Skip to main content

அமெரிக்கா எடுக்கும் முடிவு... தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா..?

தங்கம் விலை கடந்த சில தினங்களில் குறைந்துள்ள நிலையில், இன்று அமெரிக்கா எடுக்கப்போகும் முடிவின் அடிப்படையில் தங்கம் விலையின் நகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. பின்னர் மே மாத இறுதிக்குள் தங்கம் விலை சற்று குறைந்தது. ஜூன் மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்தது. அடுத்து ஜூலை மாதத்தில் தங்கம் விலை உயர்ந்துகொண்டே வந்தது. எனினும், கடந்த சில தினங்களில் மட்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.பெடரல் ரிசர்வ்டிசிஎஸ் நிறுவனத்துக்கு கிடைத்த சூப்பரான வாய்ப்பு... ஐடி நிறுவன பங்குகள் இனி எப்படியிருக்கும்? தற்போதைய நிலையில், தங்கம் விலை ஏறுமா, இறங்குமா என்பது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில், இந்தியர்களுக்கும், தங்கத்துக்கும் இடையேயான உறவு உலகம் அறிந்த விஷயம். இந்தியர்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கும் மக்கள். தங்கத்தை ஒரு முதலீடாகவும், சொத்தாகவும், அவசர பணத் தேவைக்கு உதவும் பொருளாகவும், அந்தஸ்துக்கான சின்னமாகவும் இந்தியர்கள் பார்க்கின்றனர். இன்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டம் நடைபெற இருக்கிறது. தங்கம் வாங்குவோர் அனைவரும் இந்த கூட்டத்தின் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த முறையும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த ஆண்டிலேயே குறைந்தபட்சமாக இரண்டு முறையாவது வட்டி விகிதம் உயர்த்தப்படும் என ஏற்கெனவே ஃபெடரல் ரிசர்வ் சிக்னல் கொடுத்துள்ளது. அமெரிக்காவில் இன்னும் பணவீக்கம் ஃபெடரல் ரிசர்வின் இலக்கு வரம்புக்கு மேல் நீடித்து வருகிறது. எனவே, பணவீக்கத்தை குறைப்பதிலேயே ஃபெடரல் ரிசர்வ் கவனம் செலுத்தி வருகிறது. ஆக, இந்த முறையும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அதற்கு ஏற்ப தங்கம் விலையின் அடுத்த நகர்வு இருக்கும்.பங்கு சந்தைஷேர்லக் அப்டேட்ஸ்: ராக்கெட் வேகத்தில் அதானி பங்குகள்... 52 வார உச்சத்தில் லார்ஜ்கேப் ஸ்டாக்ஸ்! பொதுவாக, ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தும்போது தங்கம் விலை குறையும். ஆனால், தங்கம் விலை என்பது வட்டி விகிதத்தை மட்டும் பொறுத்து மாறுவதில்லை. பணவீக்கம், பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களும் தங்கம் விலையை தீர்மானிக்கின்றன. குறிப்பாக பங்குச் சந்தைகள் இறங்கும்போது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தங்கத்தை தேடி ஓடுகின்றனர். இதனால் தங்கத்தில் முதலீடுகள் குவிகின்றன. எனவே, பங்குச் சந்தைகள் இறக்கத்தால் தங்கம் விலை உயருகிறது. ஆக, இன்று வட்டி விகிதம் குறித்து ஃபெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவு, அதற்கு பங்கு சந்தை கொடுக்கும் ரியாக்‌ஷன் போன்றவற்றின் அடிப்படையில் தங்கம் விலையின் அடுத்த நகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://dlvr.it/SsnvLZ

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...