Skip to main content

இநதயவல இளம வயதனரடய அதகரககம இ - சகரட பயனபட; ஆயவல அதரசசத தகவல!

இந்தியாவில் 61% இளைஞர்கள் இ - சிகரெட்டைப் பயன்படுத்துவதாகவும், அதனைப் பயன்படுத்தாதவர்கள் கூட இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது.

இ-சிகரெட் என்பது Electronic Nicotine Delivery Systems (ENDS) என்பதாகும். இதில், சிகரெட் புகையிலைக்கு மாறாக, ஆவியாகும் தன்மை கொண்ட ஒரு கரைசலில், வேதிப்பொருள்கள் மற்றும் நிக்கோடின், புரோப்பலீன் கிளைகால் உள்ளிட்ட மூலப்பொருள்களும் இருக்கும். இ - சிகரெட்டானது பேனா போன்ற பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கிறது.

e-cigarette

இந்த நிலையில், இ - சிகரெட் பயன்பாடு குறித்து, ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் 456 பேர் உட்பட சர்வதேச அளவில் 4,007 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், புகையிலை பயன்பாட்டிற்குப் பிறகு, இ - சிகரெட் இரண்டாவது பெரிய பாதிப்பை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்த இ - சிகரெட்டை பயன்படுத்துபவர்களில் 61% பேர், 15 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள். மேலும் இ - சிகரெட் பயன்படுத்துவோரால், அதனை பயன்படுத்தாதவர்கள் கூட எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றின்படி, இளைஞர்கள் பயன்படுத்தும் இத்தகைய இ - சிகரெட்டால் எளிதில் பாதிக்கப்படுவது, அதிகளவில் பொதுமக்கள்தான். இதில் வெளிப்படும் நிக்கோடின், வளரும் மூளையையும் வெகுவாக பாதிக்கின்றது.

WHO உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் இ - சிகரெட்டைப் பயன்படுத்தாதவர்களிடம் மேற்கொண்ட சர்வேயில், 51% பேர் இதை பயன்படுத்த ஆர்வமாக இருப்பதாகவும், 49% பேர் நண்பர் வழங்குவதால் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். நம் நாட்டைப் பொறுத்தவரை, ஆய்வில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (47%) இ - சிகரெட் பற்றி விளம்பரம் பார்த்து தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளனர். இந்த ஆய்வில் பதிலளித்த இந்தியர்களில் அதிகமானோர் உயர்கல்வி பெற்றவர்கள் மற்றும் அதிக வருமானம் கொண்டவர்கள்.

இ - சிகரெட்டை ஏற்கெனவே அமெரிக்காவின் மிச்சிகன் மற்றும் நியூயார்க் நகரங்கள் தடை செய்துள்ளன. இந்தியாவில் இ - சிகரெட் பயன்படுத்துபவர்களை அதன் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க, இ - சிகரெட் (உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம்) தடைச் சட்டம், 2019-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய மத்திய அரசு பல முயற்சிகளை செய்து வந்தாலும், இ - சிகரெட்டுகளை சில்லறை விற்பனையாளர்களிடம் அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் பயனாளர்கள்.

e-cigarette

இந்தியாவின் புகையிலைச் சந்தையானது உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, இந்திய மக்கள் தொகையில் சுமார் 27% பேர் புகையிலையை ஏதோ ஒரு வகையில் பயன்படுத்துகின்றனர்.

எனினும், இ - சிகரெட் விளம்பரங்களை முழுமையாகத் தடை செய்வதோடு, அதன் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பல முயற்சிகளை எடுத்துள்ளனர். ``இந்தியாவில் இளைஞர்கள் இ - சிகரெட்டை அதிகம் பயன்படுத்தி வருவதால் ஏற்படும் தாக்கங்களை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...