Skip to main content

அமெரிக்கா எடுக்கும் முடிவு... தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா..?

தங்கம் விலை கடந்த சில தினங்களில் குறைந்துள்ள நிலையில், இன்று அமெரிக்கா எடுக்கப்போகும் முடிவின் அடிப்படையில் தங்கம் விலையின் நகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. பின்னர் மே மாத இறுதிக்குள் தங்கம் விலை சற்று குறைந்தது. ஜூன் மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்தது. அடுத்து ஜூலை மாதத்தில் தங்கம் விலை உயர்ந்துகொண்டே வந்தது. எனினும், கடந்த சில தினங்களில் மட்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.பெடரல் ரிசர்வ்டிசிஎஸ் நிறுவனத்துக்கு கிடைத்த சூப்பரான வாய்ப்பு... ஐடி நிறுவன பங்குகள் இனி எப்படியிருக்கும்? தற்போதைய நிலையில், தங்கம் விலை ஏறுமா, இறங்குமா என்பது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில், இந்தியர்களுக்கும், தங்கத்துக்கும் இடையேயான உறவு உலகம் அறிந்த விஷயம். இந்தியர்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கும் மக்கள். தங்கத்தை ஒரு முதலீடாகவும், சொத்தாகவும், அவசர பணத் தேவைக்கு உதவும் பொருளாகவும், அந்தஸ்துக்கான சின்னமாகவும் இந்தியர்கள் பார்க்கின்றனர். இன்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டம் நடைபெற இருக்கிறது. தங்கம் வாங்குவோர் அனைவரும் இந்த கூட்டத்தின் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த முறையும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த ஆண்டிலேயே குறைந்தபட்சமாக இரண்டு முறையாவது வட்டி விகிதம் உயர்த்தப்படும் என ஏற்கெனவே ஃபெடரல் ரிசர்வ் சிக்னல் கொடுத்துள்ளது. அமெரிக்காவில் இன்னும் பணவீக்கம் ஃபெடரல் ரிசர்வின் இலக்கு வரம்புக்கு மேல் நீடித்து வருகிறது. எனவே, பணவீக்கத்தை குறைப்பதிலேயே ஃபெடரல் ரிசர்வ் கவனம் செலுத்தி வருகிறது. ஆக, இந்த முறையும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அதற்கு ஏற்ப தங்கம் விலையின் அடுத்த நகர்வு இருக்கும்.பங்கு சந்தைஷேர்லக் அப்டேட்ஸ்: ராக்கெட் வேகத்தில் அதானி பங்குகள்... 52 வார உச்சத்தில் லார்ஜ்கேப் ஸ்டாக்ஸ்! பொதுவாக, ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தும்போது தங்கம் விலை குறையும். ஆனால், தங்கம் விலை என்பது வட்டி விகிதத்தை மட்டும் பொறுத்து மாறுவதில்லை. பணவீக்கம், பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களும் தங்கம் விலையை தீர்மானிக்கின்றன. குறிப்பாக பங்குச் சந்தைகள் இறங்கும்போது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தங்கத்தை தேடி ஓடுகின்றனர். இதனால் தங்கத்தில் முதலீடுகள் குவிகின்றன. எனவே, பங்குச் சந்தைகள் இறக்கத்தால் தங்கம் விலை உயருகிறது. ஆக, இன்று வட்டி விகிதம் குறித்து ஃபெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவு, அதற்கு பங்கு சந்தை கொடுக்கும் ரியாக்‌ஷன் போன்றவற்றின் அடிப்படையில் தங்கம் விலையின் அடுத்த நகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://dlvr.it/SsnvLZ

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...