Skip to main content

Doctor Vikatan: வககஙகம ஆரககயமன உணவபபழககமம மத அரநதவதன பதபபத தவரகக உதவம?

Doctor Vikatan: நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ள ஒருவருக்கு தினமும் குறிப்பிட்ட அளவு மது அருந்தும் பழக்கம் இருந்தால் அவரது ரத்தக்கொழுப்பு அளவு அதிகரிக்குமா? அசைவ உணவுகள் தவிர்த்து மதுவுடன் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்வதால் மதுவின் பாதிப்புகளைத் தவிர்க்க முடியுமா?

-inc, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி

மருத்துவர் சஃபி

மது அருந்துவது என்பதே ஆரோக்கியமற்ற பழக்கம்தான். அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஆரோக்கியமான வேறு விஷயங்களின் மூலம் ஈடுகட்டிவிட முடியும் என நினைப்பதே தவறானது.

நடைப்பயிற்சி செய்வது என்பது நிச்சயம் நல்ல விஷயம்தான். கூடவே மது அருந்துவதையும் தொடர்வதுதான் தவறானது. அரிதாக என்றோ ஒருநாள் மிதமான அளவு மது அருந்துகிறவர் என்றால் பிரச்னையில்லை. அதுவும் அந்த நபருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம்.

உங்கள் விஷயத்தில் இவையெல்லாம் இருக்கின்றனவா என பரிசோதனை செய்து பார்த்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. உடல் எடை சரியான அளவில் இருக்கிறதா என்பதும் முக்கியம். சிலருக்கு இப்படிப்பட்ட இணைநோய்கள் இருப்பதே தெரியாமலிருப்பார்கள். வேறு பிரச்னைகளுக்காக மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போதுதான் இவை இருப்பது தெரியவரும்.

காய்கறி

மது அருந்துவன் பாதிப்பைத் தவிர்க்க காய்கறிகள், பழங்கள், பருப்புகள் சாப்பிடலாமா என கேட்டிருக்கிறீர்கள்.... மது அருந்துவதே தவறானதுதான். நீங்கள் மதுப் பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டு அசைவமும் சாப்பிடலாம், பழங்கள், காய்கறிகளும் சாப்பிடலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினாலும் நீங்கள் மதுப்பழக்கத்தைக் கைவிடாத வரையில் அந்த உணவுகளால் உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...