Skip to main content

Dr.B.R. Ambedkar Way... நியூயார்க் நகர தெருவிற்கு அம்பேத்கரின் பெயர் சூட்டும் விழா!

பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியதோடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி, உரிமைகளைப் பெற்றுக்கொடுத்த தன்னிகரற்ற தலைவர் அம்பேத்கர். அமெரிக்காவில் அவர் இருந்த காலம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் அம்பேத்கர்தான். கடந்த 1913-ம் ஆண்டு, நியூயார்க் நகரத்தில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஹெச்டி படித்துக் கொண்டிருந்தார் அம்பேத்கர். சர்வதேச அளவில் போற்றப்படக்கூடிய தலைவர்களில் அம்பேத்கர் எப்போதும் தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.டாக்டர் B.R.அம்பேத்கர் வழி பெயர் சூட்டல் நிகழ்ச்சி! இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 61 தெரு மற்றும் பிராட்வே சாலைக்கு `டாக்டர் B.R. அம்பேத்கர் சாலை’ (Dr.B.R.Ambedkar Way) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயரிடும் நிகழ்ச்சி, ஜூன் 26 திங்களன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிரேஸ் மெங், மாநில செனட்டர் மைக்கேல் கியானரிஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டீவன் ராகா, கவுன்சில்வுமன் ஜூலி வோன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  நியூயார்க்கில் உள்ள இந்தியாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த விழாவின் படங்களைப் பகிர்ந்து, "இந்திய அரசியலமைப்பின் சிற்பிக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளது.  In partnership with Shri Guru Ravidass Temple of NY, we co-named 61st Street and Broadway, “Dr. B.R. Ambedkar Way.” Along with @RepGraceMeng @StevenRaga @SenGianaris, today’s ceremony was attended by our hundreds of community members in #Woodside and from around the world (1/3) pic.twitter.com/bZiwUlkFIo— Council Member Julie Won (@CMJulieWon) June 25, 2023 அம்பேத்கர் வாழ்வில் சந்தித்த தீண்டாமையும், எதிரான போராட்டமும் | Ambedkar | Vikatan விழாவில் பங்கேற்ற கவுன்சில் உறுப்பினர் ஜூலி வோன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `நியூயார்க்கின் ஸ்ரீ குரு ரவிதாஸ் டெம்பிளுடன் இணைந்து நாங்கள் 61வது தெரு மற்றும் பிராட்வேக்கு `டாக்டர் B.R. அம்பேத்கர் சாலை’ என பெயரிட்டோம். இன்றைய விழாவில் உட்சைட் மற்றும் உலகெங்கிலும் உள்ள  நூற்றுக்கணக்கான எங்கள் சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்’’ என்று பதிவிட்டுள்ளார். நியூயார்க் நகரத்தில் உள்ள தெருவிற்கு அம்பேத்கரின் பெயர் சூட்டி மரியாதை செய்ததற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 
http://dlvr.it/SrS9yM

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...