Skip to main content

மனநல மருத்துவமனைகள்... குணமடைந்தும் வீடு திரும்ப வழியின்றி நாடு முழுக்க 2000 பேர்!

நாடு முழுவதும் பல மனநல மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் உறவினர்களால் சேர்க்கப்படும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் நாளடைவில் குணமடைந்த பிறகும், அவர்கள் தங்களது வீட்டிற்குத் திரும்ப முடியாமல் போய்விடுகிறது. அவர்களை உறவினர்களே கைவிட்டு விடுகின்றனர். இதுபற்றி அவ்வப்போது பேசப்படுவதுண்டு.

இந்நிலையில், டெல்லியில் மனநலம் குறித்த தேசிய மாநாடு நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான அருண் குமார் மிஸ்ரா, மனநல நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகும் கைவிடப்படும் நிலைபற்றி பேசினார்.

’’குணமடைந்த நோயாளிகள் தங்கும் இடமாக மருத்துவமனைகள் இருக்கக்கூடாது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலையில் இருந்து 2023ம் ஆண்டு ஜனவரி வரை நாடு முழுவதும் உள்ள மனநல மருத்துவமனைகளில் தேசிய மனித உரிமை கமிஷன் ஆய்வு செய்தது. இதில் குணமடைந்த நிலையில் 2000 பேர் தங்களது சொந்த ஊருக்குச் செல்லாமல் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி இருக்கின்றனர். அவர்களால் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. அவர்களில் 50 சதவிகிதம் பேர் மேற்கு வங்க மருத்துவமனைகளில் இருக்கின்றனர்.

மருத்துவமனைகள் குணமடைந்த நோயாளிகளுக்கான இடம் கிடையாது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் அனுதாபம் காட்டுவது மட்டும் போதுமானது கிடையாது. மனநிலை பாதித்தவர்களின் கண்ணியம் பாதுகாக்கப்படவேண்டும். பத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பல்வேறு விதமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனநோயை சரி செய்ய இரக்கத்தை வரவழைக்கும் உரையாடல்கள் அவசியம்’’ என்று குறிப்பிட்டார்.

மனித உரிமை கமிஷன் ஆரம்பத்தில் குவாலியர், ராஞ்சி, ஆக்ரா மனநல மருத்துவமனைகளை ஆய்வு செய்தது. அதில் கிடைத்த அறிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் இருக்கும் 47 மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்பட்டதாக மனித உரிமை கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பேசிய அமைச்சர் பிரவின் பவார், மனநல பிரச்னையை பொது சுகாதார பிரச்னையாக கருதி அதனை சரி செய்வதில் அரசு வேகமாகச் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மனநலம் பாதிப்பு

மும்பையின் புறநகர் பகுதியான தானேயில் மனநல மருத்துவமனை இருக்கிறது. இம்மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் கொண்டு வந்துவிட்டு விட்டு சென்று விடுகின்றனர். அதன் பிறகு அவர்கள் வந்து பார்ப்பதோ, நிதியுதவி செய்வதோ கிடையாது. அதோடு குணமடைந்துவிட்டதாக தகவல் கொடுத்தாலும் வந்து அழைத்து செல்வதில்லை என்று மனநல மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...