Skip to main content

மணிப்பூர் சம்பவத்தை வெளிநாடுகளும், சர்வதேச ஊடகங்களும் எப்படிப் பார்க்கின்றன?!

‘உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது’ என்று பா.ஜ.க-வின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். `மணிப்பூர் பிரச்னையால் இந்தியாவின் மதிப்பு சர்வதேச அரங்கில் தாழ்ந்திருக்கும் நேரத்தில், யதார்த்த நிலைக்குப் புறம்பாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. பெண்களை நிர்வாணப்படுத்தி, நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரங்கள் நடைபெறும் தேசத்தை சர்வதேச சமூகம் எப்படிப் பார்க்கும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள். மணிப்பூர் பழங்குடிப் பெண்கள் நிர்வாணக் கொடுமை மணிப்பூரில் பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோ உலகம் முழுவதும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சம்பவத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டித்திருக்கின்றன. இந்தியாவில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. ஆனால், மணிப்பூர் வன்முறை பற்றிய விவாதம் இன்றுவரை நடைபெறவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. அவையின் அனைத்து அலுவல்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு, மணிப்பூர் பிரச்னையைப் பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. மணிப்பூர் உட்பட பிற மாநிலங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்கலாம் என்று ஆளும் பா.ஜ.க கூறுகிறது. அதனால், மணிப்பூர் பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை. ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றிருக்கிறது. ரிஷி சுனக் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான சிறப்புத் தூதர் ஃபியோனா புரூஸ் எம்.பி., மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசினார். அப்போது, ‘மணிப்பூர் வன்முறை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று. மணிப்பூரில் நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து வெளியேறியிருக்கிறார்கள். பள்ளிகளும் சர்ச்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றன. இதில், மதம் ஒரு முக்கியக் காரணம்’ என்று அவர் பேசியிருக்கிறார். அந்த விவாதத்தின்போது, மணிப்பூர் வன்முறை மட்டுமன்றி, இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து எம்.பி-க்கள் கவலை தெரிவித்தனர். பியரே லரடோரு என்ற எம்.பி பேசியபோது, பிரதமர் மோடியையும், 2014-ம் ஆண்டிலிருந்து பா.ஜ.க அரசு கடைப்பிடித்துவரும் கொள்கைகளையும் விமர்சித்தார். அவர், ‘அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களைக் குற்றவாளிகள் என்று பார்க்கக் கூடாது. ஜனநாயகச் செயல்பாடுகளை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று யாரும் கூறவில்லை. அது ஒரு பெரிய ஜனநாயக நாடு. ஆனால், அது சிறந்த ஜனநாயகமாக இருக்க வேண்டும்’ என்றார். ‘மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க, அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்களைக் கடைப்பிடிக்கவேண்டிய கடமை இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு’ என்று ஸ்வென் சிமோன் என்ற எம்.பி பேசினார். ‘இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சுருங்கிவருகிறது’ என்று அல்வினா அலமெட்சா என்ற எம்.பி விமர்சித்தார். அவர், ‘இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம் குறைந்திருக்கிறது. பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். பாகுபாடும் வெறுப்பும் அதிகரித்திருக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது இவற்றையெல்லாம் நேரிலேயே கண்டேன்’ என்றார்.மணிப்பூர் மணிப்பூரில் மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானமும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வன்முறை நடக்கும் பகுதிகளுக்கு பத்திரிகையாளர்களும், சர்வதேசப் பார்வையாளர்களும் சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்... இணைய சேவைக்கான தடை நீக்கப்பட வேண்டும்... சட்டவிரோத ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும்’ என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்க தயங்குகிறதா பாஜக?! ‘பிரிட்டனின் இந்தச் செயலை ஏற்க முடியாது’ என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான அரிந்தம் பக்சி கூறியிருக்கிறார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் குறித்தும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் கருத்து தெரிவித்த அரிந்தம் பாக்சி, ‘மணிப்பூர் நிலைமையைச் சரிசெய்யவும், அமைதியையும், நல்லிணக்கத்தையும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பிரிட்டன் தனது உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தட்டும்’ என்றும் கூறியிருக்கிறார். பிரிட்டன் மட்டுமல்ல, மணிப்பூர் சம்பவத்துக்கு அமெரிக்காவும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. மணிப்பூரில் பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், ‘கொடூரமானது’, ‘பயங்கரமானது’ என்று அமெரிக்கா குறிப்பிட்டிருக்கிறது.ஜோ பைடன் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகள் தொடர்பாகச் செயல்பட்டுவரும் அமைப்புகள் மணிப்பூர் வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. பி.பி.சி., அல்ஜசீரா, தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் உட்பட பல சர்வதேசச் செய்தி நிறுவனங்கள் மணிப்பூர் வன்முறை குறித்துச் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. ‘இனக்கலவரத்தின்போது பாலியல் வன்கொடுமை ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது மணிப்பூர் வீடியோவின் மூலம் தெரியவருகிறது’ என்று பி.பி.சி குறிப்பிட்டிருக்கிறது. அந்தக் கொடூர வீடியோ வெளியான பிறகே, மணிப்பூர் வன்முறை குறித்து முதன்முறையாக பிரதமர் மோடி வாய் திறந்ததைக் குறிப்பிட்டு, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன!
http://dlvr.it/Ssl3hz

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...