Skip to main content

``புலியைப் பார்த்து நாய் சூடுபோட்டுக்கொண்டதுபோல எதிர்க்கட்சிகள் கூட்டணி" - அண்ணாமலை சாடல்

தி.மு.க அரசு ஆட்சி அமைத்து 27 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், காரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.அண்ணாமலை - முதல்வர் ஸ்டாலின் அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகம் முழுவதும் லஞ்சம், விலைவாசி உயர்வு, கனிமவளக் கொள்ளை, பெண்களுக்கான பாதுகாப்பின்மை, டாஸ்மாக் முறைப்படுத்தாமை, மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் வாய்திறக்காதது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியில் மீதமிருக்கும் நாள்களில் இவற்றைச் சரிசெய்வார்கள் என நம்புகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மின் கட்டணம் 3 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடியை எதிர்ப்பது மட்டுமே முதல்வர் ஸ்டாலினின் முக்கியப் பணியாக இருக்கிறது. மணிப்பூர் விவகாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த முதல்வர் திடீரென விழித்திருக்கிறார். தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் முடிந்து 210 நாள்கள் கடந்திருக்கின்றன. இன்னும் அதில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் பா.ஜ.க தொண்டரைக் காலில் விழவைத்திருக்கிறார் தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர். எனவே, மணிப்பூர் விவகாரத்தில் முதல்வர் அரசியல்வாதியாகச் செயல்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.முதல்வர் ஸ்டாலின் மணிப்பூரில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை மத்திய அரசும், மணிப்பூர் மாநில அரசு சேர்ந்து சரி செய்வார்கள். இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட செய்தி பாதைபதைப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பாகவும் மணிப்பூர் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை 6 பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள். மணிப்பூரின் கடந்த காலம்கூட எப்போதும் கொந்தளிப்பானதுதான். 2014-க்குப் பிறகுதான் அமைதியை நோக்கி மணிப்பூர் நகர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்பால் தற்போது அங்கே கலவரம் வெடித்திருக்கிறது. எனவே முதல்வர் முழு நேர அரசியல்வாதியாகத்தான் மணிப்பூர் விவகாரத்தில் செயல்படுகிறார். கெலோ இந்தியாவை ஆரம்பித்த மத்திய அரசுக்கு மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு எப்படி பயிற்சியளிக்க வேண்டும் என்பது தெரியும். எனவே மணிப்பூர் விவகாரத்துக்குச் செல்லாமல், கர்நாடகாவிலிருந்து தண்ணீர் பெற்றுத்தரும் வழியை முதல்வர் செய்யலாம். தமிழகம் தேசவிரோதிகளின் புகழிடமாக மாறியிருக்கிறது. தொடந்து என்.ஐ.ஏ சோதனை நடந்துவருகிறது.மணிப்பூர் பழங்குடிப் பெண்கள் நிர்வாணக் கொடுமை காவல்துறையின் கை கட்டப்பட்டிருப்பதால் தமிழகம் தேசவிரோதிகளின் புகழிடமாகிவருகிறது. தெலங்கானா, கேரளா, தமிழகத்தில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அந்தந்த மாநில மக்களிடம் அதிகம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அவர் எங்கு போட்டியிடுவார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தியா என்று சொல்லும்போது உள்ளத்தில், உணர்வில், ரத்தத்தில், நாடி நரம்புகளில் `இந்தியன்' என்ற உணர்விருக்க வேண்டும். தி.மு.க பிரிவினைவாதக் கட்சி. காஷ்மீரின் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா போன்றோர் இந்தியாவுடன் சேரமாட்டோம் என்ற கருத்தால் 370 நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரும் ஓர் அறையில் அமர்ந்து தங்கள் கூட்டணிக்கு `இந்தியா' எனப் பெயர் வைத்துக்கொண்டால் அதை மக்கள் எப்படி ஏற்பார்கள். புலியைப் பார்த்து நாய் சூடுபோட்டுக்கொண்டதுபோல எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு `இந்தியா' எனப் பெயர் வைத்திருக்கின்றன.எதிர்க்கட்சிகள் கூட்டம் எங்கள் கூட்டணியான என்.டி.ஏ-வில் பா.ஜ.க-வின் முதல்வர்கள் பங்கெடுத்தார்கள். மூன்றாவது முறையும் மோடிதான் பிரதமர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சென்று பிரதமர் மோடி தமிழகத்துக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை மக்களுக்கு விளக்கவே நடைப்பயணம்" எனத் தெரிவித்தார்.அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை இல்லை... பாவயாத்திரை! - காயத்ரி ரகுராம் ‘கலாய்’
http://dlvr.it/SsdV8p

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...