Skip to main content

Doctor Vikatan: வெள்ளரி, இஞ்சி, எலுமிச்சை சேர்த்த தண்ணீர்.... உடலிலுள்ள நச்சுகளை நீக்குமா?

Doctor Vikatan: வெள்ளரி, இஞ்சி, எலுமிச்சை போன்றவற்றை ஸ்லைஸ் செய்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் குடிக்கும் டீடாக்ஸ் வாட்டர் உண்மையிலேயே உதவுமா? அதன் பலன் என்ன? இதைத் தயாரிக்கும் சரியான முறை என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

உடலானது தன்னைத்தானே தினமும் டீடாக்ஸ் எனப்படும் நச்சுநீக்கத்தைச் செய்து கொள்ளும். உங்களுடைய கல்லீரலும் சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக இருந்தால் இந்தச் செயல் தானாக நடக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தினமும் உங்கள் உணவில் நிறைய காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது மட்டும்தான். அதாவது ஒவ்வொரு வேளை உணவுடனும் நீங்கள் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு பழங்கள் சாப்பிட வேண்டும்.

வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடலாம். எலுமிச்சையை ஜூஸாக குடிக்கலாம். தினமும் 3 டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். சீரகம், ஓமம், மிளகு போன்றவை செரிமானத்தை சீராக்குபவை என்பதால் அவற்றை ஏதேனும் ஒரு வகையில் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவில் தேவையற்ற இனிப்புகளைத் தவிர்த்து விடவும். சரியான நேரத்துக்குத் தூங்கிப் பழகவும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல நிறைய மூலிகைகளைச் சேர்த்த தண்ணீரை 'டீடாக்ஸ் வாட்டர்' என சொல்லிக் கொண்டு குடிக்கிற நபர்கள் இருக்கிறார்கள். அப்படிச் செய்வதால் உடலிலுள்ள கொழுப்பும் நச்சுகளும் கரைந்து வெளியேறி விடாது. அவற்றை எல்லாம் சேர்ப்பதால் தண்ணீரின் சுவையும் மணமும் மாறும். வெறும் தண்ணீராகக் குடிக்கப் பிடிக்காதவர்கள் இப்படிக் குடிக்கலாம்.

தண்ணீர்

உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதால் மலச்சிக்கல் இருக்காது. குடல் இயக்கம் சீராக இருக்கும். புத்துணர்வாக இருப்பது போல உணர்வார்கள். அவ்வளவுதானே தவிர, அந்தத் தண்ணீர் வேறு எந்த மேஜிக்கையும் நிகழ்த்தாது. இந்தத் தண்ணீருககு பதில் நீர்மோர், இளநீர், ரசம் போன்றவற்றைக் குடித்தாலும் அதே பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். சமூக ஊடகங்களில் பரவும் விஷயங்களைக் கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்றாதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...