Skip to main content

Doctor Vikatan: வெள்ளரி, இஞ்சி, எலுமிச்சை சேர்த்த தண்ணீர்.... உடலிலுள்ள நச்சுகளை நீக்குமா?

Doctor Vikatan: வெள்ளரி, இஞ்சி, எலுமிச்சை போன்றவற்றை ஸ்லைஸ் செய்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் குடிக்கும் டீடாக்ஸ் வாட்டர் உண்மையிலேயே உதவுமா? அதன் பலன் என்ன? இதைத் தயாரிக்கும் சரியான முறை என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

உடலானது தன்னைத்தானே தினமும் டீடாக்ஸ் எனப்படும் நச்சுநீக்கத்தைச் செய்து கொள்ளும். உங்களுடைய கல்லீரலும் சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக இருந்தால் இந்தச் செயல் தானாக நடக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தினமும் உங்கள் உணவில் நிறைய காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது மட்டும்தான். அதாவது ஒவ்வொரு வேளை உணவுடனும் நீங்கள் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு பழங்கள் சாப்பிட வேண்டும்.

வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடலாம். எலுமிச்சையை ஜூஸாக குடிக்கலாம். தினமும் 3 டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். சீரகம், ஓமம், மிளகு போன்றவை செரிமானத்தை சீராக்குபவை என்பதால் அவற்றை ஏதேனும் ஒரு வகையில் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவில் தேவையற்ற இனிப்புகளைத் தவிர்த்து விடவும். சரியான நேரத்துக்குத் தூங்கிப் பழகவும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல நிறைய மூலிகைகளைச் சேர்த்த தண்ணீரை 'டீடாக்ஸ் வாட்டர்' என சொல்லிக் கொண்டு குடிக்கிற நபர்கள் இருக்கிறார்கள். அப்படிச் செய்வதால் உடலிலுள்ள கொழுப்பும் நச்சுகளும் கரைந்து வெளியேறி விடாது. அவற்றை எல்லாம் சேர்ப்பதால் தண்ணீரின் சுவையும் மணமும் மாறும். வெறும் தண்ணீராகக் குடிக்கப் பிடிக்காதவர்கள் இப்படிக் குடிக்கலாம்.

தண்ணீர்

உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதால் மலச்சிக்கல் இருக்காது. குடல் இயக்கம் சீராக இருக்கும். புத்துணர்வாக இருப்பது போல உணர்வார்கள். அவ்வளவுதானே தவிர, அந்தத் தண்ணீர் வேறு எந்த மேஜிக்கையும் நிகழ்த்தாது. இந்தத் தண்ணீருககு பதில் நீர்மோர், இளநீர், ரசம் போன்றவற்றைக் குடித்தாலும் அதே பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். சமூக ஊடகங்களில் பரவும் விஷயங்களைக் கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்றாதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...