக்கிறது. இதையடுத்து, ஃபுளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பும், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும் விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது. ப்ளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் அறிக்கைபடி, ``புகைப்படத்தில் டால்பின் வீங்கிய நிலையிலும், அதன் வாயிலிருந்து ரத்தம் வெளியேறியதும் பதிவாகியிருக்கிறது. மேலும் அவர், புகைப்படம் எடுத்த பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்க கூடும் அல்லது இதற்கு முன்னதாகவே டால்பின் இறக்கும் தறுவாயில் இருந்திருக்கலாம், தண்ணீரைவிட்டு வெளியே இழுத்ததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்க கூடும். ஆனால் புகைப்படத்தில் டால்ஃபின் உயிருடன் இருப்பதாகத் தெரிகிறது'' எனக் கூறப்படுகிறது. இந்த இளைஞர் டால்பினுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இது குறித்து 19 வயது இளைஞர், ``இது தானாக ஏற்பட்ட விபத்து. கரையிலிருந்து ஒரு டால்பினைப் பிடிப்பது வாழ்நாளில் ஒரு முறைதான் நடக்கும்'' என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். இருப்பினும் இளைஞரின் இந்தச் செயல் வரவேற்கத்தக்கது அல்ல என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதில் ஒருவர் இளைஞரின் இந்தச் செயல் `இயற்கைக்கு எதிரான குற்றம்' என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYMotivation: `அபாயகரமான கடல் பாதை!'- 24 ஆண்டுகள் கப்பல்களுக்கு வழிகாட்டிய டால்பின் - கதையல்ல நிஜம்
http://dlvr.it/SvDXXR

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...