Skip to main content

மணிப்பூர் சம்பவத்தை வெளிநாடுகளும், சர்வதேச ஊடகங்களும் எப்படிப் பார்க்கின்றன?!

‘உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது’ என்று பா.ஜ.க-வின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். `மணிப்பூர் பிரச்னையால் இந்தியாவின் மதிப்பு சர்வதேச அரங்கில் தாழ்ந்திருக்கும் நேரத்தில், யதார்த்த நிலைக்குப் புறம்பாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. பெண்களை நிர்வாணப்படுத்தி, நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரங்கள் நடைபெறும் தேசத்தை சர்வதேச சமூகம் எப்படிப் பார்க்கும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள். மணிப்பூர் பழங்குடிப் பெண்கள் நிர்வாணக் கொடுமை மணிப்பூரில் பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோ உலகம் முழுவதும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சம்பவத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டித்திருக்கின்றன. இந்தியாவில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. ஆனால், மணிப்பூர் வன்முறை பற்றிய விவாதம் இன்றுவரை நடைபெறவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. அவையின் அனைத்து அலுவல்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு, மணிப்பூர் பிரச்னையைப் பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. மணிப்பூர் உட்பட பிற மாநிலங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்கலாம் என்று ஆளும் பா.ஜ.க கூறுகிறது. அதனால், மணிப்பூர் பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை. ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றிருக்கிறது. ரிஷி சுனக் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான சிறப்புத் தூதர் ஃபியோனா புரூஸ் எம்.பி., மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசினார். அப்போது, ‘மணிப்பூர் வன்முறை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று. மணிப்பூரில் நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து வெளியேறியிருக்கிறார்கள். பள்ளிகளும் சர்ச்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றன. இதில், மதம் ஒரு முக்கியக் காரணம்’ என்று அவர் பேசியிருக்கிறார். அந்த விவாதத்தின்போது, மணிப்பூர் வன்முறை மட்டுமன்றி, இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து எம்.பி-க்கள் கவலை தெரிவித்தனர். பியரே லரடோரு என்ற எம்.பி பேசியபோது, பிரதமர் மோடியையும், 2014-ம் ஆண்டிலிருந்து பா.ஜ.க அரசு கடைப்பிடித்துவரும் கொள்கைகளையும் விமர்சித்தார். அவர், ‘அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களைக் குற்றவாளிகள் என்று பார்க்கக் கூடாது. ஜனநாயகச் செயல்பாடுகளை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று யாரும் கூறவில்லை. அது ஒரு பெரிய ஜனநாயக நாடு. ஆனால், அது சிறந்த ஜனநாயகமாக இருக்க வேண்டும்’ என்றார். ‘மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க, அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்களைக் கடைப்பிடிக்கவேண்டிய கடமை இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு’ என்று ஸ்வென் சிமோன் என்ற எம்.பி பேசினார். ‘இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சுருங்கிவருகிறது’ என்று அல்வினா அலமெட்சா என்ற எம்.பி விமர்சித்தார். அவர், ‘இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம் குறைந்திருக்கிறது. பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். பாகுபாடும் வெறுப்பும் அதிகரித்திருக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது இவற்றையெல்லாம் நேரிலேயே கண்டேன்’ என்றார்.மணிப்பூர் மணிப்பூரில் மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானமும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வன்முறை நடக்கும் பகுதிகளுக்கு பத்திரிகையாளர்களும், சர்வதேசப் பார்வையாளர்களும் சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்... இணைய சேவைக்கான தடை நீக்கப்பட வேண்டும்... சட்டவிரோத ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும்’ என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்க தயங்குகிறதா பாஜக?! ‘பிரிட்டனின் இந்தச் செயலை ஏற்க முடியாது’ என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான அரிந்தம் பக்சி கூறியிருக்கிறார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் குறித்தும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் கருத்து தெரிவித்த அரிந்தம் பாக்சி, ‘மணிப்பூர் நிலைமையைச் சரிசெய்யவும், அமைதியையும், நல்லிணக்கத்தையும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பிரிட்டன் தனது உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தட்டும்’ என்றும் கூறியிருக்கிறார். பிரிட்டன் மட்டுமல்ல, மணிப்பூர் சம்பவத்துக்கு அமெரிக்காவும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. மணிப்பூரில் பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், ‘கொடூரமானது’, ‘பயங்கரமானது’ என்று அமெரிக்கா குறிப்பிட்டிருக்கிறது.ஜோ பைடன் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகள் தொடர்பாகச் செயல்பட்டுவரும் அமைப்புகள் மணிப்பூர் வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. பி.பி.சி., அல்ஜசீரா, தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் உட்பட பல சர்வதேசச் செய்தி நிறுவனங்கள் மணிப்பூர் வன்முறை குறித்துச் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. ‘இனக்கலவரத்தின்போது பாலியல் வன்கொடுமை ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது மணிப்பூர் வீடியோவின் மூலம் தெரியவருகிறது’ என்று பி.பி.சி குறிப்பிட்டிருக்கிறது. அந்தக் கொடூர வீடியோ வெளியான பிறகே, மணிப்பூர் வன்முறை குறித்து முதன்முறையாக பிரதமர் மோடி வாய் திறந்ததைக் குறிப்பிட்டு, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன!
http://dlvr.it/Ssl3hz

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...