Skip to main content

Doctor Vikatan: வெள்ளரி, இஞ்சி, எலுமிச்சை சேர்த்த தண்ணீர்.... உடலிலுள்ள நச்சுகளை நீக்குமா?

Doctor Vikatan: வெள்ளரி, இஞ்சி, எலுமிச்சை போன்றவற்றை ஸ்லைஸ் செய்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் குடிக்கும் டீடாக்ஸ் வாட்டர் உண்மையிலேயே உதவுமா? அதன் பலன் என்ன? இதைத் தயாரிக்கும் சரியான முறை என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

உடலானது தன்னைத்தானே தினமும் டீடாக்ஸ் எனப்படும் நச்சுநீக்கத்தைச் செய்து கொள்ளும். உங்களுடைய கல்லீரலும் சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக இருந்தால் இந்தச் செயல் தானாக நடக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தினமும் உங்கள் உணவில் நிறைய காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது மட்டும்தான். அதாவது ஒவ்வொரு வேளை உணவுடனும் நீங்கள் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு பழங்கள் சாப்பிட வேண்டும்.

வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடலாம். எலுமிச்சையை ஜூஸாக குடிக்கலாம். தினமும் 3 டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். சீரகம், ஓமம், மிளகு போன்றவை செரிமானத்தை சீராக்குபவை என்பதால் அவற்றை ஏதேனும் ஒரு வகையில் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவில் தேவையற்ற இனிப்புகளைத் தவிர்த்து விடவும். சரியான நேரத்துக்குத் தூங்கிப் பழகவும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல நிறைய மூலிகைகளைச் சேர்த்த தண்ணீரை 'டீடாக்ஸ் வாட்டர்' என சொல்லிக் கொண்டு குடிக்கிற நபர்கள் இருக்கிறார்கள். அப்படிச் செய்வதால் உடலிலுள்ள கொழுப்பும் நச்சுகளும் கரைந்து வெளியேறி விடாது. அவற்றை எல்லாம் சேர்ப்பதால் தண்ணீரின் சுவையும் மணமும் மாறும். வெறும் தண்ணீராகக் குடிக்கப் பிடிக்காதவர்கள் இப்படிக் குடிக்கலாம்.

தண்ணீர்

உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதால் மலச்சிக்கல் இருக்காது. குடல் இயக்கம் சீராக இருக்கும். புத்துணர்வாக இருப்பது போல உணர்வார்கள். அவ்வளவுதானே தவிர, அந்தத் தண்ணீர் வேறு எந்த மேஜிக்கையும் நிகழ்த்தாது. இந்தத் தண்ணீருககு பதில் நீர்மோர், இளநீர், ரசம் போன்றவற்றைக் குடித்தாலும் அதே பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். சமூக ஊடகங்களில் பரவும் விஷயங்களைக் கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்றாதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...