Skip to main content

இன்ஸ்டா போஸ்ட்: லைக்ஸுக்காக டால்பினைக் கொன்றதாக 19 வயது இளைஞர்மீது குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், 19 வயது இளைஞர் ஒருவர் டால்பினை புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதாகத் திட்டமிட்டிருந்தார். இதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு அதிக லைக்குகள் கிடைக்குமென ஆசையில் இருந்திருக்கிறார். இதையடுத்து, ஃப்ளோரிடாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள அமிலியா தீவுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, டால்பினை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. அந்தச் சிறுவன் டால்பினை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து புகைப்படம் எடுத்த, ஓரிரு தினங்களில் டால்பின் உயிரிழந்திருக்கிறது. இதையடுத்து, ஃபுளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பும், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும் விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது. ப்ளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் அறிக்கைபடி, ``புகைப்படத்தில் டால்பின் வீங்கிய நிலையிலும், அதன் வாயிலிருந்து ரத்தம் வெளியேறியதும் பதிவாகியிருக்கிறது. மேலும் அவர், புகைப்படம் எடுத்த பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்க கூடும் அல்லது இதற்கு முன்னதாகவே டால்பின் இறக்கும் தறுவாயில் இருந்திருக்கலாம், தண்ணீரைவிட்டு வெளியே இழுத்ததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்க கூடும். ஆனால் புகைப்படத்தில் டால்ஃபின் உயிருடன் இருப்பதாகத் தெரிகிறது'' எனக் கூறப்படுகிறது. இந்த இளைஞர் டால்பினுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இது குறித்து 19 வயது இளைஞர், ``இது தானாக ஏற்பட்ட விபத்து. கரையிலிருந்து ஒரு டால்பினைப் பிடிப்பது வாழ்நாளில் ஒரு முறைதான் நடக்கும்'' என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். இருப்பினும் இளைஞரின் இந்தச் செயல் வரவேற்கத்தக்கது அல்ல என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதில் ஒருவர் இளைஞரின் இந்தச் செயல் `இயற்கைக்கு எதிரான குற்றம்' என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYMotivation: `அபாயகரமான கடல் பாதை!'- 24 ஆண்டுகள் கப்பல்களுக்கு வழிகாட்டிய டால்பின் - கதையல்ல நிஜம்
http://dlvr.it/SvDXXR

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...