Skip to main content

இநதயவல இளம வயதனரடய அதகரககம இ - சகரட பயனபட; ஆயவல அதரசசத தகவல!

இந்தியாவில் 61% இளைஞர்கள் இ - சிகரெட்டைப் பயன்படுத்துவதாகவும், அதனைப் பயன்படுத்தாதவர்கள் கூட இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது.

இ-சிகரெட் என்பது Electronic Nicotine Delivery Systems (ENDS) என்பதாகும். இதில், சிகரெட் புகையிலைக்கு மாறாக, ஆவியாகும் தன்மை கொண்ட ஒரு கரைசலில், வேதிப்பொருள்கள் மற்றும் நிக்கோடின், புரோப்பலீன் கிளைகால் உள்ளிட்ட மூலப்பொருள்களும் இருக்கும். இ - சிகரெட்டானது பேனா போன்ற பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கிறது.

e-cigarette

இந்த நிலையில், இ - சிகரெட் பயன்பாடு குறித்து, ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் 456 பேர் உட்பட சர்வதேச அளவில் 4,007 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், புகையிலை பயன்பாட்டிற்குப் பிறகு, இ - சிகரெட் இரண்டாவது பெரிய பாதிப்பை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்த இ - சிகரெட்டை பயன்படுத்துபவர்களில் 61% பேர், 15 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள். மேலும் இ - சிகரெட் பயன்படுத்துவோரால், அதனை பயன்படுத்தாதவர்கள் கூட எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றின்படி, இளைஞர்கள் பயன்படுத்தும் இத்தகைய இ - சிகரெட்டால் எளிதில் பாதிக்கப்படுவது, அதிகளவில் பொதுமக்கள்தான். இதில் வெளிப்படும் நிக்கோடின், வளரும் மூளையையும் வெகுவாக பாதிக்கின்றது.

WHO உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் இ - சிகரெட்டைப் பயன்படுத்தாதவர்களிடம் மேற்கொண்ட சர்வேயில், 51% பேர் இதை பயன்படுத்த ஆர்வமாக இருப்பதாகவும், 49% பேர் நண்பர் வழங்குவதால் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். நம் நாட்டைப் பொறுத்தவரை, ஆய்வில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (47%) இ - சிகரெட் பற்றி விளம்பரம் பார்த்து தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளனர். இந்த ஆய்வில் பதிலளித்த இந்தியர்களில் அதிகமானோர் உயர்கல்வி பெற்றவர்கள் மற்றும் அதிக வருமானம் கொண்டவர்கள்.

இ - சிகரெட்டை ஏற்கெனவே அமெரிக்காவின் மிச்சிகன் மற்றும் நியூயார்க் நகரங்கள் தடை செய்துள்ளன. இந்தியாவில் இ - சிகரெட் பயன்படுத்துபவர்களை அதன் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க, இ - சிகரெட் (உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம்) தடைச் சட்டம், 2019-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய மத்திய அரசு பல முயற்சிகளை செய்து வந்தாலும், இ - சிகரெட்டுகளை சில்லறை விற்பனையாளர்களிடம் அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் பயனாளர்கள்.

e-cigarette

இந்தியாவின் புகையிலைச் சந்தையானது உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, இந்திய மக்கள் தொகையில் சுமார் 27% பேர் புகையிலையை ஏதோ ஒரு வகையில் பயன்படுத்துகின்றனர்.

எனினும், இ - சிகரெட் விளம்பரங்களை முழுமையாகத் தடை செய்வதோடு, அதன் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பல முயற்சிகளை எடுத்துள்ளனர். ``இந்தியாவில் இளைஞர்கள் இ - சிகரெட்டை அதிகம் பயன்படுத்தி வருவதால் ஏற்படும் தாக்கங்களை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...