Skip to main content

Doctor Vikatan: வககஙகம ஆரககயமன உணவபபழககமம மத அரநதவதன பதபபத தவரகக உதவம?

Doctor Vikatan: நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ள ஒருவருக்கு தினமும் குறிப்பிட்ட அளவு மது அருந்தும் பழக்கம் இருந்தால் அவரது ரத்தக்கொழுப்பு அளவு அதிகரிக்குமா? அசைவ உணவுகள் தவிர்த்து மதுவுடன் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்வதால் மதுவின் பாதிப்புகளைத் தவிர்க்க முடியுமா?

-inc, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி

மருத்துவர் சஃபி

மது அருந்துவது என்பதே ஆரோக்கியமற்ற பழக்கம்தான். அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஆரோக்கியமான வேறு விஷயங்களின் மூலம் ஈடுகட்டிவிட முடியும் என நினைப்பதே தவறானது.

நடைப்பயிற்சி செய்வது என்பது நிச்சயம் நல்ல விஷயம்தான். கூடவே மது அருந்துவதையும் தொடர்வதுதான் தவறானது. அரிதாக என்றோ ஒருநாள் மிதமான அளவு மது அருந்துகிறவர் என்றால் பிரச்னையில்லை. அதுவும் அந்த நபருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம்.

உங்கள் விஷயத்தில் இவையெல்லாம் இருக்கின்றனவா என பரிசோதனை செய்து பார்த்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. உடல் எடை சரியான அளவில் இருக்கிறதா என்பதும் முக்கியம். சிலருக்கு இப்படிப்பட்ட இணைநோய்கள் இருப்பதே தெரியாமலிருப்பார்கள். வேறு பிரச்னைகளுக்காக மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போதுதான் இவை இருப்பது தெரியவரும்.

காய்கறி

மது அருந்துவன் பாதிப்பைத் தவிர்க்க காய்கறிகள், பழங்கள், பருப்புகள் சாப்பிடலாமா என கேட்டிருக்கிறீர்கள்.... மது அருந்துவதே தவறானதுதான். நீங்கள் மதுப் பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டு அசைவமும் சாப்பிடலாம், பழங்கள், காய்கறிகளும் சாப்பிடலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினாலும் நீங்கள் மதுப்பழக்கத்தைக் கைவிடாத வரையில் அந்த உணவுகளால் உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...