Skip to main content

அறிகுறியற்ற ரத்தச்சர்க்கரை குறைவு... குழந்தைகளையும் பாதிக்குமா? பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 31

‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.

மருத்துவர் மு. ஜெயராஜ்

கடந்த அத்தியாயத்தில், ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் உள்ள பச்சிளங்குழந்தைகளில் எவ்வாறு ரத்தச் சர்க்கரை குறைவு (Hypoglycemia) ஏற்படுகிறது என்பதை விரிவாகக் கண்டோம். இந்த அத்தியாயத்தில், அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.

அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள்:

29-வது அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல் ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் ஏற்படும் பச்சிளங்குழந்தைகளில், பிறந்ததில் இருந்து 2, 6, 12, 24, 48 மற்றும் 72 மணி நேரத்தில் ரத்தச் சர்க்கரை அளவினை (ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை) கண்டறிய வேண்டும். இவ்வாறு, ரத்தச் சர்க்கரை குறைவு அபாயமுள்ள பச்சிளங்குழந்தைகளில் செய்யப்படும் ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை மூலம், எவ்வித அறிகுறிகளும் தென்படுவதற்கு முன்னால் ரத்தச் சர்க்கரை குறைவு கண்டறியப்பட்டால், அதனை அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவு என்கிறோம்.

குளுக்கோஸ் மானி/ குளுக்கோமீட்டர் (Glucometer) மூலம் இவ்வாறு செய்யப்படும் ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனையில், அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவு கண்டறியப்படும்போது, ரத்தச் சர்க்கரை அளவு 20-40 mg/dL எனில், உடனடியாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

குழந்தையால் சரிவர தாய்ப்பாலை சப்பிக் குடிக்க முடியவில்லையென்றால், விரல்களால் தாய்ப்பலைப் பீய்ச்சி (expressed breast milk), பாலாடையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். ஒருவேளை, போதுமான அளவு தாய்ப்பால் வரவில்லையென்றால், பாலாடையில் பவுடர் பாலை அளிக்கலாம்.

அதன்பிறகு, ஒரு மணி நேரம் கழித்து, குழந்தையின் ரத்தச் சர்க்கரை அளவை கண்டறிய வேண்டும். மீண்டும் பார்க்கப்பட்ட ரத்தச் சர்க்கரை அளவு 40 mg/dL-க்கு மேலென்றால், அதன்பிறகு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், மற்றும் அடுத்த 48 மணிநேரத்திற்கு, 6 மணிநேரத்திற்கு ஒரு முறையென ரத்தச் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். மாறாக மீண்டும் கண்டறியப்பட்ட ரத்தச் சர்க்கரையின் அளவு 40 mg/dL-க்கு கீழ் என்றால், ரத்த நாளத்தின் வழியாக குளுக்கோஸ் (IV Dextrose)-ஐ மருத்துவர் தொடங்குவார்.

மாறாக, முதன்முதலில் கண்டறியப்பட்ட ரத்தச் சர்க்கரையின் அளவு 20 mg/dL-க்கு கீழ் இருந்தால், நேரடியாக ரத்த நாளத்தின் வழியாக குளுக்கோஸ் கொடுக்கத் தொடங்குவோம். அதன் பிறகு, 30 நிமிடங்கள் கழித்து, மீண்டும் ரத்தச் சர்க்கரையின் அளவு கண்டறியப்படும்; சரியாக இருக்கும்பட்சத்தில், 6 மணிநேரத்திற்கு ஒருமுறையென ரத்தச் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.

தாய்ப்பால் - பச்சிளம் குழந்தை பராமரிப்பு

மீண்டும் சரிபார்க்கப்பட்ட ரத்தச் சர்க்கரை அளவுகள் சரியாக இருக்கிறதென்றால், 24 மணிநேரத்திற்குப் பிறகு 6 மணிநேரத்திற்கு ஒருமுறையென ரத்த நாளத்தின் வழியாக கொடுக்கப்படும் குளுக்கோஸின் அளவு குறைக்கப்பட்டு, பின்பு முழுவதுமாக நிறுத்தப்படும். 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்வது மிக முக்கியமாகும்.

வரும் அத்தியாயத்தில், பச்சிளம் குழந்தைகளுக்கு, அறிகுறியுடன் கூடிய ரத்தச் சர்க்கரை குறைவிற்கான சிகிச்சை முறைகள் பற்றி பார்க்கலாம்.

பராமரிப்போம்...


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...